Ad Code

Responsive Advertisement

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3251-3300 | பொதுத் தமிழ்.

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3251-3300 | பொதுத் தமிழ்.

[1] திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் மிகவும் சிறந்தது யாருடைய உரை?

a. தருமர்.

b. மணக்குடவர்.

c. பரிமேலழகர்

d. தாமத்தர்.

Answer: பரிமேலழகர்


[2] ரியோ நகரில் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு எது?

a. 2012.

b. 2016.

c. 2020.

d. 2024.

Answer: 2016.


[3] பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன?

a. ஆழி.

b. நீர்நிலை.

c. பரவை.

d. கயம்.

Answer: பரவை.


[4] இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ஆற்றியது எது?

a. நாடகம்.

b. உரை.

c. பாட்டு.

d. ஆடல்.

Answer: உரை.


[5] முத்து தம் காரணமாக ஊருக்குச் சென்றார்.

a. வேலை.

b. பணி.

c. கடமை.

d. நோய்.

Answer: பணி.


[6] கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு யாரை அழைத்தாள்?

a. அண்ணன்.

b. தோழியை.

c. தங்கை.

d. அக்கா.

Answer: தோழியை.


[7] புள் என்பதன் வேறு பெயர் என்ன?

a. விலங்கு.

b. பறவை.

c. புல்.

d. கொடி.

Answer: பறவை.


[8] பறவைகள் இடம்பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a. சிறகின் ஓசை.

b. வலசை போதல்.

c. இடம் பெயர்தல்.

d. தட்பவெப்ப நிலை மாற்றம்.

Answer: வலசை போதல்.


[9] சரணாலயம் என்பதன் வேறு பெயர் என்ன?

a. இடம்.

b. புகலிடம்.

c. பாதுகாப்பு.

d. மாடம்.

Answer: புகலிடம்.


[10] திருக்குறள் எத்தனை மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

a. 50.

b. 80.

c. 100.

d. 120.

Answer: 100.


[11] அகர வரிசையில் அறிவுரைகளைக் கூறும் இலக்கியம் எது?

a. ஆத்திச்சூடி.

b. கொன்றை வேந்தன்.

c. நல்வழி.

d. மூதுரை.

Answer: ஆத்திச்சூடி.


[12] புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

a. ஔவையார்.

b. பாரதியார்.

c. பாரதிதாசன்.

d. கவிமணி.

Answer: பாரதியார்.


[13] அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு என்ற பாடலின் ஆசிரியர் யார்?

a. பாரதியார்.

b. நெல்லை சு.முத்து.

c. பாரதிதாசன்.

d. கவிமணி.

Answer: நெல்லை சு.முத்து.


[14] இயன்றவரை என்பதன் பொருள் என்ன?

a. முடிந்தவரை.

b. ஒன்றுபட்டு.

c. மருந்து.

d. ஆய்வு.

Answer: முடிந்தவரை.


[15] ஒருமித்து என்பதன் பொருள் என்ன?

a. முடிந்தவரை.

b. ஒன்றுபட்டு.

c. மருந்து.

d. ஆய்வு.

Answer: ஒன்றுபட்டு.


[16] ஔடதம் என்பதன் பொருள் என்ன?

a. முடிந்தவரை.

b. ஒன்றுபட்டு.

c. மருந்து.

d. ஆய்வு.

Answer: மருந்து.


[17] தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை சு.முத்துவை பாராட்டியவர் யார்?

a. பாரதியார்.

b. மேதகு. அப்துல்கலாம் அவர்கள்.

c. பாரதிதாசன்.

d. அண்ணா.

Answer: மேதகு. அப்துல்கலாம் அவர்கள்.


[18] நெல்லை சு.முத்து எந்தெந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்?

a. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்.

b. சதீஷ்தவான் விண்வெளி மையம்.

c. இந்திய விண்வெளி மையம்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: மேற்கண்ட அனைத்தும்.


[19] நெல்லை சு.முத்து எத்தனை மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்?

a. 50.

b. 60.

c. 70.

d. 80.

Answer: 80.


[20] உடல் நோய்க்கு எது தேவை?

a. ஆய்வு.

b. ஔடதம்.

c. ஒன்றுபட்டு.

d. முடிந்தவரை.

Answer: ஔடதம்.


[21] நண்பர்களுடன் எவ்வாறு விளையாட வேண்டும்?

a. ஒருமித்து.

b. தனித்து.

c. ஒன்று.

d. இரண்டு.

Answer: ஒருமித்து.


[22] கண்டறி என்பதை பிரித்து எழுதுக.

a. கண்டு + அறி.

b. கண் + அறி.

c. கண்டம் + அறி.

d. கண்டு + இறு.

Answer: கண்டு + அறி.


[23] ஓய்வற என்பதை பிரித்து எழுதுக.

a. ஓய்வு + அ.

b. ஓய்வு + அற.

c. ஓய் + அற.

d. ஓய் + அ.

Answer: ஓய்வு + அற.


[24] ஏன் என்று என்பதை சேர்த்து எழுதுக.

a. ஏன் + என்று.

b. ஏன் என்று.

c. ஏனென்று.

d. ஏன்வென்று.

Answer: ஏனென்று.


[25] ஔடதம் + ஆம் என்பதை சேர்த்து எழுதுக.

a. ஔடதம் ஆம்.

b. ஔடதமாம்.

c. ஔட + ஆம்.

d. ஔ + ஆம்.

Answer: ஔடதமாம்.


[26] அணுகு என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: விலகு.


[27] ஐயம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: தெளிவு.


[28] ஊக்கம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: சோர்வு.


[29] உண்மை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a. விலகு.

b. தெளிவு.

c. சோர்வு.

d. பொய்மை.

Answer: பொய்மை.


[30] வானை அளப்போம் கடல் மீனையளப்போம் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

a. பாரதிதாசன்.

b. பாரதியார்.

c. முடியரசன்.

d. கவிமணி.

Answer: பாரதியார்.


[31] அவன் எப்போதும் எதை உரைக்கின்றான்?

a. அன்பு.

b. உண்மை.

c. பொய்.

d. பொய்மை.

Answer: உண்மை.


[32] ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

a. ஆழம் + கடல்.

b. ஆழ + கடல்.

c. ஆழக் + கடல்.

d. ஆழ் + கடல்.

Answer: ஆழம் + கடல்.


[33] விண்வெளி என்னும் சொல்லை பிரித்து எழுதுக.

a. விண் + வெளி.

b. விண்ண் + வெளி.

c. விண் + ளி.

d. விண் + ஒளி.

Answer: விண் + வெளி.


[34] நீலம் வான் என்பதை சேர்த்து எழுதுக.

a. நீலம் வான்.

b. நீலவான்.

c. நீல வான்.

d. நீல்வான்.

Answer: நீலவான்.


[35] இல்லாது இயங்கும் என்பதை சேர்த்து எழுதுக.

a. இல்லாது + இயங்கும்.

b. இல்லாதியங்கும்.

c. இல்லா + இயங்கும்.

d. இல்லாது + இயங்கும்.

Answer: இல்லாதியங்கும்.


[36] காரல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர்?

a. ஜெர்மனி.

b. செக்.

c. ஆஸ்திரேலியா.

d. ஆப்பிரிக்கா.

Answer: செக்.


[37] ரோபோ என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் யார்?

a. ஜான் பெர்ட்.

b. எர்னெஸ்ட் ஹெமிங்வே.

c. காரல் கபெக்.

d. சார்லஸ் பேபேஜ்.

Answer: காரல் கபெக்.


[38] ரோபோ என்ற சொல்லின் பொருள் என்ன?

a. எந்திரன்.

b. நுண்ணறிவு.

c. அடிமை.

d. நண்பன்.

Answer: அடிமை.


[39] காரல் கபெக் எந்த ஆண்டு ரோபோ என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்?

a. 1910.

b. 1920.

c. 1930.

d. 1940.

Answer: 1920.


[40] நுண்ணுணர்வு கருவி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் என்ன?

a. Computer.

b. Robot.

c. Super Computer.

d. Sensor.

Answer: Sensor.


[41] தானியங்கி தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும் என்று எந்தக் கலைக்களஞ்சியம் விளக்கம் தருகிறது?

a. பிரிட்டானிக்கா.

b. விக்கிப்பீடியா.

c. ஆக்ஸ்போர்டு.

d. வெப்ஸ்டர்.

Answer: பிரிட்டானிக்கா.


[42] டீப் ப்ளூ என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?

a. மைக்ரோசாஃப்ட்.

b. கூகுள்.

c. ஐ.பி.எம் நிறுவனம்.

d. சாம்சங்.

Answer: ஐ.பி.எம் நிறுவனம்.


[43] உலகில் முதன்முறையாக சோபியா என்ற ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?

a. சவூதி அரேபியா.

b. அமெரிக்கா.

c. ஜப்பான்.

d. சீனா.

Answer: சவூதி அரேபியா.


[44] சோபியா என்ற ரோபோவிற்கு 'புதுமைகளின் வெற்றியாளர்' என்ற பட்டத்தை வழங்கிய அமைப்பு எது?

a. யுனிசெப்.

b. ஐ.நா சபை.

c. உலக சுகாதார நிறுவனம்.

d. ஐ.பி.எம் நிறுவனம்.

Answer: ஐ.நா சபை.


[45] நுட்பமாகச் சிந்தித்து அறிவது எது?

a. நுண்ணறிவு.

b. தானியங்கி.

c. ரோபோ.

d. எந்திர மனிதன்.

Answer: நுண்ணறிவு.


[46] தானே இயங்கும் எந்திரம் எது?

a. நுண்ணறிவு.

b. தானியங்கி.

c. ரோபோ.

d. எந்திர மனிதன்.

Answer: தானியங்கி.


[47] நின்றிருந்த என்பதை பிரித்து எழுதுக.

a. நின்று + இருந்த.

b. நின்ற + இருந்த.

c. நின்று + இருந்த.

d. நின்ற + இருந்த.

Answer: நின்று + இருந்த.


[48] அவ்வுருவம் என்பதை பிரித்து எழுதுக.

a. அ + உருவம்.

b. அவ் + உருவம்.

c. அ + உருவம்.

d. அவ் + உருவம்.

Answer: அ + உருவம்.


[49] மருத்துவம் + துறை என்பதை சேர்த்து எழுதுக.

a. மருத்துவ துறை.

b. மருத்துவத்துறை.

c. மருத்துவதுறை.

d. மருத்துவம் துறை.

Answer: மருத்துவத்துறை.


[50] செயல் இழக்க என்பதை சேர்த்து எழுதுக.

a. செயலிழக்க.

b. செயல் + இழக்க.

c. செயல்இழக்க.

d. செயலை + இழக்க.

Answer: செயலிழக்க.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement