TNPSC G.K - 197 | பொதுத்தமிழ் - திருமுருகாற்றுப்படை.
திருமுருகாற்றுப்படையின் உருவம் :
- பொருள் - ஆற்றுப்படை
 
- திணை - புறத்திணை
 
- பாவகை - ஆசிரியப்பா
 
- அடி எல்லை - 317
 
கடவுள் வாழ்த்து போன்றது :
- பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
 
- பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
 
- வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.
 
புலவர், தலைவன் :
- பாடிய புலவர் - நக்கீரர்
 
- பாட்டுடைத் தலைவன் - முருகப் பெருமான்
 
வேறு பெயர் :
உரை :
- நச்சினார்க்கினியர் உரை
 
- பரிமேலழகர் உரை
 
முருகனின் அறுபடை வீடு :
- தலங்கள் தலக்குறிப்பு
 
- திருப்பரங்குன்றம் மதுரைக்கு தென்மேற்கில் உள்ளது
 
- திருச்சீர்அலைவாய் சீராக வந்து மோதும் அலைகளின் கரை வாயிலில் அமைந்துள்ள திருச்செந்தூர்
 
- திரு ஆவின்குடி பொதினிமலை. நாளடைவில் இதுவே பழனி மலை என் ஆயிற்று.
 
- திருவேரகம் இதனை திருப்பதி என்று நச்சினார்கினியர் கூறுகிறார்
 
- மலைப்பகுதி முருகன் குடியிருக்கும் குன்றுகள்
 
- பழமுதிர்சோலை மதுரையை அடுத்துள்ள அழகர் மலை. இது திருமால் இருஞ்சோலை எனவும் வழங்கப்படுகிறது.
 
நூல் குறிப்பிடும் செய்திகள் :
- முதல் பகுதி - திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
 
- இரண்டாம் பகுதி - திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
 
- மூன்றாம் பகுதி - திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
 
- நான்காம் பகுதி - திருவேரகம்(திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
 
- ஐந்தாம் பகுதி - மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
 
- ஆறாம் பகுதி - பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.
 
பொதுவான குறிப்புகள் :
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
 
- நக்கீரர் பாடியவை - நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை
 
- ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.
 
- முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.
 
- இது பதினோராம் திருமுறையில் வைத்து சைவ நூலில் ஒன்றாக போற்றப்படுகிறது
 
- இடம்பெற்ற சொல் உலகம்
 
முக்கிய அடிகள் :
- உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
 
- பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)
 
- இழுமென இழிதரும் அருவிப்
 
- பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)
 
- ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
 
- மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
 
- முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
 
- கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்
 
 
 
 
 
  
 
 
 
 
 
0 Comments