Sunday, October 16, 2022

TNPSC G.K - 220 | பொதுத்தமிழ் - இனியவை நாற்பது.

இனியவை நாற்பதின் உருவம்:


  • ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் = 1 + 40
  • பாவகை = வெண்பா
  • உரையாசிரியர் = மகாதேவ முதலியார் 

பெயர்க்காரணம்:


  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.

கடவுள் வாழ்த்து:


  • சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
  • வைதிக சமயம்  சார்ந்த நூல் ஆகும் 

பொதுவான் குறிப்புகள்:


  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
  • "உருவ கலிமா" என்று தொடங்கும் பாடல் மட்டும் பற்றொடை வெண்பா மற்றவை இன்னிசை வெண்பா
  • 1,3,4,5 ஆகிய பாடல்கள் மட்டும்  4 கருத்துக்கள்  கொண்டது மற்றவை 3 கருத்துக்கள் கூறுகின்றன. 
  • மதுரை தமிழாசிரியர் மகனார்  பூதஞ்சேந்தனார் 

முக்கிய அடிகள்:


  • ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
  • ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
  • வருவாய் அறிந்து வழங்கல் இனிது
  • தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
  • விடமென்று உணர்த்தல் இனிது

No comments:

Popular Posts