ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
வேறு பெயர்கள் :
பழமொழி.
சொல்வழக்கு.
முதுமொழி.
உலக வசனம்.
ஆசிரியர் குறிப்பு :
முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
சமயம் = சமண சமயம்.
நூல் பகுப்பு முறை :
இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34.
பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்).
பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்).
பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்).
பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்).
பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்).
பொதுவான குறிப்புகள் :
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு.
தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
இந்நூலை பதிப்பித்தவர் = செல்வகேசவராயசேகர முதலியார்
உரையாசிரியர் = திருநாராயண ஐயங்கார்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே.
No comments:
Post a Comment