Sunday, October 16, 2022

TNPSC G.K - 221 | பொதுத்தமிழ் - ஆசாரக்கோவை.

ஆசாரக்கோவையின் உருவம்:


  • ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
  • இயற் பெயர் =முள்ளியார்
  • தந்தை =பெருவாயின்
  • பாடல்கள் = 100
  • பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்
  • உரையாசிரியர் = புன்னை வனநாத முதலியார் 
  • ஊர் = வண்கயத்தூர்

பெயர்க்காரணம்:


  • கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
  • நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
  • எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.

சிறப்பு பெயர் :


  • பொது சுகாதார நூல் 

பொதுவானகுறிப்புகள் :


  • ஆசாரம் = ஒழுக்கம், கோவை = தொகுப்பு
  • வட நூல்களான “(சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்) ஆரிடம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
  • இந்நூல் தொல்காப்பியர் கூறும் "அம்மை"என்ற  வனப்பு சார்ந்தது
  • ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
  • பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
  • “கயத்தார் பெருவாயின் முள்ளியார்” என அழைக்கப்படுபவர்.
  • இவர் சைவ சமயத்தார் என கூறுவர்
  • இந்நூலின் கடவுள்வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
  • நாள்தோறும் செய்ய வேண்டிய கடமையை பற்றி கூறுகிறது

ஆசாரகட்கு வித்து :


  • நன்றியறிதல்
  • பொறையுடைமை
  • இன்சொல்கூறல்
  • எவ்வுயிர்க்கும் இன்னாதவற்றை செய்யாமை
  • ஒப்புரவறிதல்
  • அறிவுடைமை
  • நல்லித்தாரோடு நட்டல்
  • கல்வி 

மேற்கோள்:


  • விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
  • இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
  • ஒழுக்கம் பிழையா தவர்
  • பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
  • பகற்பொய்யார் தீயினுள் நீர்
  • உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
  • வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும்
  • புணரார் பெரியார் அகத்து

No comments:

Popular Posts