திணை - முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)
பாவகை - ஆசிரியப்பா
அடி எல்லை - 188
பெயர்க்காரணம் :
தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.
நெடுமை + நன்மை + வாடை - நெடுநல்வாடை
வேறு பெயர்கள் :
பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
மொழிவளப் பெட்டகம்
சிற்பப் பாட்டு
தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா)
நக்கீரர் கண்ட தமிழ்ச்சுரங்கம்
புலவர், தலைவன் :
பாடிய புலவர் - நக்கீரர்( மதுரை கணக்காயனார் மகன்)
பாட்டுடைத் தலைவன் - தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
உரை :
கோதண்டபாணி பபிள்ளை உரை
வேங்கடா செட்டியார் உரை
திரு.வி.காவின் கூற்று :
நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.
திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன” என்றார்.
திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.
பொதுவான குறிப்புகள் :
நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
No comments:
Post a Comment