TNPSC TRB TET 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 10th Social Science Part-4
சமூக மற்றும் சமய சீர்திருத்தங்கள் - கேள்விகள் மற்றும் பதில்கள்
- பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
- ராஜா ராம்மோகன் ராய்.
- பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு?
- 1828.
- விதவை மறுமணச் சங்கம் (1861) மற்றும் புனே சர்வஜனிக் சபா (1870) ஆகியவற்றை நிறுவியவர் யார்?
- மகாதேவ் கோவிந்த் ரானடே.
- 'எதிர்மத மாற்றம்' எந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது?
- ஆரிய சமாஜம்.
- இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற ஆரிய சமாஜம் வகுத்தளித்த சுத்திகரிப்பு சடங்கு எது?
- சுத்தி (Suddhi).
- பேரின்ப நிலையை அடைந்து கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் யார்?
- இராமகிருஷ்ண பரமஹம்சர்.
- "மனித குலத்திற்குத் தொண்டு செய்தல்" என்னும் கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?
- சுவாமி விவேகானந்தர்.
- பிரம்மஞான இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஆண்டு?
- 1875.
- அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய இரண்டு செய்தித்தாள்கள் எவை?
- நியூ இந்தியா மற்றும் காமன் வீல்.
- ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியைப் புனேயில் 1852 ஆம் ஆண்டு திறந்தவர் யார்?
- ஜோதிபா பூலே.
- ஜோதிபா பூலேவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் யாருடைய முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்?
- ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக.
- நாராயண குரு எந்த ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டி அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்?
- அருவிபுரம்.
- அய்யன்காளி சாது ஜன பரிபாலன சங்கத்தை நிறுவிய ஆண்டு?
- 1907.
- இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதற்காக தியோபந்த் பள்ளி எங்கு நிறுவப்பட்டது?
- உத்திரப்பிரதேசத்தில் உள்ள சகரன்பூர்.
- தியோபந்த் இயக்கம் யாருடைய தலைமையில் தொடங்கப்பட்டது?
- முகமது குவாசிம் நானோதவி மற்றும் ரஷித் அகமத் கங்கோத்ரி.
- ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) எந்த இயக்கத்தின் தாரகமந்திரமாக இருந்தது?
- பார்சி சீர்திருத்த இயக்கம்.
- "துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள்" என்று கூறியவர் யார்?
- இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்).
- இராமலிங்க சுவாமிகள் இலவச உணவகத்தை எங்கு நிறுவினார்?
- வடலூர்.
- வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் ஆட்சியையும் முறையே எவ்வாறு விமர்சித்தார்?
- வெள்ளை பிசாசுகள் மற்றும் கருப்புப் பிசாசுகள்.
- வைகுண்ட சுவாமிகள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக நிறுவிய அமைப்பு எது?
- சமத்துவ சமாஜம்.
- ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாக 'அத்வைதானந்தா சபா'வை நிறுவியவர் யார்?
- பண்டிதர் அயோத்தி தாசர்.
- 1882 இல் 'திராவிடர்க் கழகம்' எனும் அமைப்பை நிறுவியவர்கள் யார்?
- அயோத்தி தாசரும், ஜான் திரவியமும்.
- அயோத்தி தாசர் 'திராவிட மகாஜனசபை' என்ற அமைப்பை நிறுவிய ஆண்டு என்ன?
- 1891.
- ஒடுக்கப்பட்டவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எவ்வாறு பதிவு செய்யுமாறு அயோத்தி தாசர் வற்புறுத்தினார்?
- சாதியற்ற திராவிடர்கள்.
- விஸ்வநாத நாயக்கர் யாருடைய உதவியோடு பாளையக்காரர் முறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்?
- அரியநாதர்.
- யூசுப்கான் மதமாற்றத்திற்கு முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- மருதநாயகம்.
- இராமநாதபுரத்தின் அரசரான செல்லமுத்து சேதுபதிக்கு வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு என்ன?
- 1730.
- வேலுநாச்சியாரின் கணவரும் சிவகங்கை மன்னருமானவர் யார்?
- முத்துவடுகநாதர்.
- ஆங்கிலேயர்களால் காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட ஆண்டு?
- 1772.
- திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்?
- கோபால நாயக்கர்.
- வேலுநாச்சியாரின் பெண்களின் படைப்பிரிவின் பெயர் என்ன?
- உடையாள்.
- வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தையார் பெயர் என்ன?
- ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
- கட்டபொம்மனை இராமநாதபுரத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு ஆணை பிறப்பித்தவர் யார்?
- ஜாக்சன்.
- இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரி யார்?
- லெப்டினென்ட் க்ளார்க்.
- பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்துச் செல்ல வெல்லஸ்லி பிரபுவினால் அனுப்பப்பட்ட ஆங்கிலேயப் படைத்தளபதி யார்?
- மேஜர் பானெர்மென்.
- சிவசுப்ரமணியனார் செப்டம்பர் 13 அன்று எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
- நாகலாபுரம்.
- பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் யாருடைய திறமையான படைத் தளபதிகளாவர்?
- முத்துவடுகநாதர்.
- மருது சகோதரர்கள் 1801 அக்டோபர் 24 அன்று எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
- திருப்பத்தூர் கோட்டை.
- ஊமைத்துரையும் செவத்தையாவும் தலை துண்டிக்கப்பட்ட ஆண்டு?
- 1801 நவம்பர் 16.
- பிரிட்டிஷார் நேரடியாகத் தமிழகத்தின்மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தக் காரணமான கர்நாடக உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
- 1801 ஜூலை 31.
- திப்புவின் இறப்பிற்குப் பிறகு தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட எழுப்பிய கோட்டை எது?
- ஓடாநிலை.
- வேலூர் புரட்சியின் போது கலவரத்தை வன்மையாக அடக்கிய ஆங்கிலேய தளபதி யார்?
- கர்னல் ஜில்லஸ்பி.
- ஹாஜி ஷரியத்துல்லா மறைந்த பிறகு ஃபராசி இயக்கத்திற்குத் தலைமை ஏற்றவர் யார்?
- டுடு மியான்.
- சித்து மற்றும் கணு ஆகியோர் தலைமையிலான சாந்தலர்களின் கிளர்ச்சி வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்த ஆண்டு?
- 1855.
- ராஞ்சியில் நடைபெற்ற பிர்சா முண்டாவின் கிளர்ச்சி எவ்வாறு அறியப்படுகிறது?
- உலுகுலன் கிளர்ச்சி.
- சுதேசி காலத்தில் லால்-பால்-பால் என அழைக்கப்பட்ட தீவிர தேசியவாதிகள் யார்?
- லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால்.
- 1852 இல் சென்னைவாசிகள் சங்கம் யாரால் நிறுவப்பட்டது?
- கஜுலு லட்சுமிநரசு மற்றும் சீனிவாசனார்.
- 'சுதேசமித்திரன்' என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழைத் தொடங்கியவர் யார்?
- G. சுப்பிரமணியம்.
- சுதேசமித்திரன் பருவ இதழ் நாளிதழாக மாறிய ஆண்டு என்ன?
- 1899.
- சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் யார்?
- P. ரங்கையா.
- இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு 1887 இல் எங்கு நடைபெற்றது?
- மக்கிஸ் தோட்டம் (சென்னை).
- வ.உ.சி எந்த ஆண்டு ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலைநிறுத்தத்திற்குத் தலைமையேற்றார்?
- 1908.
- நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் 'பாரத மாதா சங்கம்' எனும் ரகசிய அமைப்பை உருவாக்கிய ஆண்டு?
- 1904.
- அன்னிபெசன்ட் அம்மையார் எழுதிய 'இந்தியா - ஒரு தேசம்' என்பது என்ன வகையான படைப்பு?
- புத்தகம்.
- பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
- 1909.
- டாக்டர் சி. நடேசனார் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை எப்போது உருவாக்கினார்?
- 1912.
- நீதிக்கட்சி அமைத்த பணியாளர் தேர்வு வாரியத்தைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929 இல் உருவாக்கிய ஆணையம் எது?
- பொதுப் பணியாளர் தேர்வாணையம்.
- இந்து சமய அறநிலையச் சட்டத்தை நீதிக்கட்சி எந்த ஆண்டு இயற்றியது?
- 1926.
- பெரியார் ஈ.வெ.ராமசாமி வகித்த ஈரோடு நகரசபைத் தலைவர் பதவியின் காலம் என்ன?
- 1918 - 1919.
- பெரியார் 'குடியரசு' என்ற அதிகாரபூர்வ செய்தித்தாளினைத் தொடங்கிய ஆண்டு?
- 1925.
- பெரியார் கட்டுரைகளை எழுதப் பயன்படுத்திய புனைப்பெயர் என்ன?
- சித்திரபுத்திரன்.
- பி.ஆர். அம்பேத்கர் எழுதிய 'சாதி ஒழிப்பு' நூலை பெரியார் தமிழில் பதிப்பித்த ஆண்டு?
- 1936.
- நீதிக்கட்சி திராவிடர் கழகம் (திக) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு?
- 1944.
- பெண்களுக்குச் சம உரிமை வழங்கும் தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
- 1989.
- 1939 இல் வெளியிடப்பட்ட இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை நூலின் பெயர் என்ன?
- ஜீவிய சரித சுருக்கம்.
- இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கிய ஆண்டு?
- 1893.
- அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை 1928 இல் உருவாக்கியவர் யார்?
- மயிலை சின்னதம்பி ராஜா (எம்.சி.ராஜா).
- மே தின விழாவை 1923 இல் முதன்முதலாக ஏற்பாடு செய்தவர் யார்?
- ம.சிங்காரவேலர்.
- தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்காக ம.சிங்காரவேலர் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன?
- தொழிலாளர் (Worker).
- இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- 1917.
- அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை 1927 இல் நிறுவிய அமைப்பு எது?
- இந்தியப் பெண்கள் சங்கம்.
- தேவதாசி முறை ஒழிப்பு தொடர்பான மசோதாவை முத்துலட்சுமி அம்மையார் சென்னை சட்டமன்றத்தில் எப்போது அறிமுகப்படுத்தினார்?
- 1930.
- காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக இங்கிலாந்துக்குக் கடல்பயணம் மேற்கொண்ட ஆண்டு?
- 1888.
- தென்னாப்பிரிக்காவில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் மீது விதிக்கப்பட்ட தலைவரி எந்த ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்டது?
- ஸ்மட்ஸ் - காந்தி ஒப்பந்தம்.
- ஜான் ரஸ்கின் எழுதிய எந்தப் புத்தகம் காந்தியடிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது?
- அண்டூ திஸ் லாஸ்ட்.
- பீகாரில் உள்ள சம்பரானில் பின்பற்றப்பட்ட சுரண்டல் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
- தீன் காதியா முறை.
- 1918 இல் காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கிய இரண்டு நிகழ்வுகள் எவை?
- அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் மற்றும் கேதா சத்தியாகிரகம்.
- ஜாலியன்வாலா பாக் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரி யார்?
- ஜெனரல் ரெஜினால்டு டயர்.
- ஜாலியன்வாலா பாக் கொடுமையைக் கண்டித்து 'கெய்சர்-இ-ஹிந்த்' என்ற பதக்கத்தைத் திருப்பிக் கொடுத்தவர் யார்?
- காந்தியடிகள்.
- 1920 டிசம்பர் மாதம் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர் யார்?
- சேலம் சி. விஜயராகவாச்சாரியார்.
- 1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் காந்தியடிகள் அறிவித்த பிரச்சாரம் எது?
- வரிகொடா இயக்கம்.
- தண்டி யாத்திரையின் போது காந்தியடிகள் 24 நாட்களில் நடந்த தொலைவு எவ்வளவு?
- 241 மைல்கள்.
- வடமேற்கு எல்லை மாகாணத்தில் குடைகிட்மட்கர் இயக்கத்தை நடத்திச் சட்டமறுப்பு இயக்கத்திற்குத் தலைமை ஏற்றவர் யார்?
- கான் அப்துல் கஃபார்கான்.
- முதலாவது வட்ட மேசை மாநாடு எங்கு, எப்போது நடைபெற்றது?
- 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில்.
- வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு எப்போது அறிவித்தார்?
- 1932 ஆகஸ்டு 16.
- காந்தியடிகளின் பிரச்சாரத்தின் விளைவாக 'கோவில் நுழைவு நாள்' எப்போது அனுசரிக்கப்பட்டது?
- 1933 ஜனவரி 8.
- அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கட்சி எப்போது நிறுவப்பட்டது?
- 1928.
- அரசுப் பணத்தைக் கொண்டு சென்ற ரயில்வண்டியை காகோரி கிராமத்தில் கொள்ளையடித்த சம்பவம் நடைபெற்ற ஆண்டு என்ன?
- 1925.
- ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திரதேவ் ஆகியோரின் முன்முயற்சியால் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவான ஆண்டு என்ன?
- 1934.
- சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் சென்று இந்திய தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்த ஆண்டு?
- 1943.
- வேவல் திட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
- 1945 ஜுன் 14.
- 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யார் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது?
- ஜவகர்லால் நேரு.
- இந்திய விடுதலைச் சட்டத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் எந்த ஆண்டு இயற்றியது?
- 1947 ஜூலை 18.
- புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- 35.
- தமிழ்நாட்டின் அட்சரேகை பரவல் என்ன?
- 8° 4' வட அட்சம் முதல் 13° 35' வட அட்சம் வரை.
- தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு சதுர கிலோமீட்டர்கள்?
- 1,30,058.
- இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் தமிழ்நாடு எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
- 4 சதவீதம்.
- நீலகிரி மலையின் இரண்டாவது மிக உயரமான சிகரம் எது?
- முக்குருத்தி (2554 மீட்டர்).
- சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள உயரமான பகுதி எது?
- சேர்வராயன் கோவில் (1623 மீட்டர்).
- வைகையாறு எங்கு உற்பத்தியாகிறது?
* வருச நாட்டு குன்றுகளின் கிழக்குச் சரிவு. - 'கிராண்ட் அணைகட்' என்றழைக்கப்படும் கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
* காவிரி.


0 Comments