பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80.
பாவகை = வெண்பா.
உரையாசிரியர்= பாலசுந்தரம்பிள்ளை.
பெயர்க்காரணம் :
ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்றுஇந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள் :
இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலைநூற்றைம்பது.
உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்.
கனி மேதாவி என்ற சொல் இவர் சோதிடத்தில் வல்லவர் என்பதை உணர்த்துகிறது.
இந்நூல் மகடூஉ முன்னிலை அமைப்பை கொண்டது.
தமிழுக்கு அருமருந்து போன்ற இலக்கியம்.
அருகன் வணக்கம் சொல்லி நூலை தொடங்குவதால் சமணராக இருக்கலாம்.
மேற்கோள் :
தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி. வாய்இழந்தவாழ்வினர், வணிகம் போய்இழந்தார் கைத்தூண்பொருள் இழந்தார் கண் இலவர்க்கு ஈந்தார். வைத்து வழங்கிவாழ்வார்.
No comments:
Post a Comment