Thursday, September 29, 2022

TNPSC G.K - 128 | பொதுத்தமிழ் - பத்துப்பாட்டு,எட்டுத்தொகை நூல்கள்

  • நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி.

  • நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176.

  • நற்றிணையைத் தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த மாறன்வழுதி.

  • வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம் - குறுந்தொகை.

  • குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் - பூரிக்கோ.

  • ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை - அகவற்பா.

  • தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு.

  • மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல் - ஐங்குறுநூறு.

  • ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.

  • ஐங்குறுநூற்றில் பழைய உரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 469.

  • ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் - உவேசா.

  • ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்.

  • ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

  • ஐங்குறுநூறின் அடிவரையறை - 3-6 அடிகள்.

  • ஐங்குறுநூறின் பாவகை - அகவற்பா.

  • ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் - ஔவை துரைசாமிப் பிள்ளை.

  • பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

  • பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்.

  • பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து.

  • சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்.

  • அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் - பரிபாடல்.

  • பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் - பரிபாடல்.

  • கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்.

  • இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் - கலித்தொகை.

  • யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு.

  • அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் - அகநானூறு (அல்லது) நெடுந்தொகை.

  • தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு.

  • அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி முதல் 31 அடி வரை.

  • நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு.

  • அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை.

  • அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை.

  • அகநானூற்றில் 1, 3, 5, 7 என ஒற்றை எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - பாலைத்திணை(200 பாடல்கள்).

  • அகநானூற்றில் 10, 20, 30, 40 என வரும் பாடல்கள் - நெய்தல் திணை (40 பாடல்கள்).

  • அகநானூற்றில் 2,8,12,18 என 2,8 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - குறிஞ்சித்திணை(80 பாடல்கள்).

  • அகநானூற்றில் 4, 14, 24, 34 என 4 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - முல்லைத்திணை(40 பாடல்கள்).

  • அகநானூற்றில் 6,16, 26, 36 என 6 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - மருதத்திணை(40 பாடல்கள்)

  • அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்.

  • அகநானூற்றின் அடிவரையறை - 1331 அடிகள்.

  • அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்.

  • அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இராவெங்கடாசலம்பிள்ளை.

  • அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90.

  • அகநானூற்றின் பிரிவுகள் எத்தனை மற்றும் யாவை - 3 பிரிவுகள் களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை.

  • அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை.

  • அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வேஇராசகோபால்.

  • தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் - புறநானூறு.

  • இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் - புறநானூறு.

  • ஜியுபோப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் - புறநானூறு.

  • திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை.

  • பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்.

  • நெஞ்சாற்றுப்படை' எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது - முல்லைப்பாட்டு.

  • பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு.

  • தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு.

  • பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன் - கரிகாலன்.

  • பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது - காவிரிபூம்பட்டினம்.

No comments:

Popular Posts