நடப்பு நிகழ்வுகள் | ஜூலை 24- 30
* ஐகோர்ட்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திய 105 வக்கீல்களை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. (ஜூலை 24)
* பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே நேபாள பிரதமர் கே.பி. ஒளி திடீரென ராஜினாமா செய்தார். (ஜூலை 24)
* காஷ்மீரில் வன்முறைக்குப் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்த நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டது. (ஜூலை 24)