Sunday, October 16, 2022

TNPSC G.K - 223 | பொதுத்தமிழ் - திருக்குறள்.

நூல் குறிப்பு :


  • திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல்
  • குறள் ➝இரண்டடி வெண்பா
  • திரு ➝சிறப்பு அடைமொழி
  • குறள் 80 குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்ந்துவதால் ➝ ஆகுபெயர்
  • திருக்குறள் ➝ அடையெடுத்த கருவியாகுபெயர்
  • திருக்குறளின் முதல் பெயர்➝ முப்பால்
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • திருக்குறள் 3 முப்பால் பிரிவுகளையும் 9 இயல்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டது
  • அறத்துப்பால்➝38 அதிகாரங்கள்➝4 இயல்கள் பாயிரவியல் (4), இல்லறவியல் (20), துறவறவியல் (13), ஊழியல்(01)
  • பொருட்பால்➝70 அதிகாரங்கள் ➝ 3 இயல்கள் அரசியல் (25), அமைச்சியல்(32), ஒழிபியல்(13)
  • காமத்துப்பால்➝25அதிகாரங்கள்➝ 2இயல்கள் களவியல்(7), கற்பியல்(18)

இந்தப் பிரிவுகள் கூறுவன :


  • தனிமனிதனது வாழ்வை கூறுவது --> அறத்துப்பால்
  • சமுதாய வாழ்வை கூறுவது -->பொருட்பால்
  • அக வாழ்வை கூறுவது--> இன்பத்துப்பால்

வேறு பெயர்கள் :


  • உலகபொதுநூல்
  • அறவிலக்கியம்
  • தமிழர் திருமறை
  • முப்பால்
  • பொய்யாமொழி
  • வாயுறைவாழ்த்து
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • திருவள்ளுவம்
  • தமிழ்மறை
  • பொதுமறை
  • திருவள்ளுவ பயன் (நச்சினார்க்கினியர்)
  • பொருளுரை (மணிமேகலை)
  • முதுமொழி
  • தமிழ் மாதின் இனிய உயர்நிலை (கவிமணி)
  • நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு
  • திருவள்ளுவ பயன் எனக் கூறியவர் -----நச்சினார்க்கினியார்
  • தமிழ் மாதின் இனிய உயிர் நிலை ---கவிமணி
  • தேவர் எனக் கூறியவர் ---நச்சினார்க்கினியர்
  • தெய்வப்புலவர் என கூறியவர்-- இளம்பூரணார்
  • பொருளுரையெனக் கூறியவர் ---சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
  • பொய்யில் புலவர் எனக் கூறியவர் --சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)

திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :


  • நாயனார்
  • தேவர்(நச்சினார்கினியர்)
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர் (இளம்பூரணார்)
  • நான்முகனார்
  • மாதானுபங்கி(தாய்க்கு நிகரானவர்)
  • செந்நாப்போதார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர் (மணிமேகலை)
  • பொய்யாமொழிப் புலவர்
  • வான்புகழ் வள்ளுவர்

உரையாசிரியர்கள் :


  • மணக்குடவர்
  • பரிமேலழகர்
  • பரிப்பெருமாள்
  • திருமலையர்
  • மல்லர்
  • தருமர்
  • காளிங்கர்
  • தாமத்தர்
  • பரிதி
  • நச்சர்
  • இவர்கள் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதிய பதின்மர் ஆவர்
  • சிறந்த உரை பரிமேலழகர் உடையது
  • முதன் முதலில் உரையிட்டவர்--- மணக்குடவர்
  • முதன் முதலில் அச்சிட்டவர்----- தஞ்சை ஞானப்பிரகாசர் (1812)
  • உரை எழுதியவர்கள் காலத்தால் முந்தியவர் ----தருமர்
  • காலத்தால் பிந்தியவர் ---பரிமேலழகர்
  • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்
  • பரிமேலழகர் உரையுடன் முதல் முதலில் திருக்குறள் வெளியிட்டவர் ---ராமானுஜ கவிராயர்
  • "தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர் திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தார் இவர்கள்" என்பது பழம்பாடல்

சிறப்புகள் :


  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
  • பதினெண்கீழ்கணக்கு நூல்களில் இதுவே மிகப் பெரியது, அதிக பாடல்கள் கொண்டது
  • மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறநூல் திருக்குறள்
  • அரங்கேற்றப்பட்ட இடம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் 7 இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் உள்ளது
  • திருக்குறளில் 10 அதிகாரங்களில் பெயர்கள் உடைமை -என முடியும்
  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமையைக் குறித்து சான்றோர்கள் பலர் பாடிய பாக்களின் தொகுப்பு
  • விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்
  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
  • இங்கிலாந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
  • திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும் யானை 8 முறையும் பாம்பு 3 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது
  • திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் குறிப்பறிதல் (பொருட்பால்) குறிப்பறிதல் (காமத்துப்பால்)
  • கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன
  • 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன
  • "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து" என்ற குறளில் 1 5 7 என்ற பகா எண்கள் உள்ளது
  • ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும் ஒரே சொல் நான்கு முறை 22 குறட்பாக்களிலும் ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம்பெற்றுள்ளது
  • தமிழ், கடவுள் என்ற சொற்கள் இடம் பெறவில்லை
  • ஒரு முறை மட்டும் இடம் பெற்ற எழுத்து --- ளீ, ங
  • 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன
  • மொத்த சொற்கள் ---12000
  • மொத்த எழுத்துக்கள்---- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்து 247-இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் ---அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் ---நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை ---குன்றிமணி
  • பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து --ஔ
  • இடம்பெற்ற இரு மரங்கள் --பனை, மூங்கில்
  • அதிகம் பயன்படுத்திய எழுத்து --னீ(1705)
  • இடம்பெறாத ஒரே எண் 9
  • கோடி என்ற சொல் 7 முறை இடம்பெற்றுள்ளது
  • 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
  • ஏழுபது கோடி ஒரு முறை வந்துள்ளது
  • 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் தமிழக அரசு நிறுவியது

மொழிபெயர்ப்புகள் :


  • 107 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது
  • ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழிப்பெயர்த்தவர்----ஜீ.யு.போப்(1886)
  • ஆங்கிலத்தில் 40பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்கபோலி மொழிக்கு மொழிபெயர்த்தவர் ---கிட்டு சின்னமணி
  • இலத்தீன்------வீரமாமுனிவர்
  • ஜெர்மன்-----கிரால்
  • ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர்கள்---- உ.வே.சு.ஐயர், இராஜாஜி
  • பிரெஞ்சு-----ஏரியல்
  • வடமொழி----- அப்பாதீட்சிதர்
  • தெலுங்கு --வைத்தியநாத பிள்ளை
  • இந்தி ---பி.டி.ஜெயின்
  • திருக்குறள் கருத்தை 1994ஆம் ஆண்டு முதன்முறையாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் கிண்டெர்ஸ்லே

குறிப்புகள் :


  • திருக்குறள் முன்னோடி ---புறநானூறு
  • திருக்குறளின் விளக்கம்----- நாலடியார்(சமண முனிவர்கள்)
  • திருக்குறளின் பெருமையைக் கூறுவது ----திருவள்ளுவமாலை
  • திருக்குறளில் சாரம் எனப்படுவது ---நீதிநெறி விளக்கம் (குமரகுருபரர்)
  • திருக்குறளின் ஒழிப்பு எனப்படுவது ----திருவருட்பயன் (உமாபதி சிவம்)
  • திருக்குறள் நடையியல் நூல் ஆசிரியர் ----இ.சுந்தரமூர்த்தி
  • அரசு, வேளாண்மை, மருந்து, அன்பு, உயிர் மற்றும் மகிழ்ச்சி என்ற சொற்கள் பயன்படுத்தபட்டுள்ளது

கூற்றுகள் :


  • நூலும் இரண்டும் சொல்லுக்குறுதி---> நாலடியார், திருக்குறள்
  • தமிழுக்கு கதி --->கம்பராமாயணம், திருக்குறள்
  • முப்பெரும் நூல்கள்==திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
  • "பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில் "

புகழுரைகள் :


  • பாரதியார்" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" "கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை "
  • பாரதிதாசன் "வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே", "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே"
  • மனோன்மணியம் சுந்தரனார் "வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொருநீதி".
  • சுத்தானந்தபாரதி. "எம்மதம் எவ்வினமும் எந்நாளும் சம்மதம் என்று ஏற்கும் தமிழ் வேதம்"
  • திரு.வி.க "திருக்குறள் ஒரு வகுப்பிற்கோ ஒரு மதத்திற்கோ ஒரு நிறத்திற்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டிற்கோ உரியதன்று அது மன்பதைக்கு உலகுபொது"
  • கி.ஆ.பெ.விஸ்வநாதன்" திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் எனும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரியாது", "திருக்குறள் என்று நூல் தோன்றியிராவிட்டால் தமிழ் மொழி உலகிற்கு தெரியாது "
  • " அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" ஔவையார்
  • கால்டுவெல் "உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்"
  • காந்தியடிகள் " சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலின திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் "
  • இறையனார் "குன்றாத செந்தளிர் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மண்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்"
  • இடைகாடர்" கடுகை துளைத்து ஏழ்கடல் புகட்டிக் குறுகத் தரித்து குறள்"
  • "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்- மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி"----கபிலர்

திருவள்ளுவமாலை :


  • திருக்குறள் பெருமை கூற எழுந்த நூல்
  • தொகுத்தவர்-----> கபிலர்
  • 53 புலவர்கள் பாடியுள்ளனர்
  • மொத்த பாடல்கள் 55
  • இரு பாடல்கள் பாடிய புலவர்கள்--ஔவையார், கபிலர்
  • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா மற்றும் வடமலை வெண்பா ஆகியவையும் திருக்குறள் பெருமை கூறவனவாகும்

திருவள்ளுவர் காலம் :


  • கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
  • கி.மு.31 = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
  • கி.மு.1-3 = இராசமாணிக்கனார்

No comments:

Popular Posts