சிறுபாணாற்றுபடையை காட்டிலும் அதிக அடிகளைப் பெற்றிருப்பதாலும் இது பெரும்பாணாற்றுப்படை ஆயிற்று.
புலவர் தலைவன் :
பாடிய புலவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாட்டுடைத் தலைவன் - தொண்டைமான் இளந்திரையன்
வேறு பெயர்கள் :
பாணாறு
சமுதாயப் பாட்டு
தொண்டைமான் :
சோழன் ஒருவனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்தவன் என நச்சினார்கினியர் கூறுகிறார்.
சோழன் நெடுமுடிக்கிள்ளிக்கும் நாக நாட்டரசன் மகள் பீலவள்ளிக்கும் பிறந்தவன் தொண்டைமான் என்கிறது மணிமேகலை.
துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும், மதனி என்கிற அரக்கன் மகளுக்கும் பிறந்த பல்லவ மன்னனே தொடைமான் என்கிறார் இராகவையங்கார்
பொதுவான் குறிப்புகள் :
நீர்ப்பெயற்று என்னும் ஊரின் பழம் பெயர் “நீர்ப்பாயல்துறை”.
இங்கு மிகப்பெரிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
தொண்டைமானின் தலைநகரம் திருவெகஃகா.
திருவெகஃகா என்பது காஞ்சிபுரம்
யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.
நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது.
இப்பாடலில் ஐந்திணை பற்றியும் அதன் மக்களான வேடர் எயினர் மறவர் உழவர் பரதவர் ஆயர் ஆகியோர் வாழ்க்கை பற்றி கூறுகிறது பெரியாழ் 21 நரம்புகள் பாணாறு சமுதாய பாட்டு என சிறப்பு பெயர் பெற்றது இடம்பெற்ற சொல் பார்
No comments:
Post a Comment