Home தெரிந்துகொள்ளுங்கள்-1_1 TNPSC G.K - 119 | பொது அறிவு
TNPSC G.K - 119 | பொது அறிவு
1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர்கள் கலகம்.
1917 ஆம் ஆண்டு ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிடானியா.
1947 ஆம் ஆண்டு சுதந்திர நாளன்று பாராளுமன்றத்தில் ஸாரே ஜஹான்சே அச்சா என்ற பாடலைப் பாடியவர் - சுதேசா கிருபளானி.
அரசியலமைப்பின் 356-வது பிரிவு பயன்படுத்தப்படாத மாநிலம் - அருணாச்சலப்பிரதேசம்.
ஆங்கில கிழக்கிந்திய வணிக குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கிபி 1600.
ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு - போர்ச்சுகல்.
ஆழியாறு நீர்மின் சக்தித் திட்டம் செயல் படுத்தப்படும் இடம் - ஆழியாறு - கோயம்புத்தூர்.
ஆளுநர் திடீரென்று இறக்க நேரிட்டால் ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குடியரசுத் தலைவர் ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை லோக்சபை உறுப்பினர்களாக நியமிக்கலாம் - இரண்டு நபர்கள்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து 1939 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு ராஜநாமா செய்தவர் - நேதாஜி.
இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ரகம் - செட்டாக்.
இந்தியாவின் பூலோக சொர்க்கம் எனப்படும் இடம் - காஷ்மீர் பள்ளத்தாக்கு.
உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியவர் - வெங்கட்ராயலு நாயுடு.
ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945.
ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அறிவியல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 2005.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ.
ஒரு மாநிலத்தில் இயற்ப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 214.
கற்கால மற்றும் மத்திய கற்கால மக்கள் அறிந்த கலை - ஓவியம் தீட்டுதல்.
குந்தா நீர் மின் சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் ஆறு - குந்தாஆறு.
குந்தா நீர்மின் சக்தி திட்டத்தால் பயன் பெறும் மாநிலம் - தமிழ்நாடு.
சர் சையது அகமது கான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்.
சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - ராஜாராம் மோகன்ராய்.
சீனக்குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்.
சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்.
சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1852.
டச்சுக்காரர்களின் நிலையான குடியேற்றமாக விளங்கிய ஆசிய நாடு - இந்தோனேசியா.
தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்.
தஞ்சையில் கொண்டாடப்படும் சதயத் திருவிழா என்பது யாருடைய பிறந்த தினம் - இராஜராஜ சோழன்.
தமிழகச் சாலைகளின் வகைகள் எத்தனை - நான்கு.
தமிழகத்தில் முதல் கூட்டுத்துறைத் திட்டம் எங்குத்தொடங்கப்பட்டது - ஜெயம்கொண்டம் - அரியலூர்.
தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது முதல்வராக இருந்தவர் - எம்.ஜி.ராமச்சந்திரன்.
தமிழகத்தின் முதல் அனல் மின்திட்டம் எங்கு தொடங்கப்பட்டது - நெய்வேலி - கடலூர் மாவட்டம்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உயிர்விட்ட தமிழர் - சங்கரலிங்கனார்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தக் கட்சியாக மாற்றம் பெற்றது - நீதிக்கட்சி.
நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகத்தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
நெய்வேலி அனல் மின் சக்தி நிலையத்தால் பயன்பெறும் மாநிலம் - தமிழ்நாடு.
பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு - பாகிஸ்தான்.
பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நாடுகள் - இந்தியா, சீனா.
பத்து கோடி என்ற எண்ணைக் குறிப்பதற்கு தமிழில் உள்ள வார்த்தை - அற்புதம்.
பம்பாயில் 1916 ஆம் ஆண்டு தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - பாலகங்காதர திலகர்.
பரம்பிக்குளம் நீர் மின்சக்தி திட்டம் செயல் படுத்தப்படும் இடம் - பரம்பிக்குளம் - கோயம்புத்தூர்.
பழைய கற்கால மக்களின் தொழில் - வேட்டையாடுதல்.
பழைய கற்கால மக்கள் - நாடோடிகள்.
பழைய கற்கால மக்கள் இறந்தவர்களை என்ன செய்தனர் - புதைத்தனர்.
பழைய கற்கால மக்கள் நெருப்பின் பயனை அறிந்து இருந்தனர்.
பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடம் - குகைகள்.
பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி.
பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்.
புதிய கற்கால மக்களின் இதர தொழில்கள் - மட்பாண்டம் செய்தல், களிமண் கற்கள் செய்தல்.
புதிய கற்கால மக்கள் இறந்தவர்களை என்ன செய்தனர் - புதைத்தனர்.
புதிய கற்கால மனிதனின் கண்டுபிடிப்பு - சக்கரம்.
புரட்சி ஞானி என்று குறிப்பிடப்படுபவர் - அரவிந்தர்.
பொதுப்பட்டியல் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ஆஸ்திரேலியா.
பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா.
மத்திய கற்கால மக்கள் தேர்ச்சியடைந்த தொழில் - மிருகங்களை பழக்குதல்.
மத்திய கற்கால மனிதனின் தொழில் - வேட்டையாடுதல், மீன்பிடித்தல், உணவு சேகரித்தல்.
முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்.
முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்.
முற்காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பகுதி - தமிழ்நாடு.
மேயார் நீர் மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் இடம் எது - மேயார் - நீலகிரி.
மொரார்ஜி தேசாய் இந்தியப்பிரதமராகப் பதவி வகித்த பொழுது இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி - ஜிம்மி கார்ட்டர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அளுவலக மொழி - உருது.
ஜெயம் கொண்டம் அனல் மின்சக்தி திட்டத்தால் பெறும் பயன் என்ன - வெப்ப சக்தி மின்சாரம் தயாரிப்பு.
ஹிட்லர் ஆரம்பகாலத்தில் வியன்னாவில் செய்த வேலை - பெயின்டர் வேலை.
0 Comments