Monday, October 03, 2022

TNPSC G.K - 159 | குப்தப் பேரரசு.

    ஆட்சிமுறை மற்றும் நிர்வாகம் :


  • பேரரசு (அரசர்) ➔ தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) ➔ விஷயம் (விஷயபதி) ➔ கிராமம்( கிராமிகா).

  • கிராம நிர்வாகம் தலைமை கிராமிகா .

  • நகர நிர்வாகம் சிரேஷ்டிகள்.

  • கிராமிகா 8 பேர் கொண்ட குழு (அஷ்ட குல அதிகாரனா).

  • இவற்றின் தலைவர் மகாதாரா .

  • தாமோதர்பூர் செப்பேடு 3 மகாராஜா பட்டம் பெற்ற உபாரிகா இருந்ததாகக் கூறுகிறது .

  • அடிமை முறை இருந்தது.

  • உடன்கட்டை பழக்கம் இருந்தது .

  • ஹரிசேனர் - குமாரமாத்தியா (மன்னருக்கு அடுத்தநிலை) அமர்த்தியா பதவிக்கு இணையான பதவி.

  • ஹரிசேனர் சிறப்புப்பெயர் - சந்தி விக்ரஹிதா, மகாதண்டநாயகர்.

  • மகாசந்தி விக்ரஹா - அமைதி மற்றும் போருக்கான அமைச்சர் (உயர்நிலை அமைச்சர்).

  • மகா தண்டநாயகர்/தண்டநாயகர் - நீதித்துறை மற்றும் ராணுவ அமைச்சர்.

  • அலகாபாத் கல்வெட்டு அக்னி குப்தா மற்றும் 3 மகா தண்டநாயகர் பற்றி கூறுகிறது.

  • மகா அஸ்வபதி - குதிரைப்படைத் தலைவர் .

  • நிர்வாக அலகுகள் (மாவட்டத்திற்கு கீழ் )- விதி ,பூமி ,பதகா, பீடா.

  • கிராம அதிகாரி - கிராமிகர், கிராமஅக்சயா,மகாதாரா.

  • கிராம தலைவர் - கிராம பெரியவர், குடும்பத்தலைவர்.

  • மகா பிரதிஷா அரண்மனைக் காவலர் தலைவர் .

  • சமையலறை தலைவர் கத்யதபகிதா.

  • ஆயுக்தா உயர்மட்ட பதவி .

  • துடகா ஒற்றர் அமைப்பு.

  • இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்ச மண்டலி என்ற குழு நிறுவனத்தை குறிப்பிடுகிறது.

  • உயர் அதிகாரிகள் - அமர்த்தியா, சச்சிவா.

  • அரசு ஆவணம் பராமரிப்பு அக்.ஷாபதல நிக்ருதா.

  • அரசு கல்வெட்டுகள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்தது.

  • வரி பெயர் - இரண்ய வஹ்தி (கட்டாய உழைப்பு).

  • நீர்ப்பாசனம் :


  • நாரதர் ஸ்மிருதி நூலில் வெள்ள கால பந்தியா அணைகரையும் பாசனத்திற்கு தேக்க கரா அணைகரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறுகிறது .

  • அமர சிம்மர் - ஜல நிர்மா (வடிகால் அமைப்பு).

  • குஜராத் - கிர்ணர் மலை அடிவாரத்தில் சுதர்சனா ஏரி புகழ் பெற்றது.

  • விவசாயி அடிமையாக நடத்தப்பட்டனர் .

  • நிலவரி முக்கிய வருவாயாக இருந்தது .

  • ராணுவம் :


  • பாலாதி கிருத்யா - காலாட்படை தலைவர்.

  • மகாபாலாதி கிருத்யா - குதிரைப்படைத் தலைவர் .

  • ராணுவ கிடங்கு அலுவலகம் ரண பந்தகர் அதிகாரனா.

  • அதிகாரி அலுவலகம் தண்டபாஷிகா.

  • வணிகம் வர்த்தகம் :


  • வணிகர்கள், சிரேஷ்டி (உள்நாட்டு வணிகம்) மற்றும் சார்த்த வாகா (பல்வேறு நாடுகளுக்கு வணிகம் செய்பவர்கள்).

  • அதிக வட்டி வசூலிக்கப்பட்டது.

  • வணிக பொருட்கள் - மிளகு, சந்தனம், யானை தந்தம் , குதிரை, தங்கம், செம்பு, இரும்பு மைக்கா.

  • வணிக நகரங்கள் - பாடலிபுத்திரம், உஜ்ஜயினி, மதுரா, வாரணாசி.

  • மேற்கு கடற்கரை துறைமுகம் மேலைக் கடற்கரை.

  • கல்யாண், கால்போர்ட் .

  • வணிக சந்தை - மங்களூர், மலபார், சலோப்பானா, நயோபடானா , பக்தோ படானா.

  • கிழக்கு கடற்கரை துறைமுகம் கீழைத் துறைமுகம் .

  • வங்காளம், தாமிரலிப்தி (பாகியான் சீனப்பயணி குறிப்புகள்).

  • நாரத ஸ்மிருதி வணிகம் செயல்பாடு அமைப்பு பற்றி கூறுகிறது .

  • பிரகஸ்பதி ஸ்மிருதி தீர்ப்புகள் பற்றி கூறுகிறது .

  • மண்ட்சோர் கல்வெட்டு-வங்கி அமைப்பு , வணிக குழு பற்றி கூறுகிறது.

  • நாணயங்கள் :


  • தங்கம் வெள்ளி செப்பு நாணயங்களை வெளியிட்டனர் .

  • தங்க நாணயம் அதிகம்.

  • நாணயங்கள் அமைப்பு முறை முதலில் வெளியிட்டவர்.

  • சமுத்திரகுப்தர் எட்டுவகை நாணயத்தை சமுத்திரகுப்தர் வெளியிட்டார்.

  • கட்டிடக்கலை :


  • கட்டுமான கோயில்களை முதலில் அறிமுகப்படுத்தினார் .

  • பாறை குடைவரைக் கோயில்கள் - அஜந்தா, எல்லோரா( மகாராஷ்ட்ரா) பாக் கோயில்( மத்திய பிரதேசம்) உதயகிரி (ஒரிசா).

  • நாகரி, திராவிட பாணி கலைகள் வளர்ச்சி பெற்றன .

  • ஸ்தூபிகள் - சமத் (உத்தரப் பிரதேசம்) ரத்தினகிரி (ஒடிசா) பீர்பூர்கான் பாக் பதாமி (குவாலியர்.)

  • இந்த ஓவியங்கள் அஜந்தா மத்திய தேசிய ஓவியப் பள்ளியின் சிறந்த ஓவியம் (ஜாதகக் கதைகள்).

  • இலங்கை சிகிரியா ஓவியம் அஜந்தாவின் தாக்கத்தை கொண்டுள்ளது .

  • சுடுமண் (பிரஸ்கோ வகை காணப்படுகிறது).

  • மண்பாண்டங்கள் முத்திரையில் செய்யப்பட்டது .

  • சிகப்பு நிற காண்டங்கள் .

  • சிறு களிமண் உருவங்கள் .

  • கிடைத்த இடங்கள் - பஷார், அச்சிசத்திரா, ஹஸ்தினபூர் மற்றும் ராய்ப்பூர்.

  • சிற்பங்கள் :


  • கல் சிற்பம்.

  • சார்நாத் - (புத்தரின் நின்றநிலை சிலை ).

  • உதயகிரி - வராக அவதார சிலை .

  • உலோக சிற்பம்.

  • நாளந்தா - பீகார் 18 அடி உயரமுள்ள (புத்தரின் செப்பு சிலை).

  • சுல்தான்காஞ்ச் - ஏழரை அடி புத்தரின் சிலை (1 டன் எடை கொண்டது) பார்மிங்ஹாம் அருங்காட்சியகம்.

  • சமஸ்கிருத இலக்கியம் :


  • பிராகிருதம் பேசும் மொழி.

  • சமஸ்கிருத ஆட்சி மொழி, கல்வெட்டு மொழி.

  • பிரம்மி வடிவிலிருந்து தேவநாகரி வரிவடிவம் வளர்ச்சி பெற்றது .

  • சமஸ்கிருத இலக்கணம் :


  • பாணினி - அஷ்டத்யாயி.

  • பதஞ்சலி - மகாபாஷ்யம்.

  • அமரசிம்மன் - அமரகோசம்.

  • சந்திர கோவியர் --சந்திர வியாகரணம் (வங்கப் பகுதியின் சிறந்த பௌத்த அறிஞர்) .

  • ராமாயணம் மகாபாரதம் 18 புராணங்கள் தொகுக்கப்பட்டது.

  • சுரங்கம் உலோகவியல் :


  • செழிப்பு பெற்ற தொழில் சுரங்கத்தொழில் என அமரசிம்மன், காளிதாசர், வராகமிகிரர் கூறுகின்றனர்.

  • பீகார் (இரும்பு), ராஜஸ்தான் (செம்பு). மெஹ்ருளி இரும்பு தூண் கல்வெட்டு.

  • பயன்படுத்திய உலோகம்-- இரும்பு ,தங்கம், தாமிரம், தகரம், ஈயம் பித்தளை, செம்பு, மைக்கா, மாங்கனிஸ், மணிவெங்கலம், சிகப்பு சுண்ணாம்பு.

  • மதம் :


  • பௌத்த இலக்கியம் -பாலி மொழியில் இருந்தன பின் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

  • எழுத்தாளர் --ஆரிய தேவர், ஆரிய சங்கர்.

  • வசுபந்து --தர்க்கவியல் (முழுமையான முதல் பௌத்த நூல்) - சீடர் திக்நாகர்.

  • சமண இலக்கியம் :


  • பாலி மொழியிலும் இருந்தன -பின் பிராகிருதம்- அதற்குப்பின் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

  • விமலா எழுதிய சமண ராமாயணம்.

  • சித்த சேன திவாகரா தர்க்க சாஸ்திரம் (சமண நூலின் அடித்தளம்).

  • பிராகிருதம் பல வடிவங்கள் :


  • அரசவைக்கு வெளியில் இருந்தது.

  • மதுரா-சூரசேனி வடிவம்.

  • அவுத் பண்டல்கண்--அர்தமாகதி.

  • நவீன பீகார் -மாதி வடிவம்.

  • நாளந்தா பல்கலைக்கழகம் :


  • முதலாம் குமார குப்தர் காலத்தில் உருவானது மகாவிஹரா என பெயர் பெற்றது.

  • பழுது பார்த்தவர் தர்மபாலர் .

  • நாளந்தா சமஸ்கிருத சொல்லுக்கு அறிவை அளிப்பவர் என பொருள்.

  • ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டில் சிறப்பு பெற்றது.

  • கிபி 1200 வரை இருந்தது (முகமது பின் பக்தியார் கில்ஜி இதனை இடித்தார்).

  • ஹர்ஷரின் பேரரசு காலத்தில் சிறப்பு பெற்றது.

  • பாட்னா 45 கிலோமீட்டர் தொலைவில் பீகாரில் ஷெரிப் நகரில் உள்ளது .

  • எட்டு மகா பாடசாலைகள் இருந்தன.

  • மூன்று நூலகங்கள் இருந்தன.

  • யுவான் சுவாங் நளந்தா பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார்.

  • சீனா, கொரியா,மத்திய ஆசியா, திபெத் மக்கள் கல்வி கற்றனர்.

  • கணிதம் வானியல் மருத்துவம்

  • பூஜ்ஜியம் கண்டுபிடிப்பு தசம எண் முறை மரபு வழி சொத்து.

  • ஆரியபட்டர் வராகமிகிரர் பிரம்மகுப்தர்-- கணித வானியல் அறிஞர்கள் (those are great mathematician in Gupta period).

  • ஆரியபட்டர் நூல் --சூரிய சித்தாந்தம் (கிரகணம் பற்றி கூறுகிறது), ஆரிய பட்டியம் (கணிதம், கோணவியல், அல்ஜிப்ரா.)

  • தன்வந்திரி -ஆயுர்வேத மருத்துவ நிபுணர்.

  • சரகர் மருத்துவ அறிவியல் அறிஞர்.

  • சுசுருதர்-- அறுவை சிகிச்சை செய்த முதல் இந்தியர்.

  • வராகமிகிரர் --பிருஹத் சம்ஹிதா.(இந்நூல் மருத்துவம், புவியியல், தாவரம், இயற்கை மற்றும் வரலாறு பற்றியது) பஞ்ச சித்தாந்திகா (ஐந்து வான இயல்) பிருஹத் ஜாதிகா மற்ற படைப்புகள்.

  • பிரம்மகுப்தர் கணிதம் வானவியல் நூல்கள் சித்தார்த்தா கண்டகாத்யகா நூல்.

  • இக்காலத்தில் வாலாபியில் சமண சமய மாநாடு கூட்டப்பட்டது என வாக்பதர் எழுதியுள்ளார்.

  • சுவேதாம்பரர்ல்களின் சமண விதி இயற்றப்பட்டது.

No comments:

Popular Posts