Ad Code

Responsive Advertisement

பொதுத்தமிழ் - வினாவிடைகள் (1)

  1. ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ?

    a. திரு.வி.க

    b. சங்கராச்சாரியார்

    c. இராமலிங்க அடிகளார்

    d. மேற்கண்ட எவருமில்லை

    விடை: c. இராமலிங்க அடிகளார்


  1. திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்ற வார்த்தையின் பொருள் என்ன ?

    a. ஆர்வமுடையவர்

    b. தோழர்

    c. உறவினர்

    d. அன்புடையவர்

    விடை: d. அன்புடையவர்


  1. 2013 - ஆங்கில வருடத்திற்கு சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ?

    a. 2044

    b. 2041

    c. 2034

    d. 2013

    விடை: a. 2044


  1. "என் சரிதம்" - யாருடைய வாழ்க்கை வரலாறு ?

    a. கண்ணதாசன்

    b. ஜி.யு.போப்

    c. தேவநேய பாவாணர்

    d. உ.வே.சாமிநாதய்யர்

    விடை: d. உ.வே.சாமிநாதய்யர்


  1. நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைச் சார்ந்தது ?

    a. பத்துப் பாட்டு

    b. எட்டுத்தொகை

    c. பதினெண் மேல்கணக்கு

    d. பதினெண் கீழ்கணக்கு

    விடை: d. பதினெண் கீழ்கணக்கு


  1. "சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப் பாடியவர் ?

    a. திரு.வி.க

    b. ஒளவையார்

    c. பாரதிதாசன்

    d. கண்ணதாசன்

    விடை: b. ஒளவையார்


  1. உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது ?

    a. கன்னியாகுமரி

    b. திருநெல்வேலி

    c. திருவாரூர்

    d. தஞ்சாவூர்

    விடை: c. திருவாரூர்


  1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார் ?

    a. ஒளவையார்

    b. கபிலர்

    c. சீத்தலை சாத்தனார்

    d. விளம்பி நாகனார்

    விடை: d. விளம்பி நாகனார்


  1. "தகைசால்" என்பதன் பொருள் என்ன ?

    a. கொடைகளில் சிறந்த

    b. ஈகையில் சிறந்த

    c. பண்பில் சிறந்த

    d. பொறுமையுடைய

    விடை: c. பண்பில் சிறந்த


  1. "நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?

    a. மாங்குடி மருதனார்

    b. கபிலர்

    c. பிசிராந்தையார்

    d. ஒளவையார்

    விடை: d. ஒளவையார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement