Wednesday, October 05, 2022

TNPSC G.K - 187 | பொதுத்தமிழ் - முதுமொழிக்காஞ்சி.

முதுமொழிக்காஞ்சியின் உருவம் :


  • ஆசிரியர் - மதுரைக் கூடலூர்க்கிழார்.
  • பாடல்கள் - 100.
  • பாவகை - குறள் தாழிசை.
  • திணை - காஞ்சித்திணை.
  • காலம் - சங்க காலத்திற்கு பின்.

பெயர்க்காரணம் :


  • முதுமொழி - மூத்தோர் சொல்.
  • காஞ்சி - மகளிர் இடையணி (நிலையாமை பற்றியது).
  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.

வேறு பெயர்: 


  • அறவுரைக்கோவை
  • ஆத்திச்சூடியின் முன்னோடி

பொதுவான குறிப்புகள் :


  • பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
  • சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்யாப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந் பத்து, தாண்டாப்பத்து.
  • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
  • இதன் பாடல்கள் குறள்வெண் செந்துறை என்ற யப்பால் ஆனவை.
  • உரையாசிரியர் - செல்வ கேசவராய முதலியார்.
  • அவர்தம் பாடல்களை நச்சினார்கினியார் முதலியோர் மேற்கோளாக கையாண்டனர்.

மேற்கோள் :


  • ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை.
  • வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை.
  • மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை.
  • ஈரம் உடைமை ஈகையின் அறிப.

No comments:

Popular Posts