Wednesday, June 02, 2021

GS-13-சுயமரியாதை இயக்கம் | SUYAMARIYAATHAI IYAKKAM

GS-13-சுயமரியாதை இயக்கம் | SUYAMARIYAATHAI IYAKKAM
  • சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப்புதல் கதர் ஆடை அணிவது மற்றும் விற்பது.)
  • வகுப்புவாரி இட ஒதுக்கீடு தீர்மானம் அரசுப்பணிகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பெரியார் முதன் முதலில் எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் - திருநெல்வேலி காங்கிரஸ் மாகாண மாநாடு
    • தலைமை : சீனிவாச அய்யங்கார் ,1920 (தோல்வியில் முடிந்தது)
  • 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் இட ஒதுக்கீடு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 
    • தலைமை : திரு.வி.கல்யாண சுந்தரனார், (தோல்வி) 
    • தந்தை பெரியாரை வைக்கம் வீரர் என்று முதன் முதலில் குறிப்பிட்டவர் ? திரு.வி கல்யாண சுந்தரனார்.
  • எந்த இதழில் தந்தை பெரியார் வைக்கம் வீரர் என்று திரு.வி.கல்யாண சுந்தரனார் கூறினார்? நவசக்தி 6. 
  • 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறினார். 
  • சுயமரியாதை இயக்கம் முதன்முதலில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ? 1925 
  • சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் : 
    • மூட பழக்க வழக்கத்தை ஒழித்தல் 
    • பெண்களை தாழ்வாக நடத்துதலை தடுத்தல் 
    • விதவை மறுமணம் 
    • தேவதாசி முறை ஒழிப்பு 
    • குழந்தை திருமணம் ஒழிப்பு 
    • வர்ணாசிரம முறை ஒழிப்பு
  • சுயமரியாதை இயக்கம் மாநாடுகள் 1929 முதல் சுயமரியாதை மாநாடு - செங்கல்பட்டு.
    • தலைமை : சௌந்தரபாண்டியன்
  • முதல் சுயமரியாதை மாநாட்டில் தான் பெரியார் தன்னுடைய நாயக்கர் என்ற பட்டத்தை துறந்தார்.
  • 1930 இரண்டாவது சுயமரியாதை மாநாடு ஈரோடு தலைமை வகித்தவர் - ஜெயக்கர்
  • 1931 மூன்றாவது சுயமரியாதை மாநாடு விருதுநகர் தலைமை வகித்தவர் - சண்முகம்
  • 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநில மாநாடு கூட்ட வேண்டும் என்று கூறியவர் யார் - பட்டுக்கோட்டை அழகிரிசாமி
  • செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடந்த தேதிகள் - 17.2.1929 , 18.2.1929
  • முதல் சுயமரியாதை திருமணம் எங்கு நடைபெற்றது - 1928, சுக்கில நத்தம் (அருப்புக்கோட்டை) (இந்த சுயமரியாதை திருமணம் என்பது அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறும்)
  • முதல் சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பு தலைவர் யார் - சாமி சகஜானந்தா.

What's App share  | Telegram Share

No comments:

Popular Posts