முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை I நியமனம் 2011-12ஆம் கல்வி ஆண்டிற்கான போட்டி எழுத்துத் தேர்வுமூலம் தகுதிபெற்ற பணிநாடுநர்கள் தமது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதாக முன்னுரிமை கோரியவர்கள் 03.08.2012 மற்றும் 30.10.2012 தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் தமிழ்வழிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்திற்காக அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பின்போது எஸ்.எஸ்.எல்.சி, மேல்நிலைக்கல்வி, இளநிலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர்கல்வி பட்டம் முதலானவற்றை முற்றிலும் தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்களை பெரும்பாலான பணிநாடுநர்கள் சமர்ப்பிக்கவில்லை. உரிய சான்றிதழ்கள் சமர்பிக்காததால் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் தமிழ்வழி முன்னுரிமைப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்ப இயலவில்லை.

பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். வார வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகளான, ஜஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்விஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலை, பிரதான நிலை, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளை கொண்டது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கினங்க விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழை இணைக்கத் தேவையில்லை என்று அண்ணா பல்கலைக்கழக தாற்காலிக துணைவேந்தர் பி.காளிராஜ் கூறினார்.பி.இ. கலந்தாய்வின்போது மாற்றுச்சான்றிதழ் மற்றும் பிற அசல் சான்றிதழ்களைக் கொண்டுவந்தால் போதுமானது என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பி.இ. விண்ணப்பத்தில் கோரியுள்ள சான்றிதழ்கள் அனைத்தையும் கேட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள் குவிந்துள்ளதாகத் தெரிகிறது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 16.12.2012 அன்று நடைபெற்ற சமூக நலத்துறையில் பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) பதவிக்கான 3 காலிப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 9 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்–1 முதல்நிலை தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

# தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்   செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண்  183 /ஏ1/இ2/2013 நாள்:11 .05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .

DTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான இரண்டாமாண்டு தேர்வு 24 .06.2013 திங்கட்கிழமையும், முதலாமாண்டுத் தேர்வு 04.07.2013 வியாழக்கிழமையும் தொடங்கி கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading