மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக்காஞ்சி
வேறு பெயர்கள் :
மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)
கூடற் தமிழ்
காஞ்சிப்பாட்டு
புலவர், தலைவன் :
பாடிய புலவர் = மாங்குடி மருதனார்
பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.
மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.
இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்
மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.
அமைச்சர்கள் காவிதி பட்டம் பெறுதல் பற்றி கூறுகிறது 354 அடிகள் மதுரையை பற்றி மட்டுமே சிறப்பித்துக் கூறுகிறது கொற்கை துறைமுகத்தின் முத்தினை சிறப்பாக கூறுகிறது பழந்தமிழரின் வணிகப் பொருள்களை பற்றி குறிப்புகள் உள்ளது பொறி மயிர் வாரணம் கூட்டுதுறை வய்மாப் புலியொடு குழும
இவ்வடிகள் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை மதுரைகாஞ்சி மூலம் அறியலாம்
No comments:
Post a Comment