Ad Code

Responsive Advertisement

6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-9


801. முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் எது? விடை: சாயல்குடி

802. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் என்ன? விடை: நேதாஜி

803. "தேசத்தைக் காத்தல்" என்ற தலைப்பில் விவேகானந்தரின் பெருமையை சாயல்குடியில் பேசியவர்? விடை: முத்துராமலிங்கத் தேவர்

804. முத்துராமலிங்கத் தேவரின் பேச்சைக் கேட்டு "இது போன்ற பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை" என்று பாராட்டியவர்? விடை: காமராசர்

805. முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு யார்? விடை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

806. நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு? விடை: 1939 (செப்டம்பர் 6)

807. இந்திய அரசு முத்துராமலிங்கத் தேவருக்குத் தபால் தலை வெளியிட்ட ஆண்டு? விடை: 1995

808. "தென்னாட்டுச் சிங்கம்" என்று தேவரை அழைத்தவர்? விடை: அறிஞர் அண்ணா

809. "தேசியம் உடல், தெய்வீகம் உயிர்" எனக் கருதி மக்கள் தொண்டாற்றியவர்? விடை: முத்துராமலிங்கத் தேவர்

810. தேவர் எந்த நோயின் காரணமாகத் தன் கல்வியைத் தொடர முடியவில்லை? விடை: பிளேக் நோய்

811. தேவர் 1934-ஆம் ஆண்டு குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து எங்கு மாநாடு நடத்தினார்? விடை: கமுதி

812. வாய்பூட்டுச் சட்டத்தால் மேடையில் பேசத் தடை விதிக்கப்பட்ட வடநாட்டுத் தலைவர் யார்? விடை: பாலகங்காதர திலகர்

813. வாய்பூட்டுச் சட்டத்தால் மேடையில் பேசத் தடை விதிக்கப்பட்ட தென்னாட்டுத் தலைவர் யார்? விடை: முத்துராமலிங்கத் தேவர்

814. தேவர் பர்மா சென்றிருந்த போது அங்கு யாருக்காகப் போராடினார்? விடை: புத்த பிட்சுகள்

815. முத்துராமலிங்கத் தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் எத்தனை? விடை: 20075

816. தேவர் சிறையில் கழித்த நாட்கள் எத்தனை? விடை: 4000

817. "சித்தாலு" என்ற கவிதையின் ஆசிரியர் யார்? விடை: நாகூர் ரூமி

818. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன? விடை: முகம்மது ரஃபி

819. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம் எது? விடை: தஞ்சாவூர்

820. நாகூர் ரூமி 80-களில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்? விடை: கணையாழி

821. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகள் யாவை? விடை: நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல்

822. "கப்பலுக்குப் போன மச்சான்" என்ற நாவலை எழுதியவர்? விடை: நாகூர் ரூமி

823. "செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும்" என்று யாரைக் குறிப்பிடுகிறார் நாகூர் ரூமி? விடை: சித்தாள்

824. தாவோ தே ஜிங் என்ற நூலின் ஆசிரியர்? விடை: லாவோட்சு (Lao Tzu)

825. லாவோட்சு எந்த நாட்டைச் சேர்ந்தவர்? விடை: சீனா

826. லாவோட்சு எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? விடை: கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

827. "வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது" என்று லாவோட்சு எதனைக் கூறுகிறார்? விடை: சிரிப்பு

828. "அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன்" என்று கூறியவர்? விடை: ஐன்ஸ்டீன்

829. "எந்த ஒன்றும் உருவாக வேண்டுமென்றால் உண்டும் வேண்டும் இல்லையும் வேண்டும்" என்றவர்? விடை: லாவோட்சு

830. சீனா ஞானி கன்பூசியஸின் சமகாலத்தவர் யார்? விடை: லாவோட்சு

831. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய அறிவியல் புனைகதை நூல்? விடை: 80 நாளில் உலகத்தைச் சுற்றி

832. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய மற்றொரு நூல்? விடை: பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்

833. "ஆழ்கடலின் அடியில்" என்ற கதையில் வரும் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர்? விடை: நாட்லஸ்

834. நாட்லஸ் கப்பலின் தலைவர் யார்? விடை: நெமோ

835. நெமோவின் கப்பலில் இருந்த திமிங்கல வேட்டைக்காரர் யார்? விடை: நெட்

836. "சிப்பாய்" என்னும் சொல்லின் பொருள்? விடை: போர்வீரன்

837. "சலாம்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்? விடை: வணக்கம்

838. "பந்தர்" என்பது எவ்வகைப் போலி? விடை: ஈற்றுப்போலி (பந்தல் - பந்தர்)

839. "மைஞ்சு" என்பது எவ்வகைப் போலி? விடை: முதற்போலி (மஞ்சு - மைஞ்சு)

840. "அஞ்சு" என்பது எவ்வகைப் போலி? விடை: முற்றுப்போலி (ஐந்து - அஞ்சு)

841. "அரையர்" என்பது எவ்வகைப் போலி? விடை: இடைப்போலி (அரசர் - அரையர்)

842. "இடர் ஆழி நீங்குவே" - இதில் இடர் என்பதன் பொருள்? விடை: துன்பம்

843. "ஞானச்சுடர்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: ஞானம் + சுடர்

844. அன்பு = நெய், ஆர்வம் = தகளி, சிந்தை = இடுதிரி, ஞானம் = விளக்கு - இது யாருடைய பாடல்? விடை: பூதத்தாழ்வார்

845. காந்தியடிகள் எப்போதும் எதைப் பேசினார்? விடை: வாய்மையை

846. அறக்கதிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: அறம் + கதிர்

847. "இளமை" என்னும் சொல்லின் எதிர்ச்சொல்? விடை: முதுமை

848. விளைநிலம் என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: இனிய சொல்

849. விதை என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: ஈகை

850. கலை என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: வன்சொல்

851. உரம் என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: உண்மை

852. "கல்லலை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: கல் + அலை

853. "தலையசைத்து" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: தலை + அசைத்து

854. "இல்லாது இயங்கும்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? விடை: இல்லாதியங்கும்

855. "செயல் இழக்க" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? விடை: செயலிழக்க

856. நுட்பமாகச் சிந்தித்து அறிவது? விடை: நுண்ணறிவு

857. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்? விடை: சேர்த்தல்

858. "இடமெல்லாம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: இடம் + எல்லாம்

859. "மாசற" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: மாசு + அற

860. "குற்றம் இல்லாதவர்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? விடை: குற்றமில்லாதவர்

861. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: பசி + இன்றி

862. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: படிப்பு + அறிவு

863. காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: காடு + ஆறு

864. "வண்டு" - இச்சொல்லில் அமைந்துள்ள மெல்லினத்திற்கான இன எழுத்து? விடை: ண (ட் - ண இன எழுத்துகள்)

865. "பள்ளி மறுதிறப்பு" கதையை எழுதியவர்? விடை: சுப்ரபாரதிமணியன்

866. சுப்ரபாரதிமணியன் நடத்தும் இதழ்? விடை: கனவு

867. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு? விடை: 1780

868. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்? விடை: வேலு நாச்சியார்

869. வேலு நாச்சியாரின் அமைச்சர் யார்? விடை: தாண்டவராயர்

870. வேலு நாச்சியாரின் தளபதிகள் யார்? விடை: பெரிய மருது, சின்ன மருது

871. வேலு நாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுத் தலைவி யார்? விடை: குயிலி

872. உடையாள் என்பவருக்கு நடுகல் நட்டு வழிபட்டவர்? விடை: வேலு நாச்சியார்

873. தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் எதிலிருந்து தோன்றியது? விடை: சிலம்பு (ஒலிக்கும் மலை)

874. சிலப்பதிகாரத்தில் வரும் "சிலம்புகழி நோன்பு" எதைக் குறிக்கிறது? விடை: திருமணத்திற்குப் பின் சிலம்பை நீக்குதல்

875. வில்லுப்பாட்டு என்பது எவ்வகை இலக்கியம்? விடை: வாய்மொழி இலக்கியம்

876. உழவர் சேற்று வயலில் நாற்று நடும்போது பாடும் பாட்டு? விடை: நடவுப்பாட்டு

877. "தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர்? விடை: மறைமலை அடிகள்

878. "தமிழ் வாழ்க" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: விழைவுத் தொடர்

879. "நேற்று மழை பெய்தது" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: செய்தித் தொடர்

880. "எவ்வளவு உயரமான மரம்!" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: உணர்ச்சித் தொடர்

881. "உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: வினாத் தொடர்

882. "பூக்களைப் பறிக்காதீர்" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: கட்டளைத் தொடர்

883. சிலப்பதிகாரத்தில் வரும் "வண்ணமும் சுண்ணமும்" என்பது எவ்வகைத் தொடர்? விடை: எண்ணும்மை

884. "வெறுக்கை" என்பதன் பொருள்? விடை: செல்வம்

885. "பாசவர்" என்பதன் பொருள்? விடை: வெற்றிலை விற்போர்

886. "ஓசுநர்" என்பதன் பொருள்? விடை: எண்ணெய் விற்போர்

887. "கண்ணுள் வினைஞர்" என்பதன் பொருள்? விடை: ஓவியர்

888. "மண்ணீட்டாளர்" என்பதன் பொருள்? விடை: சிற்பி

889. "கிழி" என்பதன் பொருள்? விடை: துணி

890. "துகில்" என்பதன் பொருள்? விடை: பட்டு

891. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்? விடை: நெடுஞ்செழியன்

892. பத்துப்பாட்டு நூல்களுள் அடி அளவில் பெரியது எது? விடை: மதுரைக்காஞ்சி

893. "கூலம்" என்பதன் பொருள்? விடை: தானியம்

894. "மறுமை" என்பதன் பொருள்? விடை: மறுபிறவி

895. "தமக்கை" என்பதன் பொருள்? விடை: அக்கா

896. "நவ்வி" என்பதன் பொருள்? விடை: மான்

897. "முகமன்" என்பதன் பொருள்? விடை: ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்

898. "பண்" என்பதன் பொருள்? விடை: இசை

899. "வள்" என்பதன் பொருள்? விடை: கூர்மை

900. "கனகச்சுனை" என்பதன் பொருள்? விடை: பொன்வண்ண நீர்நிலை


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement