TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 7th Social Science Part-6
பொது அறிவு வினா விடைத் தொகுப்பு
வரலாறு மற்றும் கலாச்சாரம்
- கொனாரக்கில் உள்ள கோவில் எந்த நினைவுச் சின்னத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்?
- விடை: ராஜபுத்திரர்கள் கால நினைவுச் சின்னங்கள்.
- பதானியின் வரலாறு என அழைக்கப்படும் 'தாரிக்-இ-பதானி' எந்த ஆண்டு எழுதப்பட்டது?
- விடை: கி.பி. 1595.
- வட அமெரிக்காவில் அலாஸ்காவில் இருந்து பனாமா நிலசந்தி வரை நீண்டுள்ள மலைத்தொடர் எது?
- விடை: ராக்கி மலைகள்.
- ஆசியா கண்டத்தின் மிக உயரமான சிகரம் எது?
- விடை: எவரெஸ்ட் சிகரம் (8848 மீ).
- ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான சிகரம் எது?
- விடை: கிளிமஞ்சாரோ சிகரம் (5895 மீ).
- புனித லாரன்ஸ் ஆறு எந்த ஏரியில் தன் பயணத்தை துவங்கி அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது?
- விடை: ஒன்டேரியோ ஏரி.
- வட அமெரிக்காவில் உள்ள கிரேட் ஏரிகளில் (Great Lakes) மிகப்பெரிய ஏரி எது?
- விடை: சுப்பீரியர் ஏரி.
- 'பெரிய சேற்று ஆறு' என அழைக்கப்படும் மிஸிஸிப்பி நதிக்கு அப்பெயர் வரக் காரணம் என்ன?
- விடை: மலைகளின் கீழே பாய்ந்து வரும் போது மண்ணையும் சேற்றையும் இழுத்து வருவதால்.
- 30° முதல் 60° வரையிலான மத்திய அட்சகோட்டுப் பகுதியில் வீசும் நிலையான காற்றுகள் எவை?
- விடை: மேற்கத்திய காற்றுகள் அல்லது எதிர் வர்த்தக காற்றுகள்.
- உலகின் உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைக் கொண்டுள்ள தென் அமெரிக்காவின் உயர்நிலங்கள் எவை?
- விடை: கயானா உயர்நிலங்கள்.
- பூமத்திய ரேகையை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் மாலை 4 மணிக்கு நிகழும் மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: 4 மணி கடிகார மழை (வெப்பச்சலன மழை).
- பாயும் நீரின் அளவு மற்றும் வடிநில பரப்பைக் கொண்டு உலகின் மிகப்பெரிய வடிகால் அமைப்பாக விளங்குவது எது?
- விடை: அமேசான் நதியமைப்பு.
- 'உலகின் நுரையீரல்' என அழைக்கப்படும் அமேசான் காடுகள் எந்தப் பகுதியில் அமைந்துள்ளன?
- விடை: பூமத்திய ரேகை பகுதியில்.
- தென் அமெரிக்காவில் பசிபிக் கடற்கரை ஓரமாக ஆன்டஸ் மலைத்தொடர் எத்தனை கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது?
- விடை: 6440 கி.மீ.
- உலகின் முதல் கோதுமை ஏற்றுமதியாளராக விளங்கும் கண்டம் எது?
- விடை: வட அமெரிக்கா.
- நியுபவுண்ட்லாந்து தீவுக்கு அருகில் அமைந்துள்ள உலகின் மிகச்சிறந்த மீன்பிடி தளம் எது?
- விடை: கிராண்ட் பேங்க்.
- பல கலாச்சாரங்கள் இணைந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதால் 'உருகும் பானை' என அழைக்கப்படும் நாடு எது?
- விடை: ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
- எக்ஸிமோக்கள் கடுங்குளிரைத் தாங்க எதனால் ஆன உடைகளை உடுத்துகிறார்கள்?
- விடை: விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகள்.
- டீ போன்ற ஒரு பானம் தயாரிக்கப் பயன்படும் இலைகள் எந்த மரத்திலிருந்து கிடைக்கின்றன?
- விடை: எர்பா மேட் எனும் மரம்.
- தோல் பதனிடப் பயன்படும் டானின் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
- விடை: கியுபிராகோ மரத்திலிருந்து.
- ஆன்டஸ் மலைச்சரிவுகளில் உள்ள காடுகளில் 'மோண்டானா' என அழைக்கப்படுவது எவை?
- விடை: பைன், தேவதாரு, ஸ்பூரூஸ் போன்ற ஊசியிலை மரங்கள்.
- தென் அமெரிக்காவிற்கு சிறப்பு பெற்ற விலங்குகள் எவை?
- விடை: எறும்பு தின்னிகள், ஆர்மாடில்லோஸ் மற்றும் லாமாஸ்.
- தென் அமெரிக்காவில் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள நாடு எது?
- விடை: பிரேசில்.
- தென் அமெரிக்காவின் மிக முக்கியமான தோட்டப்பயிர்கள் எவை?
- விடை: காபியும் கொக்கோவும்.
- காபி உற்பத்தியில் உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நாடு எது?
- விடை: பிரேசில்.
- கொக்கோ உற்பத்தியில் பிரேசில் நாடானது உலகில் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?
- விடை: மூன்றாம் இடம்.
- அர்ஜென்டினாவில் கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: எஸ்டான்சியாஸ் (எஸ்ட்டென்ஷன்).
- வேளாண் தொழிலில் உரம் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான சோடியம் நைட்ரேட் எங்கு இயற்கையாகக் கிடைக்கிறது?
- விடை: தென் அமெரிக்கா.
- மத்திய கிழக்கிற்கு வெளியே மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குவது எது?
- விடை: வெனிசுலா.
- குறைந்த பரப்பளவிலான இடங்களைக் குறித்து அதிக விவரங்களைக் கொடுக்கும் நிலவரைபடம் எது?
- விடை: பெரிய அளவை நிலவரைபடம்.
- சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தரும் தல வரைபடங்களை தயாரிக்கும் அமைப்பு எது?
- விடை: இந்தியாவின் நில ஆய்வு மையம் (சர்வே ஆப் இந்தியா).
- 1 செ.மீ = 1000 கி.மீ என்ற அளவைக் கொண்டு வரையப்படும் வரைபடம் எந்த வகையைச் சார்ந்தது?
- விடை: சிறிய அளவை வரைபடங்கள்.
- வகுப்பறையில் மாணவர்களுக்கும் அலுவலகங்களிலும் அதிகம் பயன்படும் வரைபடங்கள் எவை?
- விடை: சுவர் வரைபடங்கள்.
- பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: நிலவரைபட நூல் (Atlas).
- நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: கார்ட்டோகிராஃபி (Cartography).
- வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயல் எந்த தேதியில் வீசியது?
- விடை: 2018 ஆம் ஆண்டு நவம்பர் 10.
- கஜா புயல் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த காற்றின் வேகம் என்ன?
- விடை: 120 கி.மீ வேகம்.
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
- விடை: உள்துறை அமைச்சகம்.
- இந்தியாவில் இயற்கை பேரழிவுகளை நிர்வகிப்பதற்கான பயிற்சி வழங்கும் முதன்மை நிறுவனம் எது?
- விடை: தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM).
- தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF) எத்தனை போலீஸ் தனிப்படையுடன் அமைக்கப்பட்டது?
- விடை: 80 போலீஸ் தனிப்படையுடன்.
- மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பான ஆணையம் எது?
- விடை: மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA).
- மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2018-2030 எந்த துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது?
- விடை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை.
- தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படும் பொருளாதாரம் எது?
- விடை: கலப்பு பொருளாதாரம்.
- இயற்கையாக கிடைக்கும் பொருட்களை நேரடியாக பயன்படுத்திச் செய்யப்படும் உற்பத்தி எந்த நிலையைச் சார்ந்தது?
- விடை: முதன்மை நிலை உற்பத்தி.
- காடுகளைப் பாதுகாத்தல், மீன் பிடித்தல், சுரங்கத்தொழில் ஆகியவை எந்த நிலை தொழில்கள் ஆகும்?
- விடை: முதன் நிலை தொழில்கள்.
- இரும்புத் தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருள்களைத் தயாரிப்பது எவ்வகை உற்பத்திக்கு உதாரணம்?
- விடை: இரண்டாம் நிலை உற்பத்தி (தொழில்துறை உற்பத்தி).
- முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உற்பத்திப் பொருள்களைச் சேகரிப்பதும், பரிமாற்றம் செய்வதும் எவ்வகை உற்பத்தி?
- விடை: மூன்றாம் நிலை உற்பத்தி.
- வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து ஆகிய அரசுத்துறை நிறுவனங்கள் எந்தத் துறையின் கீழ் வருகின்றன?
- விடை: சேவைத்துறை உற்பத்தி (மூன்றாம் துறை).
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் துறை எது?
- விடை: மூன்றாம் நிலை அல்லது சேவைத்துறை உற்பத்திகள்.
- பொருளாதாரத்தில் உற்பத்திக்கான முக்கிய காரணிகள் யாவை?
- விடை: நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் முனைவோர்.
- மார்ஷலின் கருத்துப்படி இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: மூலதனம்.
- இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் ஆகியவை எவ்வகை மூலதனத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்?
- விடை: பருமப்பொருள் மூலதனம் அல்லது பொருட்சார் மூலதனம்.
- வங்கி வைப்புகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவை எவ்வகை மூலதனம் ஆகும்?
- விடை: பண மூலதனம் அல்லது பணவியல் வளங்கள்.
- தற்காலத்தில் 'சமுதாய மாற்றம் காணும் முகவர்' எனப் போற்றப்படுபவர் யார்?
- விடை: தொழில் முனைவோர்.
- ஆடம் ஸ்மித் எழுதிய இரண்டு சிறந்த படைப்பு நூல்கள் எவை?
- விடை: "நன்னெறி கருத்துக் உணர்வுக் கொள்கை" மற்றும் "நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும்".
- ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப வரி விகிதமும் அதிகரிப்பது எந்த வரிவிதிப்பு முறை?
- விடை: வளர்வீத வரி.
- அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி எது?
- விடை: தேய்வு வீத வரி.
- சொத்து வரி, தனியாள் சொத்துவரி, வருமான வரி ஆகியவை எவ்வகை வரிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்?
- விடை: நேர்முக வரி.
- ஒருவர் வெகுமதியாகப் பெறும் பொருள்களின் மதிப்புக்கேற்ப விதிக்கப்படும் வரிக்கு என்ன பெயர்?
- விடை: அன்பளிப்பு வரி.
- சேவையைப் பெறுபவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு நேரடியாக மத்திய அரசுக்குச் செலுத்தப்படும் வரி எது?
- விடை: சேவை வரி.
- மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பொருள்களை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய மறைமுக வரி எது?
- விடை: கலால் (ஆயத்தீர்வை) வரி.
- மாநில அரசுகளால் திரைப்படங்கள், காணொலி விளையாட்டுகள் மற்றும் கண்காட்சிகளுக்கு வசூலிக்கப்படும் வரி எது?
- விடை: பொழுதுபோக்கு வரி.
- நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் எந்த சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது?
- விடை: மத்திய வருமானச் சட்டம் 1963.
- பஞ்சாப், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட 24 மாநிலங்களில் மதிப்பு கூட்டு வரி (VAT) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
- விடை: 2005.
- சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) வசூலிக்கப்படும் வரித் தொகை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
- விடை: சமமாகப் பிரிக்கப்படுகிறது.
- தூய்மை பாரதத்தின் பெயரால் வசூலிக்கப்படும் வரி (0.5%) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- விடை: 2015ஆம் ஆண்டு, நவம்பர் 15.
- "சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்" என்று வரையறுத்தவர் யார்?
- விடை: பேராசிரியர் லாஸ்கி.
- இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு எது?
- விடை: 1952.
- ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் எத்தனையாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
- விடை: ஐந்தாவதாக.
- இந்திய அரசியலமைப்பில் பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சட்டப்பிரிவு எது?
- விடை: சட்டப்பிரிவு 16.
- பட்டங்கள் அளித்து மக்களை வேறுபடுத்துதலை தடை செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
- விடை: சட்டப்பிரிவு 18.
- ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களில் வலிமையுடையதாக இருக்க வேண்டும்?
- விடை: குறைந்த பட்சம் நான்கு மாநிலங்களில்.
- மாநில அரசின் உச்சபட்ச நீதியமைப்பான உயர்நீதிமன்றம் எந்த அளவிலான அதிகார எல்லை உடையது?
- விடை: மாநிலத்தின் ஒட்டுமொத்த பரப்பிற்குமான அதிகார எல்லை.
- ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் அச்சு இயந்திரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
- விடை: 1453.
- மக்களாட்சியைக் குறிக்கும் 'டெமோஸ்' (Demos) மற்றும் 'க்ராடோஸ்' (Kratos) ஆகிய சொற்கள் எந்த மொழியைச் சேர்ந்தவை?
- விடை: கிரேக்க சொற்கள்.
- 'க்ராடோஸ்' (Kratos) என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?
- விடை: அதிகாரம் அல்லது ஆட்சி.
- 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு வீதம் என்ன?
- விடை: 8.86%.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு வீதம் எவ்வளவாக உயர்ந்தது?
- விடை: 65.46%.
- இந்தியாவில் பெண் கல்வியை செயல்வடிவமாக்கிய இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் புலேவின் கணவர் யார்?
- விடை: ஜோதிராவ்புலே.
- முதல் மகளிர் பல்கலைக்கழகமான SNDT பல்கலைக்கழகம் எந்த ஆண்டு புனேவில் தொடங்கப்பட்டது?
- விடை: 1916.
- உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?
- விடை: சிறிமாவோ பண்டாரநாயக் (இலங்கை).
- விண்வெளிக்குச் சென்ற உலகின் முதல் பெண் யார்?
- விடை: வாலென்டினா தெரேஷ்கோவா (சோவியத் ஒன்றியம்).
- எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்ட முதல் பெண் மலையேறுபவர் யார்?
- விடை: ஜன்கோதபே (ஜப்பான்).
- ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் யார்?
- விடை: சார்லோட் கூப்பர் (இங்கிலாந்து).
- இந்தியாவின் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் யார்?
- விடை: விஜயலட்சுமி பண்டிட்.
- இந்தியாவின் மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் யார்?
- விடை: சுஷ்மா ஸ்வராஜ்.
- சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்?
- விடை: சரோஜினி நாயுடு.
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் யார்?
- விடை: அன்னைதெரசா (1979).
- புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண் எழுத்தாளர் யார்?
- விடை: அருந்ததி ராய் (1997).
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
- விடை: அன்னிபெசன்ட்.
- இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
- விடை: சுச்சித கிருபாளினி.
- இந்தியாவின் முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) யார்?
- விடை: காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா.
- நிலம், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்திக் காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: காரணிச் சந்தை.
- 'நுகர்வோருக்கான மகா சாசனம்' என்று அழைக்கப்படும் சட்டம் எது?
- விடை: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986.
- தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் எவ்வளவு மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்க முயல்கிறது?
- விடை: 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க குறைகள்.
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிகபட்சமாக எவ்வளவு இழப்பீடு கோரப்படும் குறைகளை தீர்க்கும் நீதிமன்றமாகும்?
- விடை: 20 லட்சம் மதிப்புமிக்க குறைகள்.
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி தவறான விளம்பரத்திற்காக உற்பத்தியாளருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படலாம்?
- விடை: 1,000,000 ரூபாய் வரை.
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
- விடை: 1988.
- சட்ட அளவீடு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
- விடை: 2009.
- ஒரே வழித்தடத்தில் செல்பவர்கள் இருசக்கர வாகனம் அல்லது மகிழுந்தில் மற்றவர்களை உடன் அழைத்துச் செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* விடை: கார்பூலிங் (Carpooling).


0 Comments