Thursday, June 10, 2021

GS-22-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | 1857 - பெருங்கலகம் - ஒரு வரி வினா விடை

  • 1857 ஆம் ஆண்டு கலகத்தை இராணுவ புரட்சி என்று கூறியவர் - சர் ஜான் லாரன்ஸ்.
  • 1857 ஆம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போர் என்று கூறியவர் - வீர சவார்க்கர்
  • 1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி - S.N.சென்.
  • 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும் பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்று A.C மஜூம்தார் வர்ணித்தார்.
  • ஆங்கில வரலாற்று அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு பெருங்கலத்தை சிப்பாய் கலகம் (படைவீரர் கிளர்ச்சி) என்று அழைத்தனர்.
  • இந்திய வரலாற்று அறிஞர்கள் 1857 பெருங்கலத்தை எவ்வாறு அழைத்தனர் - முதல் இந்திய சுதந்திரப்போர்.
  • 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது இந்தியாவின் தலைமை ஆளுநர் - கானிங் பிரபு.
  • 1856 ஆம் ஆண்டு பொதுப்பணி படைச் சட்டம் யார் கொண்டு வந்தார் - கானிங் பிரபு.
  • 1857 பெருங்கலத்தின் முன்னோடியாக இருந்தது - வேலூர் கலகம் 1806.
  • 1857 கலகத்திற்கு உடனடி காரணம் - என்பீல்டு ரக துப்பாக்கிகளில் பயன்படுத்த கொழுப்பு தடவிய தோட்டாக்கள் அறிமுகப்படுத்துதல்.
  • என்பீல்டு ரக துப்பாக்கியில் என்ன கொழுப்பு இருந்தது - பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு.
  • பாரக்பூரில் எப்போது யார் கலகத்தை வெடித்தவர் - 1857 மார்ச் 29 - மங்கள் பாண்டே.
  • பாரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாவை பயன்படுத்த மறுத்தவர் யார் - 34 வது காலாட்படை பிரிவை சார்ந்த மங்கள் பாண்டே.
  • 1857 பெருங்கலகம் மீரட்டில் எப்போது வெடித்தது - 1857 மே 10.
  • படைவீரர்கள் மீரட்டிலிருந்து எங்கு சென்றனர் - டெல்லி.
  • பெருங்கலக கிளர்ச்சியாளர்கள் டெல்லியை எப்போது கைப்பற்றினர் - 1857 மே 12.
  • சிப்பாய்கள் 1857 ஆம் பெருங்கலகத்திற்கு யாரை தலைவராக்கினார்கள் - கடைசி முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா.
  • 1857 ஆம் ஆண்டு டெல்லியில் யார் தலைமை தாங்கி நடத்தினார் - பகத்கான்.
  • முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது எங்கு நாடு கடத்தப்பட்டார் - ரங்கூன் .
  • முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா எங்கு எப்போது இறந்தார் - ரங்கூன் 1862.
  • ஆங்கிலேயர் யார் தலைமையில் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார் - சர் ஜான் நீக்கல் சன்.
  • கான்பூரில் 1857 ஆம் ஆண்டு கலகம் யார் தலைமையில் நடைபெற்றது -நானாசாகிப்.
  • கான்பூரில் நானாசாகிப்புக்கு பக்கபலமாக இருந்தவர்கள் - தாந்தியா தோப், அசிமுல்லா.
  • 1857 ஆம் ஆண்டு கலகத்தை கான்பூரில் ஆங்கிலேயர் யார் தலைமையில் மீண்டும் மீட்டனர் - கர்னல் ஹாவ்லாக் மற்றும் ஓநெயில்.
  • 1857 ஆம் ஆண்டு பெருங்கலம் லக்னோவில் யார் தலைமையில் நடைப்பெற்றது - அயோத்தி பேகம் ஹஷ்ரத்மகால்.
  • 1857 ஆம் ஆண்டு கலகத்தில் லக்னோவை ஆங்கிலேயர் யார் தலைமையில் மீட்டனர் - சர் காலின் காம்பெல்.
  • 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு இராணி லட்சுமிபாய் எங்கு தலைமை தாங்கினார் - மத்திய இந்தியா (ஜான்சி).
  • இராணி லட்சுமிபாய் யாருடன் சேர்ந்து பெரும் கலகத்தில் ஈடுபட்டார் - தாந்தியா தோப்
  • இராணி லட்சுமிபாய் ஏன் கலகத்தில் ஈடுபட்டார் - டல்ஹௌவுசியின் வாரிசு இழப்பு கொள்கை காரணமாக.
  • இராணி லட்சுமிபாய் கலகத்தில் எப்போது வீர மணமடைந்தார் - 1858 ஆம் ஆண்டு ஜூன் 17.
  • 1857 ஆம் கலகத்தின் போது தாந்தியா தோப் ஏன் தூக்கிலிடப்பட்டார் - கிளர்ச்சி மற்றும் கான்பூர் படுகொலை.
  • 1857 ஆம் கலகத்தை ஜான்சியில் ஆங்கிலேயர் யார் தலைமையில் அடக்கினார்கள் -1858 சர் ஹக்ரோஸ்.
  • 1857 ஆம் கலகத்திற்கு பீகாரில் தலைமை தாங்கியவர் யார் - கன்வர்சிங்.
  • 1857 ஆம் கலகத்தின் முக்கிய சிறப்பம்சம் - இந்து, முஸ்லீம் ஒற்றுமை.
  • எதன் விளைவாக கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது - 1857 ஆம் பெருங்கலகம்.
  • பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி எப்போது நடைமுறைக்கு வந்தது - 1858 ஆம் ஆண்டு நவம்பர் 1.
  • விக்டோரியா மகாராணி பேரறிக்கை எங்கு எப்போது வெளியிடப்பட்டது - 1858 ஆம் ஆண்டு நவம்பர் 1 (அலகாபாத்).
  • விக்டோரியா மகாராணி பேரறிக்கையை யார் வாசித்தார் - கானிங் பிரபு.
  • இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் - கானிங் பிரபு.
  • முதல் அரசுப் பிரதி (வைசிராய்) யார் - கானிங் பிரபு.
  • இந்திய மக்களின் மேக்னா கார்ட்டா (உரிமை சாசனம்) என்று அழைக்கப்படுவது - விக்டோரியா மகாராணி அறிக்கை.
  • துணைப்படைத் திட்டத்தை கொண்டு வந்தவர் (1798) - வெல்லெஸ்லி பிரபு.
  • நாடிழக்கும் கொள்கையை கொண்டு வந்தவர் (1848) - டல்ஹௌசி .
  • நானா சாகிப் என்பவர் யார் - பீஷ்வா 2ம் பாஜிரா வளர்ப்பு மகன் 1857ம் கலகத்திற்கு கான்பூரில் தலைமை தாங்கியவர்.
  • நானா சாகிப் படை தளபதி யார் - தாந்தியா தோப்.
  • மங்கள் பாண்டே எப்போது தூக்கிலிடப்பட்டார் - ஏப்ரல் 8, 1857.
  • டல்ஹௌசி வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைந்த நாடுகள் - சதாரா, நாக்பூர், ஜான்சி.
  • முகலாய பேரரசின் கடைசி பேரரசர் - 2 ஆம் பகதூர்ஷா.
  • இராணுவத்தில் இந்தியப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவி - சுபேதார்.
  • மங்கள் பான்டே தூக்கிலிடப்பட்ட பின் பாரக்பூரிலிருந்த காலாட்படை எங்கு மாற்றப்பட்டது - மீரட்.
  • 1857 ஆம் ஆண்டு கலகம் முதன் முறையாக எங்கு வெடித்தது - வங்காளம் - பாரக்பூர்.
  • 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது நானாசாகிப் எங்கு தப்பி ஓடினார் - நேபாளம்.
  • பீகாரில் கன்வர்சிங்கிற்கு பின் யார் தலைமை தாங்கினார் - அமர்சிங் (கன்வர் சிங் சகோதரர்).
  • 1858 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின் படி எந்த குழு கலைக்கப்பட்டன - கட்டுப்பாட்டுக்குழு, இயக்குநர் குழு.

What's App share  | Telegram Share

GS-21-INDIAN NATIONAL MOVEMENT | 1857 - பெருங்கலகம் - ஒரு வரி வினா விடை

No comments:

Popular Posts