Wednesday, October 05, 2022

TNPSC G.K - 188 | பொதுத்தமிழ் - குறுந்தொகை.

குறுந்தொகையின் உருவம் :


  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • புலவர்கள் = 205
  • அடி எல்லை = 4-8

பெயர்க்காரணம் :


  • குறுமை+தொகை = குறுந்தொகை
  • குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.

வேறு பெயர்கள் :


  • நல்ல குறுந்தொகை
  • குறுந்தொகை நானூறு(இறையனார் களவியல் உரை கூறுகிறது)

தொகுப்பு :


  • தொகுத்தவர் = பூரிக்கோ
  • தொகுப்பிதவர் = தெரியவில்லை

உரை, பதிப்பு :


  • இந்நூலின் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதியுள்ளார்.
  • 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
  • இத்தகவலைச் சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர்
  • கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
  • நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை

கடவுள் வாழ்த்து :


  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் = பாரதம் பாடிய
  • பெருந்தேவனார்
  • இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்

குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்றோர் - 18 பேர் :


  • அணிலோடு முன்றிலார்
  • விட்ட குதிரையார்
  • குப்பைக் கோழியார்
  • மீனெறி தூண்டிலார்
  • காக்கைப்பாடினியார்
  • வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள் :


  • உருத்திரன்
  • சாண்டிலியன்
  • உலோச்சணன்
  • பௌத்திரன்

குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள் :


  • சோழன் கரிகாலன் குட்டுவன்
  • பசும்பூண் பாண்டியன் பாரி
  • ஓரி நள்ளி

குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் - 13 பேர்:


  • ஔவையார்
  • வெள்ளிவீதியார்
  • வெண்பூதியார்
  • ஆதிமந்தி

பொதுவான குறிப்புகள் :


  • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
  • பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
  • வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் - பரணர், மாமூலனார்.
  • உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
  • குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
  • திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
  • இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
  • 235 பாடல்கள் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.
  • நூலின் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதியுள்ளார்.
  • 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
  • இத்தகவலை சீவகசிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார் ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
  • படைத் தலைவனுக்கு அளிக்கப்படும் பட்டம் ஏனாதி.
  • இடம்பெற்ற சொற்கள் பாம்பு, மீன், முதலை.
  • இந்நூலை முதலில் வெளியிட்டவர் சவுரி பெருமாள் அரங்கனார்.
  • 1915 நூலை முதலில் பதிப்பித்தவர் சி வைத்தாமோதரம்பிள்ளை.
  • உரையாசிரியர் உ.வே.சா குறுந்தொகை பெண்பாற் புலவர்கள் 13 பேர்.

புலவர்கள் சிலர் :


  • கபிலர் பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரில் அந்தணர் மரபில் பிறந்தவர்.
  • வாழ்ந்த கால புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவை நட்பு கொண்டார்.
  • பாரியின் உயிர் தோழர் மற்றும் அவைக்களப் புலவர் குறிஞ்சி திணை பாடுவதில் வல்லவர்.
  • கபிலரது பாட்டு என்பதே இவர் புலமைக்கு சான்று.
  • வாய்மொழிக் கபிலன் -நக்கீரர்.
  • நல்லிசை கபிலன் - பெருங்குன்றூர்கிழார்.
  • வெறுத்த கேள்வி விளங்கு புகழ் - கபிலன்.
  • பொருந்தில் இளங்கீரனார்- புலனழுக்கற்ற அந்தணாளன்.
  • பொய்யா நாவிற் கபிலன் மாறோகோத்து நப்பசலையார்.
  • வெள்ளிவீதியார் பெண்பாற் புலவர்களுள் ஒருவர் சங்கத் தொகை நூல்களில் 13 பாடல்கள் பாடியுள்ளார்.
  • பாலை பாடிய பெருங்கடுங்கோ சேர மரபைச் சேர்ந்த மன்னன் கலித்தொகையில் பாலை திணை பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பெற்றார்.

முக்கிய அடிகள் :


  • நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
  • நீரினும் ஆரளவின்றே - (தேவகுலத்தார்)
  • வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
  • மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே - (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
  • யாயும் ஞாயும் யாராகியரோ
  • எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
  • நீயும் யானும் எவ்வழி அறிதும்
  • செம்புலப் பெயல்நீர் போல
  • அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
  • கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
  • காமம் செப்பாது கண்டது மொழிமோ
  • பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
  • செறியெயிற் றரிவை கூந்தலின்
  • நறியவும் உளவோ நீ அறியும் பூவே

No comments:

Popular Posts