இயல் 1 - எங்கள் தமிழ் / ஒன்றல்ல இரண்டல்ல / பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- "அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழின் குரலாகும்" என்ற பாடல் வரிகளின் ஆசிரியர்: நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (+3)
- தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர்: வெ.இராமலிங்கனார்
- நாமக்கல் கவிஞர் மற்றும் காந்திய கவிஞர் என்று அழைக்கப்படுபவர்: வெ.இராமலிங்கனார் (+1)
- "கத்தி இன்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது" என்ற பாடலின் ஆசிரியர்: வெ.இராமலிங்கனார்
- பகுத்தறிவு கவிராயர் என புகழப்படுபவர்: உடுமலை நாராயணகவி
- "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்" என்ற அடிகளின் ஆசிரியர்: உடுமலை நாராயணகவி (+1)
- பகைவரை வெற்றி கொண்டவரை பாடும் இலக்கியம்: பரணி இலக்கியம் (+1)
- முல்லைக்குத் தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்ற வள்ளல்: வேள்பாரி
- புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்த வள்ளல்: குமண வள்ளல்
- மொழியின் உயிர்நாடியாக விளங்குவது: பேச்சு மொழி
- பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறியவர்: தொல்காப்பியர் (+2)
- "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்" என்ற பாடல் வரிகளின் ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன் (+1)
- தமிழ் எழுத்துகள் வகை: 2 (முதல் எழுத்து, சார்பு எழுத்து)
- சார்பெழுத்து வகைகள்: பத்து
- தனது மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம்: குற்றியலிகரம் (+1)
இயல் 2 - காடு / விலங்குகள் உலகம் / இந்திய வனமகன்
- சுரதாவின் இயற்பெயர்: இராசகோபாலன்
- சுரதா எவ்வாறு அழைக்கப்படுகிறார்: உவமை கவிஞர்
- காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்: கா, கால், கான், அடவி, புரவு, அழுவம், பொதி, கணையம்
- கிளியின் மொழி போன்ற இனிய சொற்களை பேசும் பெண்ணை நோக்கிப் பாடப்படும் இசைபாடல் வகை: கிளிக்கண்ணி
- "நாவற்பழத்திற்கு" உவமையாகக் கூறப்படுவது: கோலிகுண்டு
- ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ்: கொல்லிப்பாவை
- ராஜமார்த்தாண்டன் சிறந்த தமிழ் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல்: கொங்குதேர் வாழ்க்கை
- தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம்: முண்டந்துறை புலிகள் காப்பகம் (+1)
- ஆசிய யானைகளில் ஆண்-பெண் யானைகளை வேறுபடுத்துவது: தந்தம்
- கரடி ஒரு: அனைத்துண்ணி
- இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் உள்ள இடம்: கிர் சரணாலயம், குஜராத்
- ஜாதவ் பயேங் (Jadav Payeng) எவ்வாறு அழைக்கப்படுகிறார்: இந்தியாவின் வனமகன்
- ஜாதவ் பயேங்க்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு: 2015 (+1)
இயல் 3 - புலி தங்கிய குகை / பாஞ்சை வளம் / முத்துராமலிங்க தேவர் / கப்பலோட்டிய தமிழர்
- "சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ" என்ற பாடல் வரிகளைப் பாடியவர்: காவற்பெண்டு
- காவற்பெண்டு பாடிய பாடல் இடம்பெற்ற நூல்: புறநானூறு
- வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டவர்: நா.வானமாலை
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நடத்திய வார இதழ்: நேதாஜி
- தேவரை "சுத்த தியாகி" எனப் பாராட்டியவர்: பெரியார் (+1)
- முத்துராமலிங்க தேவரை "தேசியம் காத்த செம்மல்" எனப் பாராட்டியவர்: திரு.வி.க
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- தேவர் குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு: 1934
- "சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று கூறியவர்: பாலகங்காதர திலகர்
- வ.உ.சி எந்த இலக்கியத்தைப் படித்துத் தன் தொல்லை எல்லாம் மறந்தேன் என்று கூறினார்: தொல்காப்பியம்
- சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர்: ரா.பி. சேதுபிள்ளை
- இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் நூல்: ரா.பி. சேதுபிள்ளை எழுதிய தமிழின்பம் (+1)
- வழக்கு வகைகள்: 2 (இயல்பு வழக்கு, தகுதி வழக்கு)
இயல் 4 - கவின்மிகு கப்பல் / தமிழரின் கப்பற்கலை
- பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்: தொண்டைமான் இளந்திரையன்
- "உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்: அகநானூறு (+1)
- பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிகண்டு நூல்: சேந்தன் திவாகரம்
- பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்ற பிற்காலச் சோழர்கள்: ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன்
- கப்பல் கட்டும் கலைஞர்கள்: கம்மியர்
- கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம்: ஏரா (+1)
- கப்பலைச் செலுத்துவதற்கும் திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி: சுக்கான்
- கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவுவது: நங்கூரம்
- "அறிவியல் புனைகதைகளின் தலைமகன்" என அழைக்கப்படுபவர்: ஜூல்ஸ் வெர்ன்
- ஜூல்ஸ் வெர்ன் எழுதிய புகழ் பெற்ற புதினம்: ஆழ்கடலின் அடியில்
- இலக்கிய முறைப்படி சொற்களின் வகைகள்: 4 (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்)
இயல் 5 - இன்பத்தமிழ் கல்வி / அழியாத செல்வம் / வாழ்விக்கும் கல்வி
- பாரதிதாசனின் இயற்பெயர்: கனக சுப்புரத்தினம்
- பாரதிதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல்: பிசிராந்தையார்
- நாலடியார் என்னும் நூலை எழுதியவர்கள்: சமண முனிவர்கள்
- "வேளாண் வேதம்" என்று அழைக்கப்படும் நூல்: நாலடியார்
- "கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறும் நூல்: திருக்குறள்
- வீ. முனுசாமி எழுதிய புகழ் பெற்ற நூல்: உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்
- "இளமையில் கல்" என்று கூறியவர்: அவ்வையார்
- நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்: பவணந்தி முனிவர்
- தமிழில் உள்ள மொத்த ஓரெழுத்து ஒருமொழி சொற்கள்: 42
- 'ஆ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்: பசு
- 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்: மாமரம் (பெரிய, விலங்கு போன்ற பிற பொருட்களும் உண்டு)
இயல் 6 - ஒரு வேண்டுகோள் / பேசும் ஓவியம் / தமிழ் ஒளிர் இடங்கள்
- "மண்ணின் வனப்புக்கு" புதிய அழகுகள் சேர்ப்பவர்கள் என்று தேனரசன் குறிப்பிடுபவர்: கலையுலகப் பிரம்மாக்கள் (படைப்பாளர்கள்) (+2)
- இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர்: சிலேடை
- "கட்டி அடிக்கையால் கால்மாறி பாய்கையால்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்: காளமேகப் புலவர்
- ஆயக்கலைகளின் எண்ணிக்கை: 64
- ஓவியம் வரையப்படும் துணிகளின் பெயர்கள்: எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
- கருத்துப்பட ஓவியத்தை (Cartoon) தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியவர்: பாரதியார்
- நாட்காட்டி ஓவியங்கள் (Calendar Art) எவ்வாறு அழைக்கப்படும்: பசார் பெயிண்டிங்
- தமிழ்நாட்டின் மைய நூலகம்: கன்னிமரா நூலகம்
- உ.வே.சா நூலகம் அமைந்துள்ள இடம்: சென்னை
- திருவள்ளுவர் சிலையின் மொத்த உயரம்: 133 அடி (கன்னியாகுமரி பாறையுடன் சேர்த்து)
- உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ள இடம்: மதுரை
இயல் 7 - விருந்தோம்பல் / வயலும் வாழ்வும் / திருநெல்வேலி சீமை
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்: முன்றுறை அரையனார்
- முன்றுறை அரையனார் சார்ந்த சமயம்: சமணம்
- வாய்மொழி இலக்கியம் என வழங்கப்படுவது: நாட்டுப்புறப்பாடல்
- திருநெல்வேலிக்கு முற்காலத்தில் இருந்த பெயர்: வேணுவனம்
- "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று கூறியவர்: திருஞானசம்பந்தர் (+1)
- "தண்பொருநை புனல் நாடு" என்று திருநெல்வேலியைப் பாராட்டியவர்: சேக்கிழார்
- இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் மலை: குற்றால மலை
- இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுபவை: திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை
- தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது: பாளையங்கோட்டை
- குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர்: திரிகூடராசப்ப கவிராயர் (+1)
- டி.கே.சிதம்பரநாதர் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்: ரசிகமணி
- டி.கே.சிதம்பரநாதர் தனது வீட்டில் தொடங்கிய இலக்கிய அமைப்பின் பெயர்: வட்டத்தொட்டி
இயல் 8 - புதுமை விளக்கு / அறம் என்னும் கதிர் / ஒப்புரவு நெறி
- "வையம் தகளியா வார்கடலே நெய்யாக" என்று பாடியவர்: பொய்கை ஆழ்வார்
- பொய்கை ஆழ்வார் பாடியது: முதல் திருவந்தாதி
- "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" என்று பாடியவர்: பூதத்தாழ்வார்
- பூதத்தாழ்வார் பிறந்த ஊர்: மாமல்லபுரம்
- நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலைத் தொகுத்தவர்: நாதமுனி
- அறநெறிச்சாரம் என்னும் நூலை எழுதியவர்: முனைப்பாடியார்
- மக்கள் பணியே இறைப்பணியாக எண்ணித் தொண்டு செய்தவர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்: புறநானூறு (+1)
இயல் 9 - மழைப்பொழிவு / கண்ணியமிகு தலைவர் / ஆகுபெயர்
- கண்ணதாசனின் இயற்பெயர்: முத்தையா
- இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் கண்ணதாசன் எழுதிய நூல்: இயேசு காவியம்
- காயிதே மில்லத் என்னும் அரபு மொழிச் சொல்லின் பொருள்: சமுதாய வழிகாட்டி
- "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் திகழ்கிறார்" என்று கூறியவர்: அறிஞர் அண்ணா
- பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகிவருவது: பொருளாகு பெயர்


0 Comments