TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-71
தமிழ் வினாவிடைத் தொகுப்பு (2001 - 2100)
பொருத்தமான பொருள் அறிதல்:| எண் | வினா | விடை |
|---|
| 2001 | ஆர்வலர் என்பதன் பொருள் என்ன? | அன்புடையவர் |
| 2002 | புன்கணீர் என்பதன் பொருள் என்ன? | துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் |
| 2003 | பூசல்தரும் என்பதன் பொருள் என்ன? | வெளிப்பட்டு நிற்கும் |
| 2004 | என்பு என்பதன் பொருள் என்ன? | எலும்பு (இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது) |
| 2005 | ஈனும் என்பதன் பொருள் என்ன? | தரும் |
| 2006 | வையகம் என்பதன் பொருள் என்ன? | உலகம் |
| 2007 | என்ப என்பதன் பொருள் என்ன? | என்பார்கள் |
| 2008 | மறம் என்பதன் பொருள் என்ன? | வீரம் |
| 2009 | என்பிலது என்பதன் பொருள் என்ன? | எலும்பில்லாதது (புழு) |
| 2010 | அன்பிலது என்பதன் பொருள் என்ன? | அன்பில்லாத உயிர்கள் |
| 2011 | வன்பாற்கண் என்பதன் பொருள் என்ன? | பாலைநிலத்தில் (வன்பால் + கண்) |
| 2012 | தளிர்த்தற்று என்பதன் பொருள் என்ன? | தளிர்த்தது போல |
| 2013 | வற்றல்மரம் என்பதன் பொருள் என்ன? | வாடிய மரம் |
| 2014 | புறத்துறுப்பு என்பதன் பொருள் என்ன? | உடல் உறுப்புகள் |
| 2015 | அகத்துறுப்பு என்பதன் பொருள் என்ன? | மனத்தின் உறுப்பு |
| 2016 | எவன் செய்யும் என்பதன் பொருள் என்ன? | என்ன பயன்? |
| 2042 | அணியர் என்பதன் பொருள் என்ன? | நெருங்கி இருப்பவர் |
| 2043 | என்னாம் என்பதன் பொருள் என்ன? | என்ன பயன் |
| 2044 | சேய் என்பதன் பொருள் என்ன? | தூரம் |
| 2045 | செய் என்பதன் பொருள் என்ன? | வயல் |
| 2048 | தலைசாயுதல் என்பதன் பொருள் என்ன? | ஓய்ந்து படுத்தல் |
| 2049 | வண்மை என்பதன் பொருள் என்ன? | கொடை |
| 2050 | உழுபடை என்பதன் பொருள் என்ன? | விவசாயம் செய்யப் பயன்படும் கருவிகள் |
| 2051 | கோணி என்பதன் பொருள் என்ன? | சாக்கு |
| 2052 | நடை என்பதன் பொருள் என்ன? | சாலையில் செல்லும் வண்டிகள் |
| 2053 | பறப்பு என்பதன் பொருள் என்ன? | பறக்கும் விமானம் போன்றவை |
| 2054 | உவந்து செய்வோம் என்பதன் பொருள் என்ன? | விரும்பிச் செய்வோம் |
| 2056 | மேலவர் என்பதன் பொருள் என்ன? | மேலோர் |
| 2057 | கீழவர் என்பதன் பொருள் என்ன? | கீழோர் |
| 2058 | மற்றோர் என்பதன் பொருள் என்ன? | பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர் |
| 2059 | நெறியினின்று என்பதன் பொருள் என்ன? | அறநெறியில் நின்று |
| 2098 | நான்மணிக்கடிகையில் வரும் 'மடவாள்' என்பதன் பொருள் என்ன? | பெண் |
| 2099 | தகைசால் என்பதன் பொருள் என்ன? | பண்பில் சிறந்த |
| 2100 | காதல் புதல்வர் என்பதன் பொருள் என்ன? | அன்புமக்கள் |
இலக்கணம் மற்றும் மொழிப் பயன்பாடு:| எண் | வினா | விடை |
|---|
| 2017 | ஓலைச்சுவடி எழுத்துக்களில் எந்தெந்த வேறுபாடுகள் இருக்காது? | புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பு வேறுபாடு |
| 2034 | 'அ' என்னும் எழுத்து எதனைக் குறிப்பதாகக் கூறுவர்? | மனிதன் |
| 2035 | 'ங்' என்ற எழுத்துக்குப் பின்னால் வரும் இன எழுத்து எது? | க |
| 2036 | 'மஞ்சள்', 'அஞ்சாதே' என்னும் சொற்களில் எவை நட்பு எழுத்துக்கள்? | ஞ், ச |
| 2037 | 'தமக்குரியர்' என்பதனைப் பிரித்து எழுதுக? | தமக்கு + உரியர் |
| 2038 | 'அன்பீனும்' என்பதனைப் பிரித்து எழுதுக? | அன்பு + ஈனும் |
| 2039 | 'நிழலருமை' என்பதனைப் பிரித்து எழுதுக? | நிழல் + அருமை |
| 2041 | 'நன்கணியர்' என்பதனைப் பிரித்து எழுதுக? | நன்கு + அணியர் |
| 2082 | தமிழ் மொழியிலுள்ள உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை? | 216 |
| 2083 | தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை? | 247 |
| 2084 | "சிலர் + அழுவார்" என்பதனைச் சேர்த்து எழுதுக? | சிலரழுவார் |
| 2085 | "புகழ் + இழந்தேன்" என்பதனைச் சேர்த்து எழுதுக? | புகழிழந்தேன் |
| 2086 | "இரும்பாணிகள்" என்பதனைப் பிரித்து எழுதுக? | இரும்பு + ஆணிகள் |
| 2087 | "கொல்லருலை" என்பதனைப் பிரித்து எழுதுக? | கொல்லர் + உலை |
| 2094 | தன் எழுத்துடன் மட்டும் சேரும் மெய்யெழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படும்? | உடனிலை மெய்ம்மயக்கம் |
| 2095 | உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக? | பக்கம், அச்சம் |
| 2096 | தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் மெய்யெழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படும்? | வேற்று நிலை மெய்ம்மயக்கம் |
| 2097 | வேற்று நிலை மெய்ம்மயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக? | சார்பு, வாழ்க்கை |
நூல்கள் மற்றும் நூலகங்கள்:| எண் | வினா | விடை |
|---|
| 2018 | கீழ்த்திசைக் சுவடிகள் நூலகம் எங்கு அமைந்துள்ளது? | சென்னை |
| 2019 | அரசு ஆவணக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது? | சென்னை |
| 2020 | உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? | சென்னை |
| 2021 | சரசுவதி மகால் நூலகம் எங்கு அமைந்துள்ளது? | தஞ்சாவூர் |
| 2046 | சங்க நூல்கள் எனப்படுபவை எவை? | பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும் |
| 2047 | பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை எவ்வகை நூல்கள்? | அறநூல்கள் |
உ.வே.சா. குறித்த தகவல்கள்:| எண் | வினா | விடை |
|---|
| 2022 | உ.வே.சா. பதிப்பித்த எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? | எட்டு (8) |
| 2023 | உ.வே.சா. பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை? | பத்து (10) |
| 2024 | உ.வே.சா. பதிப்பித்த புராணங்கள் எத்தனை? | பன்னிரண்டு (12) |
| 2025 | உ.வே.சா. பதிப்பித்த உலா நூல்கள் எத்தனை? | ஒன்பது (9) |
| 2026 | உ.வே.சா. பதிப்பித்த கோவை நூல்கள் எத்தனை? | ஆறு (6) |
| 2027 | உ.வே.சா. பதிப்பித்த தூது நூல்கள் எத்தனை? | ஆறு (6) |
| 2028 | உ.வே.சா. பதிப்பித்த வெண்பா நூல்கள் எத்தனை? | பதிமூன்று (13) |
| 2029 | உ.வே.சா. பதிப்பித்த அந்தாதி நூல்கள் எத்தனை? | மூன்று (3) |
| 2030 | உ.வே.சா. பதிப்பித்த பரணி நூல்கள் எத்தனை? | இரண்டு (2) |
| 2031 | உ.வே.சா. பதிப்பித்த மும்மணிக்கோவை நூல்கள் எத்தனை? | இரண்டு (2) |
| 2032 | உ.வே.சா. பதிப்பித்த இரட்டை மணிமாலை நூல்கள் எத்தனை? | இரண்டு (2) |
| 2033 | உ.வே.சா எந்த ஆண்டு இயற்கை எய்தினார்? | 28.4.1942 |
| 2040 | உ.வே.சா.வின் பெருவெற்றிக்கும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன? | அவருடைய ஆர்வம் |
சூழலியல் மற்றும் விலங்குகள்:| எண் | வினா | விடை |
|---|
| 2060 | பறவைகளை இடப்பெயர்ச்சி செய்யத் தூண்டும் பருவநிலை மாற்றம் எந்த மாதத்தில் ஏற்படும்? | மே மாதம் |
| 2061 | உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கும் இடத்துக்குப் பெயர் என்ன? | பறவைகள் சரணாலயம் |
| 2062 | இந்தியாவில் ஏறத்தாழ எத்தனை வகையான பறவைகள் உள்ளன? | இரண்டாயிரத்து நானூறு |
| 2063 | பறவைகளை அவற்றின் உணவு மற்றும் வாழ்க்கை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? | ஐந்து வகையாகப் பிரிக்கலாம் |
| 2064 | சமவெளி மரங்களில் வாழும் பறவைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக? | மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக் குயில் |
| 2065 | நீர்நிலைகளில் வாழும் பறவைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக? | கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி |
| 2066 | மலைகளில் வாழும் சில பறவைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக? | இருவாச்சி, செந்தலைப்பூங்குருவி, மின்சிட்டு |
| 2076 | இந்தியாவில் எத்தனை வகையான பாம்புகள் உள்ளன? | இருநூற்று நாற்பத்து நான்கு |
| 2077 | உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பே பாம்பினம் தோன்றியது? | பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே |
| 2078 | இராஜநாகம் எத்தனை அடி நீளமுடையது? | 15 அடி |
| 2079 | பாம்புகள் எதை மென்று தின்பதில்லை? | இரையை |
| 2080 | பாம்பு எதனை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறது? | தரையின் அதிர்வுகளை |
| 2081 | பாம்பு தன் நாக்கை அடிக்கடி எதற்காக வெளியே நீட்டுகிறது? | சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்துகொள்ள |
பறவைகள் சரணாலயங்கள் (மாவட்டம்):| எண் | சரணாலயம் | மாவட்டம் |
|---|
| 2067 | கரிக்கிளி பறவைகள் சரணாலயம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
| 2068 | மேல்செல்வனூர் பறவைகள் சரணாலயம் | இராமநாதபுரம் மாவட்டம் |
| 2069 | பழவேற்காடு பறவைகள் சரணாலயம் | திருவள்ளூர் மாவட்டம் |
| 2070 | உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் | திருவாரூர் மாவட்டம் |
| 2071 | வடுவூர் பறவைகள் சரணாலயம் | தஞ்சாவூர் மாவட்டம் |
| 2072 | கரைவெட்டி பறவைகள் சரணாலயம் | பெரம்பலூர் மாவட்டம் |
| 2073 | வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் | சிவகங்கை மாவட்டம் |
| 2074 | வெள்ளோடு பறவைகள் சரணாலயம் | ஈரோடு மாவட்டம் |
| 2075 | கோடியக்கரை பறவைகள் சரணாலயம் | நாகப்பட்டினம் மாவட்டம் |
பொது அறிவு மற்றும் பிற தகவல்கள்:| எண் | வினா | விடை |
|---|
| 2055 | 'தமிழ்மகள்' எனப் பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்? | ஒளவையார் |
| 2088 | ஆற்றின் ஒரு சிறுகிளை எவ்வாறு அழைக்கப்படும்? | வாய்க்கால் |
| 2089 | நன்செய் நிலங்களில் எவை மிகுதியாய் விளையும்? | நெல்லும் கரும்பும் |
| 2090 | மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் என்ன? | தந்தம் |
| 2091 | உலகம் வெப்பமடையக் காரணம் என்ன? | வாகனப்புகை |
| 2092 | ஆறுகள் மாசடையக் காரணம் என்ன? | தொழிற்சாலைக் கழிவு |
| 2093 | மழை குறையக் காரணம் என்ன? | காடுகள் அழிப்பு |
0 Comments