ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 19


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 19


வாழ்த்து, திருக்குறள் மற்றும் திராவிட மொழிகள்
எண்கேள்விவிடை
1.கம்பர் இயற்றிய அந்தாதி நூல்கள் யாவை?சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி.
2.திருக்குறள் பாடப்பட்டுள்ள வெண்பா வகை என்ன?ஈரடி வெண்பா.
3.திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் 'த' வரிசையில் தொடங்கும் பெயர்கள் யாவை?தருமர், தாமத்தர்.
4.திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் 'ப' வரிசையில் தொடங்கும் பெயர்கள் யாவை?பரிதி, பரிப்பெருமாள், பரிமேலழகர்.
5.விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல் எது?திருக்குறள்.
6.இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களுள் மூன்றாவது மற்றும் நான்காவதாகக் குறிப்பிடப்படுபவை எவை?ஆஸ்திரோ ஆசிய மொழிகள் மற்றும் சீன திபெத்திய மொழிகள்.
7.நடுத்திராவிட மொழிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.தெலுங்கு, கோண்டி.
8.'திராவிட இனம்', 'திராவிட நாகரிகம்' ஆகிய சொற்றொடர்களில் 'திராவிடம்' என்னும் சொல் எவ்வகையாக வந்துள்ளது?பெயரடையாக.
மதிப்புக்கல்வி, சிறுபஞ்சமூலம் மற்றும் பாஞ்சாலி சபதம்
எண்கேள்விவிடை
1.""அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளிவும் வாய்ந்தோர்" எனப் பாரதியாரைப் புகழ்ந்தவர் யார்?பாரதிதாசன்.
2.சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் காரியாசான், உடன் பயின்றவர் கணிமேதாவியர். இவர்களின் ஆசிரியர் யார்?மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார்.
3.சிறுபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?97 வெண்பாக்கள்.
4.சிறுபஞ்சமூலம் காலுக்கு அழகு என எதனைக் கூறுகிறது?பிறரிடம் இரந்து செல்லாமை.
5.சிறுபஞ்சமூலம் ஆராய்ச்சிக்கு அழகு என எதனைக் கூறுகிறது?முடிவை துணிந்துரைத்தல்.
6.பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் எத்தனை?5.
7.பாஞ்சாலி சபதத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?412.
8.திருதராட்டிரனின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?கௌரவர்கள்.
9.பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது?தூத்துக்குடி மாவட்டம்.
10.பாரதியாரின் பெற்றோர் யார்?சின்னசாமி மற்றும் இலக்குமி அம்மையார்.
11.பாரதியார் இயற்கை எய்திய நாள் எது?11.09.1921.
இக்காலக் கவிதைகள் மற்றும் கண்ணதாசன்
எண்கேள்விவிடை
1.""எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்தவையம்" - இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?பாரதிதாசன்.
2.""பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" என்ற பாடலைப் பாடிய காந்தியக் கவிஞர் யார்?நாமக்கல் கவிஞர்.
3.'மணிக்கொடி' இதழில் புதுக்கவிதை எழுதியவர்களுள் கு.ப.இராசகோபாலன் அல்லாத மற்றவர்கள் யார்?ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன்.
4.'எழுத்து' என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்களுள் சி.சு.செல்லப்பா அல்லாத மற்றவர்கள் யாவர்?எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி.
5.கோவை வானம்பாடி குழுவினர் இலக்கியத்தில் எதற்காகப் பாடுபட்டனர்?புதுக்கவிதையைப் பரவலாக்க.
6.இருபதாம் நூற்றாண்டின் கவிதை வளர்ச்சியில் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தவை எவை?பாரதியின் கவிதைகள்.
7.பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பித்துக் காட்டுவதில் சிறந்து விளங்குபவர் யார்?வாணிதாசன்.
8.""கதிர் வெடித்துப் பிழம்புவிழக் கடல் கொதித்துச் சூடேற்ற" எனத் தமிழ்தாயின் பழைமையைப் பறை சாற்றுபவர் யார்?கண்ணதாசன்.
9.கண்ணதாசன் இயற்றிய புதினங்களுள் 'ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி' தவிர மற்றொன்று எது?வேலங்குடித் திருவிழா.
10.கண்ணதாசன் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்களுள் 'தென்றல்', 'முல்லை' தவிர வேறு இரண்டினைக் கூறுக.கண்ணதாசன், கடிதம், தமிழ்மலர்.
வகுப்பறை திறன்கள், எட்டுத்தொகை மற்றும் திருவிளையாடற் புராணம்
எண்கேள்விவிடை
1."இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் கருதிக் காய்வனோ" - மனோன்மணியம் பெ.சுந்தரனார் பாடலில் இரவி என்பது எதைக் குறிக்கிறது?சூரியன்.
2.மனோன்மணியம் பெ.சுந்தரனார் பாடலில் 'சிறை' என்பதன் பொருள் என்ன?இறக்கை.
3.""வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும் போரில் சிறந்து பொலிவாகும்" எனப் பாடியவர் யார்?காளமேகப்புலவர்.
4.பத்துப்பாட்டில் நக்கீரனார் இயற்றிய நூல்கள் எவை?திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை.
5.எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருள் பற்றியது குறுந்தொகை எனில், புறப்பொருள் பற்றியது எது?புறநானூறு.
6.குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், வேறெதனைப் பாடியுள்ளார்?பாரதம்.
7.குறுந்தொகையின் அடிவரையறை என்ன?4-8.
8.வங்கிய சூடாமணி பாண்டியன் இறைவனுக்கு எதனைச் சாத்தி வழிபட நந்தவனத்தை ஏற்படுத்தினான்?சண்பகமாலை.
9.பாண்டிய மன்னரின் குலத்தெய்வம் எது?சொக்கநாதன் (அ) சுந்தர பாண்டியன்.
10.திருவிளையாடற் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவரின் தந்தையார் பெயர் என்ன?மீனாட்சி சுந்தர தேசிகர்.
11.வேதாரண்ய புராணம் எனப்படும் திருமறைக்காட்டுப்புராணம் எவ்வகை நூல்?மொழிப்பெயர்ப்பு நூல்.
12.கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாகிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் எது?திருவிளையாடற்புராணம்.
13.திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதிய பண்டிதமணி யார்?ந.மு.வேங்கடசாமி.
14.""காமம் செப்பாது கண்டது மொழியுமோ" எனத் தொடங்கும் பாடல் யாருக்காக இறைவனால் பாடப்பட்டது?தருமிக்காக.
கடற்பயணம், கெலன் கெல்லர் மற்றும் செவிச்சொல்
எண்கேள்விவிடை
1.பொருளீட்டச் செல்லும் பயணத்தை தொல்காப்பியர் இருவகையாகப் பிரிக்கிறார். அவை யாவை?காலில் (தரைவழிப் பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு.
2.கடலைக் குறிக்கும் பெயர்களுள் 'ஆழி', 'ஆர்கலி', 'முந்நீர்' தவிர மற்றவை எவை?வாரணம், பௌவம், பரவை, புணரி.
3.நாவாய், படகு, பரிசில், திமில், வங்கம், பஃறி என்பன எதனைக் குறிக்கும் பெயர்கள்?மரக்கலத்தைக் குறிக்கும் பெயர்கள்.
4.காவிரிப்பூம்பட்டினத்தில் சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் யாருடைய காலத்தில் இருந்தன?அதியமானின் முன்னோர் காலத்தில்.
5."அரிசி" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது?ஒரைஸா.
6."முசிறி" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது?முசிரில்.
7."கருவூர்" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது?கரோரா.
8."காவிரி" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது?கபிரில்.
9.""திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று கூறியவர் யார்?ஔவையார்.
10.மருதநில அரசனது கோட்டையைப் புறநானூறு எதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறது?நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு.
11.புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்களின் கொடி அசைவதைப் பற்றிக் குறிப்பிடும் சங்க நூல் எது?பட்டினப்பாலை.
12.காற்றின் துணைகொண்டு இயங்கிய பெரிய நாவாய்க்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?பாய்மரக்கப்பல்.
13.பொன்னைச் சுமந்து வந்த யவனர்கள், அதற்கு ஈடாக எதனைப் பெற்றுச் சென்ற செய்தியை அகநானூறு கூறுகிறது?மிளகைப் பெற்றுச் சென்ற.
14.கெலன் கெல்லர் படித்த பெர்கின்ஸ் பள்ளி எங்கு அமைந்துள்ளது?அமெரிக்காவில் பாஸ்டன் நகரில்.
15.பாஸ்டன் நகரில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளி எது?ஹோரஸ்மான்.
16.கெலன் கெல்லருக்கு அலெக்சாண்டர் கிரகாம்பெல் எதற்கு உதவினார்?பள்ளியில் சேர.
17.கெலன் கெல்லர் பயின்ற கல்லூரியின் பெயர் என்ன?கேம்பிரிட்ஜ் ரெட்கிளிப்.
18.திருக்குறளில் 'ஏழு' என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது?எட்டுக் குறட்பாக்களில்.
19.""ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்(து)..." எனத் தொடங்கும் சீட்டுக்கவிப் பாடலை எழுதியவர் யார்?அந்தகக்கவி வீரராகவர்.
20.குதிரையைக் குறிக்கும் பெயர்களுள் 'கந்துகம்', 'கோணம்', 'கொக்கு' தவிர மற்றவை எவை?கோடை, குந்தம், பாடலம், மா, சடிலம், கிள்ளை.
21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் காஞ்சி மாவட்டம் பூதூர் எனில், அவர் வாழ்ந்த ஊர் எது?பொன்விளைந்த களத்தூர்.
22.அந்தகக்கவி வீரராகவருக்கு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசாக அளித்தவர் யார்?இலங்கை மன்னன் பரராசசேகரபாடி.
23.தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் உள்ள 1113 பாடல்களில், வீரராகவர் இயற்றிய பாடல்கள் எத்தனை?39.
24.'கந்துகம்' என்பதன் பொருள் பந்து, 'பாடலம்' என்பதன் பொருள் என்ன?பாதிரிப்பூ.
25.'குந்தகம்' என்பதன் பொருள் சூலம், 'சடிலம்' என்பதன் பொருள் என்ன?சடை.
ஆனந்தரங்கர், முத்தொள்ளாயிரம் மற்றும் கலிங்கத்துப்பரணி
எண்கேள்விவிடை
1.ஆனந்தரங்கரின் தந்தை பெயர் திருவேங்கடம். அவர் எங்கு கல்வி பயின்றார்?எம்பார் என்பவரிடம்.
2.ஆனந்தரங்கர் புதுவையில் எப்பதவி வகித்தார்?திவானாகப் பதவி வகித்தார்.
3.'சொஸ்த லிகிதம்' என்பதில் 'சொஸ்த' என்பதன் பொருள் தெளிந்த/உரிமையுடைய எனில், 'லிகிதம்' என்பதன் பொருள் என்ன?கடிதம் அல்லது ஆவணம்.
4.சுங்குசேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட ஆளுநர் யார் என ஆனந்தரங்கர் நாட்குறிப்பு கூறுகிறது?ஆளுநர் முசே துய்ப்ளே.
5.செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாகவும், செங்கற்பட்டு மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமிக்கப்பட்டவர் யார்?ஆனந்தரங்கர்.
6.ஆனந்தரங்கருக்கு 'மன்சுபேதார்' என்னும் பட்டத்தையும், மூவாயிரம் குதிரைகளையும் வழங்கியவர் யார்?முசபர்சங்.
7.ஆனந்தரங்கர் நாட்குறிப்பை "யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி" என்று கூறியவர் யார்?கே.கே.பிள்ளை.
8.ஆனந்தரங்கர் கோவை இயற்றியவர் தியாகராச தேசிகர் எனில், ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் இயற்றியவர் யார்?அரிமதி தென்னகன்.
9.மு.வரதராசனாரின் தம்பி எழில் எதைப்பற்றி வகுத்து அனுப்புமாறு மு.வ.விற்கு கடிதம் எழுதியிருந்தார்?ஆக்கவேலை முறை பற்றி.
10.""தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து" என்று கடிதம் மூலம் தம்பிக்கு அறிவுரை கூறியவர் யார்?மு.வரதராசனார்.
11.முத்தொள்ளாயிரத்தின் 108 வெண்பாக்கள் எந்த நூல்வாயிலாகக் கிடைத்துள்ளன?புறத்திரட்டு.
12.பாண்டிய மன்னனின் யானை தன் தந்தங்களை எதனைக் கொண்டு மார்போலை எழுதும் என முத்தொள்ளாயிரம் கூறுகிறது?எழுத்தாணியாக.
13.96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் எது?கலிங்கத்துப் பரணி.
14.""ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" என்று கூறும் நூல் எது?பன்னிரு பாட்டியல்.
15.கலிங்கத்துப் பரணியைத் "தென்தமிழ்த் தெய்வபரணி” எனப் புகழ்ந்தவர் யார்?ஒட்டக்கூத்தர்.
உலகளாவிய தமிழர், திரு.வி.க., மணிமேகலை, மூலிகைகள் மற்றும் காமராசர்
எண்கேள்விவிடை
1.திருவிழாக்களில் காவடி, தேர் இழுப்பது இன்னும் எந்த தீவில் நடைபெற்று வருகின்றன?ரியூனியன் தீவில்.
2.சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பை கூறும் ஐம்பெருங்காப்பிய நூல் எது?மணிமேகலை.
3.தேம்பாவணி, பரமார்த்த குரு கதை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?வீரமாமுனிவர்.
4.திரு.வி.க. அவர்களின் மனைவியின் பெயர் என்ன?கமலாம்பிகை.
5.திரு.வி.க இயற்கை எய்திய நாள் எது?17.9.1953.
6.உமர்கய்யாம் பாடல்கள் தமிழில் மொழிபெயர்த்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் என்ன?1876 - 1954.
7.கவிமணியின் உமர்கய்யாம் பாடல்கள் தொகுப்பில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை யாது?115.
8.மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் வழங்கிய மூன்று மந்திரங்கள் எவை?பசியற்றிருக்கவும், விரும்பும் உருவம் எடுக்கவும், வான்வழிச் செல்லவும்.
9.கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை எச்சமயத்தை சார்ந்த காப்பியம்?பௌத்தம்.
10.மணிமேகலையில் ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதையாக அமைந்துள்ளது?24வது காதை.
11.""உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று கூறும் நூல்கள் எவை?புறநானூறு, மணிமேகலை.
12.தொண்டைக் கட்டைத் தொலைப்பது மிளகு எனில், வயிற்றுச் சூட்டைத் தணிப்பது எது?சீரகம்.
13.குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்துவது வெங்காயம் எனில், நீர்க்கோவையை நீக்குவது எது?தேங்காய்.
14.""பசிப்பிணி என்னும் பாவி” என்று கூறும் நூல் எது?மணிமேகலை.
15.தூதுவளையை 'ஞானப்பச்சிலை' என்று கூறியவர் யார்?வள்ளலார்.
16.'குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு' என்பதில் குமரி என்பது எந்த மூலிகையைக் குறிக்கும்?கற்றாழை.
17."அறிவியல் ஆய்வு செவ்வாய் நீ அன்றாடச் செய்தி படிப்பாய்!" என்று பாடிய பாவலரேறு யார்?பெருஞ்சித்திரனார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement