அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- ஒளிப்படி இயந்திரத்தை (Xerox) கண்டுபிடித்தவர்: செஸ்டர் கார்ல்சன்
- செஸ்டர் கார்ல்சன் ஒளிப்படக்கருவியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு: 1959
- தொலைநகல் (Fax) இயந்திரத்தை கண்டுபிடித்தவர்: ஜியோவான்னி காசில்லி
- தானியக்கப் பண இயந்திரம் (ATM) நிறுவப்பட்ட ஆண்டு: 1967 (ஜூன் 27)
- இணைய வணிகத்தை (Online Shopping) கண்டுபிடித்தவர்: மைக்கல் ஆல்ட்ரிச்
- வையக விரிவு வலையை (WWW) உருவாக்கியவர்: டிம் பெர்னர்ஸ் லீ (1990)
- இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு: 1991
- இந்திய தொடர் வண்டி இணையப் பதிவு (IRCTC) அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு: 2002
- இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை: விக்ரம் சாராபாய்
- இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்: ஆர்யபட்டா (1975)
- இந்திய ஏவுகணை நாயகன்: அப்துல் கலாம்
- இஸ்ரோவின் 9-வது தலைவர்: சிவன்
- சிவன் உருவாக்கிய செயலி: சித்தாரா (SITARA)
- இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்: வளர்மதி
- மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி: நேவிக் (NAVIC)
- சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநர்: மயில்சாமி அண்ணாதுரை
- மங்கள்யான் திட்டத்தின் இயக்குநர்: அருணன் சுப்பையா
- தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் வகுப்பு: பத்தாம் வகுப்பு
- ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் வகுப்பு: ஒன்பதாம் வகுப்பு
- பெண்கல்விக்கு பரிந்துரை செய்த முதல் குழு: ஹண்டர் குழு (1882)
- இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர்: சாவித்திரிபாய் பூலே
- ஈ.வே.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித்தொகை திட்டம் வழங்கப்படுவது: பட்ட மேற்படிப்புக்காக
- முத்துலட்சுமி ரெட்டி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு: 1952
- தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கு துணை நின்ற சமூக சீர்திருத்தவாதி: மூவலூர் ராமாமிர்தம்
- சாரதா சட்டம் (குழந்தை திருமண தடைச் சட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு: 1929
- "தந்தை பெரியார்" என்று அழைக்கப்பட்டவர்: ஈ.வே.ரா.
- சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1925
- பெரியாருக்கு "தெற்காசியாவின் சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கிய அமைப்பு: யுனெஸ்கோ (UNESCO)
- பெரியார் நடத்திய ஆங்கில இதழ்: ரிவோல்ட் (Revolt)
- ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம்: சரஸ்வதி மகால் நூலகம் (தஞ்சை)
- உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம்: கன்னிமாரா நூலகம் (சென்னை)
- இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் உள்ள இடம்: கொல்கத்தா
- தேசிய நூலக நாள்: ஆகஸ்ட் 9
- "ஓ, என் சமகாலத் தோழர்களே" கவிதையை எழுதியவர்: வைரமுத்து
- வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்ற முறை: 7 முறை
- தொல்காப்பியம் உடைய இயல்கள்: 27
- "அக்னி சிறகுகள்" நூலின் ஆசிரியர்: அப்துல் கலாம்
- "மின்மினி" நூலின் ஆசிரியர்: ஆயிஷா நடராஜன்
- "ஏன்? எதற்கு? எப்படி?" நூலின் ஆசிரியர்: சுஜாதா
- "குடும்ப விளக்கு" நூலின் ஆசிரியர்: பாரதிதாசன்
- "கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்" என்றவர்: பாரதிதாசன்
- "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வேண்டும்" என்று பாடியவர்: பாரதியார்
- "சிறுபஞ்சமூலம்" நூலின் ஆசிரியர்: காரியாசான்
- சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள்: ஐந்து சிறிய வேர்கள்
- காரியாசான் யாருடைய மாணாக்கர்: மாக்காயனார்
- "வீட்டிற்கோர் புத்தகசாலை" என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்தியவர்: பேரறிஞர் அண்ணா
- இராவண காவியத்தை இயற்றியவர்: புலவர் குழந்தை
- இராவண காவியம் கொண்டிருக்கும் காண்டங்கள்: 5
- நாச்சியார் திருமொழி மொத்தப் பாடல்கள்: 143
- "சூடிக்கொடுத்த சுடர்கொடி" என அழைக்கப்படுபவர்: ஆண்டாள்
- "சக்தி வைத்தியம்" (சிறுகதை) நூலின் ஆசிரியர்: தி. ஜானகிராமன்
- "ஒரு சிறு இசை" சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்: வண்ணதாசன் (2016)
- "சூடிய பூ சூடற்க" (சிறுகதை) நூலின் ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
- "மின்சாரப்பூ" (சிறுகதை) நூலின் ஆசிரியர்: மேலாண்மை பொன்னுசாமி
- "அப்பாவின் சிநேகிதர்" நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்: அசோகமித்திரன் (1996)
- சீவக சிந்தாமணி காப்பியத்தின் ஆசிரியர்: திருத்தக்க தேவர்
- சீவக சிந்தாமணி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது: மணநூல்
- விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்: சீவக சிந்தாமணி
- முத்தொள்ளாயிரம் பாடும் நாடுகள்: சேர, சோழ, பாண்டிய
- முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்: பெயர் தெரியவில்லை
- மதுரைக்காஞ்சி நூலின் ஆசிரியர்: மாங்குடி மருதனார்
- மதுரைக்காஞ்சி அடிகள்: 782
- மதுரைக்காஞ்சியில் மதுரையை மட்டும் சிறப்பித்துக் கூறும் அடிகள்: 354
- யசோதர காவியம் சார்ந்த சமயம்: சமணம்
- "மகனுக்கு எழுதிய கடிதம்" நூலின் ஆசிரியர்: நா. முத்துக்குமார்
- "கல்யாண்ஜி" என்ற பெயரில் கவிதை எழுதுபவர்: வண்ணதாசன் (கல்யாணசுந்தரம்)
- "ஒரு சிறு இசை" நூலுக்காக கல்யாண்ஜி சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு: 2016
- குறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள பாடல்கள்: 401
- குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர்: சௌரிப்பெருமாள் அரங்கனார் (1915)
- குறுந்தொகையின் அடிவரையறை: 4 அடி முதல் 8 அடி வரை
- சு. சமுத்திரம் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்: வேரில் பழுத்த பலா
- "வாடாமல்லி", "பாலைப்புறா" சிறுகதைகளின் ஆசிரியர்: சு. சமுத்திரம்
- "ஞான பாநு" என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர்: சுப்பிரமணிய சிவா
- "சிற்பியின் மகள்" நூலின் ஆசிரியர்: பூவண்ணன்
- "அப்பா சிறுவனாக இருந்தபோது" நூலை தமிழில் எழுதியவர்: முகமது ஷெரீபு
- "சிற்பக் கலை" பற்றிய குறிப்புகள் காணப்படும் தொன்மையான இலக்கண நூல்: தொல்காப்பியம்
- பல்லவர் கால சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று: மாமல்லபுரம்
- "செப்புத் திருமேனிகளின் பொற்காலம்" என்று அழைக்கப்படுவது: சோழர் காலம்
- நாயக்கர் காலச் சிற்பங்களில் உச்சநிலை படைப்பு: பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள்
- நாகசுரக் கருவி செய்யப்படும் மரம்: ஆச்சா மரம்
- நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது: புணர்ச்சி
- யாப்பிலக்கணத்தின் உறுப்புகள்: 6
- அசையின் வகைகள்: 2 (நேரசை, நிரையசை)
- தொடையின் வகைகள்: 8
- முதல் எழுத்து ஒன்றி வருவது: மோனைத் தொடை
- இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது: எதுகைத் தொடை
- இறுதி எழுத்து அல்லது ஓசை ஒன்றி வருவது: இயைபுத் தொடை
- அணி என்பதன் பொருள்: அழகு
- உவமையும் உவமேயமும் ஒன்று எனத் தோன்றக் கூறுவது: உருவக அணி
- இந்திய தேசிய ராணுவம் (INA) யாரால் உருவாக்கப்பட்டது: மோகன் சிங்
- இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்: ஜான்சி ராணி படை
- ஜான்சி ராணி படைப்பிரிவின் தலைவர்: லட்சுமி சாகல் (லட்சுமி)
- "டெல்லி சலோ" என்று முழங்கியவர்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- பகலில் நடைபெறும் கடைவீதியின் பெயர்: நாளங்காடி
- இரவில் நடைபெறும் கடைவீதியின் பெயர்: அல்லங்காடி
- புதுக்கவிதையின் தந்தை: ந. பிச்சமூர்த்தி
- ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை: ஸயன்ஸுக்கு பலி
- லா ஓட்சு (Lao Tzu) எந்த நாட்டைச் சேர்ந்தவர்: சீனா
- லா ஓட்சு எழுதிய தத்துவ நூல்: தாவோ தே ஜிங்
- வைரமுத்து தேசிய விருது பெற்ற முறை: 7 முறை


0 Comments