-
ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ?
a. திரு.வி.க
b. சங்கராச்சாரியார்
c. இராமலிங்க அடிகளார்
d. மேற்கண்ட எவருமில்லை
விடை: c. இராமலிங்க அடிகளார்
-
திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்ற வார்த்தையின் பொருள் என்ன ?
a. ஆர்வமுடையவர்
b. தோழர்
c. உறவினர்
d. அன்புடையவர்
விடை: d. அன்புடையவர்
-
2013 - ஆங்கில வருடத்திற்கு சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ?
a. 2044
b. 2041
c. 2034
d. 2013
விடை: a. 2044
-
"என் சரிதம்" - யாருடைய வாழ்க்கை வரலாறு ?
a. கண்ணதாசன்
b. ஜி.யு.போப்
c. தேவநேய பாவாணர்
d. உ.வே.சாமிநாதய்யர்
விடை: d. உ.வே.சாமிநாதய்யர்
-
நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைச் சார்ந்தது ?
a. பத்துப் பாட்டு
b. எட்டுத்தொகை
c. பதினெண் மேல்கணக்கு
d. பதினெண் கீழ்கணக்கு
விடை: d. பதினெண் கீழ்கணக்கு
-
"சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப் பாடியவர் ?
a. திரு.வி.க
b. ஒளவையார்
c. பாரதிதாசன்
d. கண்ணதாசன்
விடை: b. ஒளவையார்
-
உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது ?
a. கன்னியாகுமரி
b. திருநெல்வேலி
c. திருவாரூர்
d. தஞ்சாவூர்
விடை: c. திருவாரூர்
-
நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார் ?
a. ஒளவையார்
b. கபிலர்
c. சீத்தலை சாத்தனார்
d. விளம்பி நாகனார்
விடை: d. விளம்பி நாகனார்
-
"தகைசால்" என்பதன் பொருள் என்ன ?
a. கொடைகளில் சிறந்த
b. ஈகையில் சிறந்த
c. பண்பில் சிறந்த
d. பொறுமையுடைய
விடை: c. பண்பில் சிறந்த
-
"நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?
a. மாங்குடி மருதனார்
b. கபிலர்
c. பிசிராந்தையார்
d. ஒளவையார்
விடை: d. ஒளவையார்
0 Comments