Tuesday, October 04, 2022

TNPSC G.K - 168 | டெல்லி சுல்தான்கள் PART 5

சையது மரபு (Sayyid) கிபி 1414 - 1451 :


  • 1398 தைமூர் படையெடுப்பின்போது டெல்லி மீரட் பஞ்சாப் பகுதிகளின் பிரதிநிதியாக கிஷார்கானை நியமித்தார் இதன்மூலம் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  • இவர்கள் தைமூர் மகனுக்கு வரி செலுத்தினர்.

கிஷார்கான் 1414- 1421 :


  • சையது மரபை தோற்றுவித்தார்.
  • இவர் மூதாதையர்கள் அரேபியர்கள் மற்றும் முகமது நபியின் உறவினர்கள்.
  • தந்தை மாலிக் சுலைமான் (வைதிக முஸ்லீம் பிரிவு).
  • தாஜ் உல்முல்க் பிரதான அமைச்சர்.
  • ஆட்சிப்பகுதி டெல்லி, சிந்து பஞ்சாப் மற்றும் தோ ஆப்.
  • வங்க ஷார்கி அரசைக் கைப்பற்றினார்.
  • 1421 இறப்பு.

முபாரக் ஷா 1421-1434 :


  • கிஷார்கான் மகன்.
  • யமுனை நதிக்கரையில் முபாரக் பாத் நகர் நிறுவினார்.
  • ராஜபுத்திரர்கள், ஜான்பூர், மால்வா மற்றும் காபூல் மீது போர் தொடுத்தார்.
  • அமைச்சர் சர்வார் உல் முல்க் இவரை சதி செய்து கொன்றனர்.

முகம்மது ஷா 1434 - 1445 :


  • முபாரக் வளர்ப்பு மகன்.
  • மாலவன் பகுதியை கைப்பற்றினார் உதவியவர் லாகூர் ஆளுநர் பகலால் லோடி (கானிகானா).
  • 1445 இயற்கை மரணம்.

அலாவுதீன் ஷா 1445 1451 :


  • ஆலம் ஷா என்ற பட்டப்பெயர் கொண்டார்.
  • பொருள் உலக சக்ரவர்த்தி.
  • முகமது ஷாவின் மகன்.
  • அரசுப் பதவி துறப்பு 30 ஆண்டுகள் தனிமையில் பதௌனி பகுதியில் வாழ்ந்தார்.
  • மனநிறைவு அமைதியுடன் வாழ்ந்த ஒரே சுல்தான்.
  • அவர்களின் ஆட்சியை யஹ்யா பின் அஹ்மத் சிரிந்தி தாரிக் இ முபாரக் ஷாகி குறிப்பிடுகிறது.

லோடி வம்சம் கிபி 1451- 1526 :


  • முதல் ஆப்கானிய வம்சம்

பகலால் லோடி கிபி 1451 1489 :


  • இவர் சிர்ஹிந்த் பஞ்சாப் ஆளுநர்.
  • தந்தை மாலிக் காலா.
  • லோடி வம்சத்தை நிறுவினார்.
  • அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யாமல் கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
  • வங்கத்தின் ஷார்வி அரசை வெற்றி பெற்றார்.
  • மேவார், சந்தல், ஷகிட், எட்வா மற்றும் குவாலியர் பகுதியை வென்றார்.
  • ஜான்பூர் கைப்பற்றி தன் மகன் பார்பக் ஷாவிற்கு கொடுத்தார்.
  • 1489 இறந்தார்.

சிக்கந்தர் லோடி 1489 - 1517 :

  • பகலால் லோடி இரண்டாவது மகன்.
  • இயற்பெயர் நிஜாம் கான்.
  • ஆட்சிப்பகுதி பஞ்சாப் முதல் பிஹார் வரை.
  • ஆக்ரா நகரை நிறுவினார் தலைநகர் 1504 டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார்.
  • செனாய் இசை விருப்பம் கொண்டவர்.
  • லஸ்ஜட் இ சிக்கந்தர் - இசைத்தொகுப்பு.
  • தீவிர இஸ்லாம் பற்று ஜெசியா வரி விதித்தார்.
  • உணவு பாதுகாப்பு கல்வி ஆதரவு கொடுத்தார்.

இப்ரஹிம் லோடி கிபி 1517 - 1526 :

  • சிக்கந்தர் லோடி மகன் கொடுங்கோலாட்சி.
  • தவுலத் கான் லோடி மகன் தில்வர்கான் லோடியை மிகவும் கொடுமை செய்தார்.
  • தவுலத் கான் லோடி பாபருக்கு கடிதம் எழுதி படையெடுக்க வேண்டும் என்றார்.
  • 1526 முதல் பானிபட் போர் நடைபெற்றது பாபருக்கும் இப்ராகிம் லோடி இடையில் நடைபெற்றது. டெல்லி சுல்தானிய அரசு முடிவுக்கு வந்தது.

No comments:

Popular Posts