கடிகை - துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
நான்மணிகள் முத்து பவளம் மரகதம்,மாணிக்கம்.
கடவுள் வாழ்த்து :
முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.
பொதுவான குறிப்புகள் :
ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
ஜி.யு.போப் இந்நூலின் 7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
இந்நூலின் மிகப் பிரபலமான அடி - “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”.
கீழ்கணக்கு நூல்களில் 2 கடவுள் வாழ்த்து கொண்ட ஓரே நூல் காலம் நூற்றாண்டு என டி.வி. சதாசிவ பண்டாரத்தார் கருத்து. பழைய உரையாசிரியர் பேராசிரியர், நச்சினார்கினியார்.
உரையாசிரியர் பாலசுந்தரம் பிள்ளை.
முக்கிய அடிகள் :
யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி.
இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக.
தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க, வெல்வது வேண்டின் வெகுளிவிடல்.
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்.
வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்.
ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்.
கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்.
மனைக்கு விளக்கம் மடவாள், மடவாளுக்கு விளக்கம் புதல்வர், புதல்வர்க்கு விளக்கம் கல்வி, கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு.
No comments:
Post a Comment