Pages

Friday, January 16, 2015

தமிழக அரசு விருது...

திருவள்ளுவர், தந்தை பெரியார், காமராசர், அண்ணா உள்ளிட்ட தன்னலமற்ற தலைவர்கள், பேரறிஞர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோர் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான நபர்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.விருதுகள் பெறுவோர் பெயர் விவரம் வருமாறு:-

  1. திருவள்ளுவர் விருது - திருக்குறள் க.பாஸ்கரன்
  2. தந்தை பெரியார் விருது - தாவூஜீ குப்தா
  3. அண்ணல் அம்பேத்கர் விருது - ஆழி.கு.மகாலிங்கம்
  4. பேரறிஞர் அண்ணா விருது - கஸ்தூரி ராஜா
  5. பெருந்தலைவர் காமராசர் விருது - கருமுத்து தி.கண்ணன்
  6. மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
  7. பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் கண்மதியன்
  8. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - கரு.நாகராசன்
  9. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - ஏ.எம்.ஜேம்ஸ்.



இந்த விருதுகளை 16.1.15 அன்று பிற்பகல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,