- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் - முகமது பின் காசிம்.
- முகமது பின் காசிம் கிபி 712 ஆம் ஆண்டு சிந்து மீது படையெடுத்தார்.
- முகமது கஜினி இந்தியாவின் மீது கிபி 1000 -1025 பதினேழு முறை படையெடுத்தார்..
- முகமது கஜினி கடைசியாகக் கொள்ளையிட்டது, குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில்.
- முகமது கஜினியோடு இந்தியா வந்த பெர்சிய அறிஞர் - அல்பெரூனி.
- 1191 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்த முகமது கோரியை, ராஜபுத்திர அரசர் பிரிதிவிராஜன் தோற்கடித்தார்.
- 1192 ஆம் ஆண்டு முகமது கோரி, பிரிதிவிராஜனைத் தோற்கடித்து முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவினார் .
- முகமது கோரி, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை, தன் அடிமையான குத்புதீன் ஐபெக்கிடம் தந்தார்.
- குத்புதீன் ஐபெக்கின் வம்சம், அடிமை வம்சம் என்று அழைக்கப்படுகிறது.
- அடிமை வம்சத்தின் முதல் அரசரான குத்புதீன் ஐபெக், டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கினார்.
- குத்புதீன் ஐபெக், ஏழைகளுக்கு லட்ச லட்சமாக வாரி வழங்கியதால் லக்பக்ஷ் என அழைக்கப்பட்டார்.
- குத்புதீன் ஐபெக், போலோ' விளையாடும்போது குதிரையிலிருந்து விழுந்து இறந்தார்.
- குத்புதீன் ஐபெக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்த இல்டுமிஷ், குதுப்மினாரைக் கட்டி முடித்தார்.
- துருக்கி கலிபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தான் - இல்டுமிஷ்.
- இல்டுமிஷ் ஆட்சியின்போது மங்கோலியர் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- இல்டுமிஷுக்குப்பின் அவரது மகள் சுல்தானா ரஸியா ஆட்சிக்கு வந்தார்.
- டெல்லியை ஆண்ட முதல் பெண் - சுல்தானா ரஸியா.
- சுல்தானா ரஸியாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதீன் பால்பன்.
- அடிமை வம்சத்து அரசர்கள் மாமலுக்குகள் என அழைக்கப்பட்டனர்.
- அடிமை வம்சத்துக்குப் பின் கில்ஜி வம்ச ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்தார்.
- ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார்.
- அலாவுதீன் கில்ஜி, அங்காடிச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
- சிரி நகரை நிர்மாணித்தவர் - அலாவுதீன் கில்ஜி அவரின் அவையில் இருந்த பாரசீகக் கவிஞர் - அமீர் குஸ்ரு.
- அமீர் குஸ்ரு, இந்தியாவின் கிளி' என்றழைக்கப்பட்டார்.
- சிதார் இசைக்கருவி, அமீர் குஸ்ருவால் கண்டுபிடிக்கப்பட்டது.
- அமீர் குஸ்ரு, லைலா மஜ்னு' கதையைப் பாரசீக மொழியில் எழுதினார்.
- கில்ஜி வம்சத்துக்குப் பின் துக்ளக் வம்சம் ஆட்சிக்கு வந்தது .
- முகமது பின் துக்ளக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் ஷா துக்ளக்.
- துக்ளக் வம்ச நஸ்ருதீன் முகமது ஆட்சிக்காலத்தில் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- துக்ளக் வம்சத்துக்குப் பின் தைமூரின் பிரதிநிதியால் தோற்றுவிக்கப்பட்ட சையது வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
- சையது வம்ச அரசர்கள், நபிகள் நாயகத்தின் நேரடி சந்ததியினர் என்று சொல்லப்படுகிறது.
- சையது வம்சத்துக்குப் பின் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த லோடி வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
- லோடி வம்சத்து முதல் அரசரான பகலுல் லோடி, டெல்லியை ஆண்ட முதல் ஆப்கான்.
- பகலுல் லோடிக்குப் பின் சிக்கந்தர் லோடி, ஆக்ராவை நிர்மாணித்தார்.
- லோடி வம்சத்துக் கடைசி அரசர் - இப்ராஹிம் லோடி.
Pages
▼
No comments:
Post a Comment