TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-73
தமிழ்ச் சொற்கள் மற்றும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்:
| எண் | சொல்/கேள்வி | விடை |
|---|
| 2201 | 'சமஸ்தானம்' என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | அரசு |
| 2202 | 'முக்கியஸ்தர்' என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | முதன்மையானவர் |
| 2203 | 'இலாகா' என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | துறை |
| 2204 | 'அப்பாயிண்ட்' (Appoint) என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | பணி அமர்த்தல் |
| 2205 | 'பிரதானம்' என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | முதன்மை |
| 2206 | 'உத்தியோகஸ்தர்' என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | அலுவலர் |
| 2207 | 'பஸ்' (Bus) என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | பேருந்து |
| 2208 | 'கார்' (Car) என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | மகிழுந்து |
| 2209 | 'ஏரோப்பிளேன்' (Aeroplane) என்பதன் தமிழ்ச் சொல் என்ன? | வானூர்தி |
| 2231 | 'Bulletin' என்பதன் தமிழாக்கம் என்ன? | சிறப்புச் செய்தி இதழ் |
| 2232 | 'Deadline' என்பதன் தமிழாக்கம் என்ன? | குறித்தகாலம் |
| 2233 | 'Editorial' என்பதன் தமிழாக்கம் என்ன? | தலையங்கம் |
| 2234 | 'Fake News' என்பதன் தமிழாக்கம் என்ன? | பொய்ச்செய்தி |
| 2235 | 'Green Proof' என்பதன் தமிழாக்கம் என்ன? | திருத்தப்படாத அச்சுப்படி |
| 2236 | 'Layout' என்பதன் தமிழாக்கம் என்ன? | செய்தித்தாள் வடிவமைப்பு |
திருவிளையாடற் புராணம் குறித்த தகவல்கள்:
| எண் | கேள்வி | விடை |
|---|
| 2210 | பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள் யாவை? | திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி |
| 2211 | திருவிளையாடற் புராணம் உடைய காண்டங்கள் எவை? | மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் |
| 2212 | திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது? | பதினெட்டுப் படலம் |
| 2213 | திருவிளையாடற் புராணத்தின் கூடற்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது? | முப்பது படலம் |
| 2214 | திருவிளையாடற் புராணத்தின் திருவாலவாய்க் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது? | பதினாறு படலம் |
| 2215 | திருவிளையாடற் புராணத்தில் உள்ள மொத்தப் படலங்கள் எத்தனை? | அறுபத்து நான்கு படலங்கள் |
| 2216 | திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்? | ந.மு. வேங்கடசாமி நாட்டார் |
| 2217 | திருவிளையாடற் புராணத்தில் 'நம்பி' என அழைக்கப்படுபவர் யார்? | தருமி |
| 2229 | பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது? | நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) |
| 2230 | பரஞ்சோதி முனிவரின் தந்தையார் பெயர் என்ன? | மீனாட்சி சுந்தர தேசிகர் |
சொல் மற்றும் அதன் பொருள்:
அ) பொதுவான சொற்கள்:| எண் | சொல் | பொருள் |
|---|
| 2218 | புறம்பு | வெளியில் |
| 2219 | பனவன் | அந்தணன் |
| 2220 | கண்டம் | கழுத்து |
| 2221 | சீரணி | புகழ்வாய்ந்த |
| 2222 | ஓரான் | உணரான் |
| 2223 | நாற்றம் | நறுமணம் |
| 2224 | குழல் | கூந்தல் |
| 2225 | நுதல் விழி | நெற்றிக்கண் |
| 2226 | பொற்பங்கயத்தடம் | பொற்றாமரைக் குளம் |
| 2227 | நாவலன் | புலவர் |
| 2228 | கரந்தான் | மறைந்தான் |
| 2265 | களபம் | சந்தனம் |
| 2266 | துழாய் | துளசிமாலை |
| 2267 | புயம் | தோள் |
| 2268 | தைவந்து | தொட்டுத்தடவி |
| 2269 | பகழி | அம்பு |
| 2270 | நாமம் | பெயர் |
| 2272 | கைம்மாறு | பயன் |
| 2273 | மாசற்ற | குற்றமற்ற |
| 2274 | தேட்டை | திரட்டிய செல்வம் |
| 2275 | மீட்சி | மேன்மை |
| 2276 | மாள | நீங்க |
| 2289 | மொய்யிலை | நெருங்கியமைந்த இலை |
ஆ) திருக்குறள் சொற்கள்:| எண் | சொல் | பொருள் |
|---|
| 2251 | வழக்கு | நன்னெறி |
| 2252 | நயன் | நேர்மை |
| 2253 | நகையுள்ளும் | விளையாட்டாகவும் |
| 2254 | பாடறிவார் | நெறியுடையார் |
| 2255 | மாய்வது | அழிவது |
| 2256 | அரம் | வாளைக் கூர்மையாக்கும் கருவி |
| 2257 | நயம் இல | தீங்கு, இனிமையற்ற |
| 2258 | கடை | பழுது |
| 2259 | நகல்வல்லர் | சிரித்து மகிழ்பவர் |
| 2260 | மாயிரு ஞாலம் | மிகப்பெரிய உலகம் |
| 2261 | திரிந்தற்று | திரிவது போன்றது |
| 2296 | குறளை | புறம் பேசுதல் |
| 2297 | வெஃகல் | விரும்புதல் |
| 2298 | வெகுளல் | சினத்தல் |
| 2299 | புரைதீர் | குற்றம் தீர்ந்த |
| 2300 | முத்தேர் நகை | முத்துச் சிரிப்பு |
இ) முத்தொள்ளாயிரம் சொற்கள்:| எண் | சொல் | பொருள் |
|---|
| 2282 | உய்ம்மின் | பிழைத்துக் கொள்ளுங்கள் |
| 2283 | மல்லல் | வளமை |
| 2284 | புறவு | புறா |
| 2285 | துலை | துலாக்கோல் (தராசு) |
| 2286 | மேனி | உடல் |
| 2287 | மருப்பு | தந்தம் |
| 2288 | ஊசி | எழுத்தாணி |
ஈ) கலிங்கத்துப் பரணி சொற்கள்:| எண் | சொல் | பொருள் |
|---|
| 2290 | தீயின்வாய் | நெருப்பில் |
| 2291 | நவ்வி | மான் |
| 2292 | உகு | சொரிந்த (பொழிந்த) |
தொடரியல் மற்றும் இலக்கணம்:
| எண் | தொடர் | வகை |
|---|
| 2238 | 'கபிலன் வந்தான்' என்பது எவ்வகைத் தொடர்? | எழுவாய்த் தொடர் |
| 2239 | 'கதிரவா! வா' என்பது எவ்வகைத் தொடர்? | விளித்தொடர் |
| 2240 | 'கண்டேன் சீதையை' என்பது எவ்வகைத் தொடர்? | வினைமுற்றுத்தொடர் |
| 2241 | 'விழுந்த மரம்' என்பது எவ்வகைத் தொடர்? | பெயரெச்சத்தொடர் |
| 2242 | 'வந்துபோனான்' என்பது எவ்வகைத் தொடர்? | வினையெச்சத் தொடர் |
| 2243 | 'வீட்டைக் கட்டினான்' என்பது எவ்வகைத் தொடர்? | வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் |
| 2244 | 'மாமுனிவர்' என்பது எவ்வகைத் தொடர்? | உரிச்சொற்றொடர் |
| எண் | வழுவமைத்தல் | திருத்தம் |
|---|
| 2245 | 'அரசன் வந்தது' என்னும் திணை வழுவை எவ்வாறு திருத்தி எழுத வேண்டும்? | அரசன் வந்தான் |
| 2246 | 'கபிலன் பேசினாள்' என்னும் பால் வழுவை எவ்வாறு திருத்தி எழுத வேண்டும்? | கபிலன் பேசினான் |
| 2247 | 'குயில்கள் கூவியது' என்னும் எண் வழுவை எவ்வாறு திருத்தி எழுத வேண்டும்? | குயில்கள் கூவின |
| 2248 | 'கமலா சிரித்தாய்' என்னும் இடவழுவை எவ்வாறு திருத்தி எழுத வேண்டும்? | கமலா சிரித்தாள் |
| 2249 | 'வளவன் நேற்று வந்திருக்கிறாள்' என்னும் காலவழுவை எவ்வாறு திருத்தி எழுத வேண்டும்? | வளவன் நேற்று வந்தான் |
| 2250 | 'ஆந்தை கத்தியது' என்னும் மரபுவழுவை எவ்வாறு திருத்தி எழுத வேண்டும்? | ஆந்தை அலறியது |
| எண் | வேற்றுமை உருபுகள் | வேற்றுமை |
|---|
| 2262 | 'பொருட்டு', 'நிமித்தம்' ஆகியவை எத்தனையாவது வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்? | நான்காம் வேற்றுமை |
| 2263 | 'இருந்து', 'நின்று', 'விட', 'காட்டிலும்' ஆகியவை எத்தனையாவது வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்? | ஐந்தாம் வேற்றுமை |
| 2264 | 'உடைய' என்பது எத்தனையாவது வேற்றுமைக்குரிய சொல்லுருபு? | ஆறாம் வேற்றுமை |
வேறு சொற்கள் (பொருள் தரும் சொற்கள்):
| எண் | சொற்கள் | பொதுப்பொருள் |
|---|
| 2277 | 'ஆர்களி', 'முந்நீர்' என்பன எதனைக் குறிக்கும்? | கடல் |
| 2278 | 'வெற்பு', 'சிலம்பு', 'பொருப்பு' என்பன எதனைக் குறிக்கும்? | மலை |
| 2279 | 'பொலிவு', 'எழில்', 'வனப்பு' என்பன எதனைக் குறிக்கும்? | அழகு |
| 2280 | 'தத்தை', 'சுகம்', 'கிள்ளை' என்பன எதனைக் குறிக்கும் பறவை? | கிளி |
| 2281 | 'பகலவன்', 'ஞாயிறு' என்பன எதனைக் குறிக்கும்? | கதிரவன் (சூரியன்) |
இலக்கியம் மற்றும் பொதுத் தகவல்கள்:
| எண் | கேள்வி | விடை |
|---|
| 2271 | கவிஞர் முடியரசனின் பெற்றோர் பெயர் என்ன? | சுப்பராயலு, சீதாலெட்சுமி |
| 2237 | செய்தித் தாள்கள் பொதுவாக எத்தனைப் பதிப்புகளாக அச்சடிக்கப்படுகின்றன? | இரண்டு (முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு) |
| 2293 | பரணி இலக்கியங்கள் எத்தனை வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று? | தொண்ணூற்றாறு |
| 2294 | தோல்வியுற்ற நாட்டின் பெயரால் அமையும் இலக்கியம் எது? | பரணி இலக்கியம் |
| 2295 | உலக ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்ற ஆட்சிப் புலங்கள் எத்தனை? | 43 ஆட்சிப் புலங்கள் |
0 Comments