Wednesday, October 12, 2022

TNPSC G.K - 213 | பொதுத்தமிழ் - ஏலாதி.

ஏலாதியின் உருவம் :


  • ஆசிரியர் = கணிமேதாவியார்.
  • பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80.
  • பாவகை = வெண்பா.
  • உரையாசிரியர்= பாலசுந்தரம்பிள்ளை.

பெயர்க்காரணம் :


  • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்றுஇந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

பொதுவான குறிப்புகள் :


  • இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலைநூற்றைம்பது.
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
  • நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்.
  • கனி மேதாவி என்ற சொல்  இவர் சோதிடத்தில்  வல்லவர் என்பதை உணர்த்துகிறது.  
  • இந்நூல்  மகடூஉ  முன்னிலை அமைப்பை கொண்டது.
  • தமிழுக்கு அருமருந்து போன்ற இலக்கியம்.
  • அருகன் வணக்கம் சொல்லி நூலை தொடங்குவதால் சமணராக இருக்கலாம். 

மேற்கோள் :


  • தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி. வாய்இழந்தவாழ்வினர், வணிகம் போய்இழந்தார்                 கைத்தூண்பொருள் இழந்தார் கண் இலவர்க்கு ஈந்தார். வைத்து வழங்கிவாழ்வார்.
  • சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது. மேவல் எளிது; அரிது மெய்போற்றல்.

No comments:

Popular Posts