Monday, October 03, 2022

TNPSC G.K - 160 | மௌரிய பேரரசு.

மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும் :


  • இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு அதிக பகுதியை ஆட்சி செய்தனர்.
  • முக்கிய வருவாய் - வரி ஆகும்.
  • மெகஸ்தனிஸ் இடமிருந்து தகவல் பெற்று ஒரு மையப்படுத்தப்பட்ட அரசுபற்றிக் கிரேக்க வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • அர்த்த சாஸ்திரம் கூறுவது.
  • தலைமை அமைச்சர், புரோகிதர், ராணுவ தளபதி - இவர்களின் ஊதியம் 48,000 பணம்.
  • போர் வீரர் ஊதியம் 500 பணம்.

மாகாண நிர்வாகம் :


  • நாடு அதன் தலைவர் அரசர் - அமைச்சரவை, மதகுருக்கள், மகாமாத்திரியர்கள் (செயலாளர்கள்).
  • தலைநகர் பாடலிபுத்திரம்.
  • 4 மாகாணங்கள் - தலைவர் அரச பிரதிநிதி
    • 1. சுவர்ண கிரி - (கர்னூல்) ஆந்திரா.
    • 2. உஜ்ஜயினி - (அவந்தி, மாளவம்).
    • 3. வடமேற்கு - தட்சசீலம்.
    • 4. தென்கிழக்கு ஒடிசா - (தோசாலி).
  • வரி வசூலிப்பவர் -சமஹர்த்தா.

மாவட்டம் மற்றும் கிராம நிர்வாகம் :


  • மாவட்ட நிர்வாகம் --ஸ்தானிகர்.
  • கோபா-- ஐந்து அல்லது பத்து கிராமங்களின் பொறுப்பாளர்.
  • நகர நிர்வாகம் --நகரகா.
  • கிராமங்கள் தன்னாட்சி பெற்று இருந்தன.
  • நிர்வாகம் --குழுக்களால் நியமிக்கப்பட்ட - கிராமணி.

நீதி நிர்வாகம் :


  • .இருவகை நீதிமன்றம்
    • 1. தர்மஸ்தியா.
    • 2. கந்தகோசந்தனா.
  • தர்மஸ்தியா.
    • திருமணம் வாரிசுரிமை குடிமை உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மதச் சடங்குகள் அறிந்த
      • 3 நீதிபதிகள்
      • 3 அமாத்தியாக்கள் (செயலாளர்கள்)
  • கந்த கோசந்தனா
    • காந்தகோசந்தனா என்பதன் பொருள் முள் எடுத்தல்
    • சமூக விரோத பிரச்சனைகள்
    • 3 நீதிபதிகள்
    • 3 செயலாளர்கள்
  • ஒற்றர்களைக் கொண்டது
  • தண்டனைகள் மிகக் கடுமையானது

அசோகரின் அரசு :


  • யுக்தர்கள் - கீழ்நிலை அதிகாரிகள்.
  • இராஜிக்கர்கள்  - கிராம நிர்வாகம்.
  • பிரதேசிகர்கள் - மாவட்டத் தலைவர்.

அசோகரின் கட்டளைகள் :


  • 1. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் செய்து தகவல் சேகரித்தனர்.
  • 2. தமக்குத் தேவையான தகவல்களும் ஆலோசனைகளும் தரப்பட வேண்டுமென அசோகர் கூறினார்.
  • 3. அனைத்து மதங்களுக்கும் அமைதி நிலவ வேண்டும்.
  • 4. மருத்துவ வசதி தருவது அரசின் பணி.

பொருளாதாரம் சமூகம் :


  • வேளாண்மை பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பு
  • “தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்”, “கம்பளி வளரும் செடி”என மெகஸ்தனிஸ் தனது குறிப்பில் கூறுகிறார்
  • நெசவு அடுத்த முக்கிய தொழில்
  • காசி, வாரணாசி, வங்கம், காமரூபம் (அசாம்) மற்றும் மதுரை
  • நெசவுக்கு சிறப்பு பெற்ற இடங்கள் என அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது
  • பட்டுப் பொதுவாகச் சீனப் பட்டு என்று அழைக்கப்பட்டது
  • இரும்பு பிரித்தெடுக்கும் முறை அறிந்திருந்தனர். இத்தொழில்நுட்பம் கிமு 500 பெரிய முன்னேற்றம் அடைந்தது
  • கைவினைத் தொழில் நுட்பம் --பமுகா (பிரமுகா=தலைவர்) & ஜெட்டா (ஜேஷ்டா= மூத்தவர்)
  • தொழில்கள் நிர்வாகம் -சேனி (ஸ்ரேனி) வணிக குழு
  • ஸ்ரேனிகளுக்கு இடைப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு - மகாசேத்தி காண்பார்

வணிகம் :


  • விதிஷா, உஜ்ஜயினி வழியாக வணிகம் நடைபெற்றது
  • புத்த ஜாதகக் கதைகள்வணிகம்பற்றியய தகவல் கூறுகின்றன
  • பர்மா, மாலத்தீவு மற்றும் இலங்கை உடன் கடல் வாணிபம் செய்தனர்
  • வணிக கூட்டத் தலைவர் --மகா சர்த்தவாகா
  • பொருள் எடுத்துச்சொல்ல நுழைவு வரி வசூலிக்கப்பட்டது
  • அவுரி, தந்தம், ஆமை ஓடு, வாசனை திரவியம் மற்றும் அபூர்வ
  • மரக்கட்டை எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
  • வெள்ளி நாணயம் அதிகம் பயன்படுத்தப்பட்டது

பாடலிபுத்திரம் :


  • மாபெரும் நகர்
  • பெரிய செல்வம் மிக்க நகரம்
  • கங்கை நதி மற்றும் சோன் நதிகள் சங்கமமாகும் இடத்தில் இருந்தது
  • இணைகரம் வடிவம் கொண்டது
  • 14 கிலோ மீட்டர் நீளம் 2 ½ கிலோமீட்டர் அகலம் கொண்டது
  • 64 வாசல்கள் கொண்டிருந்தது
  • 570 கண்காணிப்பு கோபுரங்கள் காணப்பட்டது
  • 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது

கலை பண்பாடு :


  • சமஸ்கிருத மொழி இலக்கிய இலக்கணம் வளர்ச்சி பெற்றது காரணம் பாணினி படைப்புகள் மற்றும் அவற்றுக்கு உரை எழுதியவரும் நந்தர்களின் சமகாலத்தவருமான காத்யாயனரால் வளர்ச்சி பெற்றது
  • புத்த சமய நூல்கள் பொதுவாகப் பாலி மொழியில் இருந்தன
  • இசைக்கருவிகள், இசை நடனம் மற்றும் நாடகம் போன்ற கலைகள்பற்றி
  • அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது

No comments:

Popular Posts