Sunday, October 16, 2022

TNPSC G.K - 226 | பொதுத்தமிழ் - சிறுபஞ்சமூலம்.

சிறுபஞ்சமூலத்தின் உருவம்:


  • சிறுபஞ்சமூலம் = சிறுமை +பஞ்சம் +மூலம் 
  • ஆசிரியர் = காரியாசான்
  • பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
  • பாவகை = வெண்பா
  • உரையாசிரியர் =புன்னை வனநாத முதலியார் 

பெயர்க்காரணம்:


  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.

பொதுவான குறிப்புகள் :


  • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
  • பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
  • ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
  • சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை 1.வில்வம்,2.பெருங்குமிழ்,3.பாதிரி,4.தழுதாழை,5.வாகை என பதார்த்த குண சிந்தாமணி மற்றும்  பொருட்தொகை நிகண்டு  கூறுகிறது 
  • காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்.
  • இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
  • பாடல் தோறும் 5 கருத்துக்கள் கொண்டது. 
  • மாக்காரியாசான் என பாயிரம் கூறுகிறது.

மேற்கோள்:


  • நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு
  • பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு
  • மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும். உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
  • பகுத்துண்டு பல்லுயிர் பாதுகாக்க வேண்டும். 

No comments:

Popular Posts