இயல் 1: தமிழ் (இன்பத்தமிழ், கும்மி, வளர் தமிழ், கனவு பலித்தது)
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது / எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது எது? | தமிழ் |
| 2 | "நிருமித்த" என்ற சொல்லின் பொருள் | உருவாக்கிய |
| 3 | "ஆழிப்பெருக்கு" என்ற சொல்லின் பொருள் | கடல்கோள் (சுனாமி) |
| 4 | "மேதினி" என்ற சொல்லின் பொருள் | உலகம் |
| 5 | பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் | கொய்யாக்கனி, பாவியக் கொத்து, நூறாசிரியம் |
| 6 | வலஞ்சுழி எழுத்துகள் எவை? | அ, எ, ஔ, ண, ஞ |
| 7 | "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய..." என்ற வரிகள் இடம்பெற்ற நூல் | சிலப்பதிகாரம் |
| 8 | "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" என்ற வரிகள் இடம்பெற்ற நூல் | தொல்காப்பியம் |
| 9 | "வேளாண்மை" என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்கள் | கலித்தொகை, திருக்குறள் |
| 10 | "மருந்து" என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்கள் | அகநானூறு, திருக்குறள் |
| 11 | "அன்பு" என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்கள் | தொல்காப்பியம், திருக்குறள் |
| 12 | "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்..." என்ற பாடலை இயற்றியவர் | ஔவையார் |
| 13 | "கடல்நீர் முகந்த கமஞ்சூல் எிலி" என்ற வரி இடம்பெற்ற நூல் | கார்நாற்பது |
| 14 | "தினையளவு போதாச் சிறுபுல் நீர்..." எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் | கபிலர் |
| 15 | தமிழில் உள்ள மொத்த மெய் எழுத்துக்கள் | 18 |
| 16 | மெய் எழுத்துகளை ஒலிக்க இன்றியமையாதது | உடல் இயக்கத்தின் பங்கு |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? | கி.பி. 2-ம் நூற்றாண்டு |
| 2 | "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்ற பாடல் இடம்பெற்ற நூல் | சிலப்பதிகாரம் |
| 3 | "திகிரி" என்ற சொல்லின் பொருள் | ஆணைச்சக்கரம் |
| 4 | "கொங்கு" என்ற சொல்லின் பொருள் | மகரந்தம் |
| 5 | "அளி" என்ற சொல்லின் பொருள் | கருணை |
| 6 | "சித்தம்" என்ற சொல்லின் பொருள் | உள்ளம் |
| 7 | பாரதியார் இயற்றிய நூல்கள் | பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு |
| 8 | பறவைகள் இடம்பெயர்வதற்கான காரணங்கள் | உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை, இனப்பெருக்கம் |
| 9 | "தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்ற பாடலை இயற்றியவர் | சத்திமுத்தப் புலவர் |
| 10 | ஆண் சிட்டுக்குருவியின் தொண்டைப் பகுதி நிறம் | கருப்பு |
| 11 | சிட்டுக்குருவி முட்டைகளை அடைகாக்கும் நாட்கள் | 14 நாட்கள் |
| 12 | சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி | துருவப்பகுதி |
| 13 | பறவைகள் பற்றிய படிப்பு | ஆர்னித்தாலஜி (Ornithology) |
| 14 | "காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாடியவர் | பாரதியார் |
| 15 | முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்து | சார்பெழுத்து (எ.கா: ஆய்தம்) |
| 16 | ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் | முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை |
| 17 | திருக்குறளின் 3 பிரிவுகள் (பால்கள்) | அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் |
| 18 | "வாயுறை வாழ்த்து" என அழைக்கப்படும் நூல் | திருக்குறள் |
| 19 | திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் | 100-க்கும் மேற்பட்ட |
| 20 | மாரியப்பன் தங்கவேலு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? | தமிழ்நாடு |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "ஔடதம்" என்ற சொல்லின் பொருள் | மருந்து |
| 2 | நெல்லை சு. முத்து பணியாற்றிய நிறுவனங்கள் | விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், இந்திய விண்வெளி மையம் |
| 3 | நுண்ணுணர்வு கருவி என்பதன் ஆங்கிலச் சொல் | Sensors |
| 4 | டீப் ப்ளூ (Deep Blue) கணினியை உருவாக்கிய நிறுவனம் | ஐ.பி.எம் (IBM) |
| 5 | தானியங்கிகளுக்கும் எந்திர மனிதர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு | செயற்கை நுண்ணறிவு |
| 6 | "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்ற குறள் யாருடைய வாழ்க்கைக்கு வலு சேர்த்தது? | அப்துல் கலாம் |
| 7 | அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த ஆங்கில நூல் | Lights from Many Lamps (விளக்குகள் பல தந்த ஒளி) |
| 8 | செயற்கைக்கால்கள் தயாரிக்கப் பயன்படும் பொருள் | கார்பன் இழை |
| 9 | ராமன் விளைவு (Raman Effect) வெளியிடப்பட்ட ஆண்டு | 1928 பிப்ரவரி 28 |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "மாசற" என்ற சொல்லின் பொருள் | குற்றம் இல்லாமல் |
| 2 | "சீர்தூக்கின்" என்ற சொல்லின் பொருள் | ஒப்பிட்டு ஆராய்தல் |
| 3 | ஔவையார் எழுதிய நூல்கள் | கொன்றை வேந்தன், நல்வழி |
| 4 | "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே" என்ற பாடலின் ஆசிரியர் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
| 5 | "மாற்றார்" என்ற சொல்லின் பொருள் | மற்றவர் |
| 6 | திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
| 7 | காமராசர் கூறிய பள்ளி அமைய வேண்டிய தொலைவு | தொடக்கப்பள்ளி: 1 மைல்; நடுநிலைப்பள்ளி: 3 மைல்; உயர்நிலைப்பள்ளி: 5 மைல் |
| 8 | காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு | 1976 |
| 9 | காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ள விமான நிலையம் | சென்னை உள்நாட்டு விமான நிலையம் |
| 10 | அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தளங்கள் | குழந்தைகள் பகுதி: முதல் தளம்; தமிழ் நூல்கள்: இரண்டாம் தளம்; வரலாறு, புவியியல் நூல்கள்: ஏழாம் தளம் |
| 11 | நடமாடும் நூலகம் எனும் திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் | தமிழ்நாடு |
| 12 | இன எழுத்துகள்: "ஐ" நெடிலுக்கு இணையான குறில் | இ |
| 13 | இன எழுத்துகள்: "ஔ" நெடிலுக்கு இணையான குறில் | உ |
| 14 | "ஆற்றவும் கற்றார் அறிவுடையார்..." என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் | பழமொழி நானூறு |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் | கயத்தூர் |
| 2 | பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது | பொறை |
| 3 | முக்கனி | மா, பலா, வாழை |
| 4 | முத்தமிழ் | இயல், இசை, நாடகம் |
| 5 | மழைக்கடவுளை வேண்டி கொண்டாடப்பட்ட விழா | இந்திர விழா |
| 6 | திருவள்ளுவர் பிறந்த ஆண்டு | கி.மு. 31 |
| 7 | பொங்கல் விழா வேறு பெயர்கள் | பஞ்சாப்: லோரி; குஜராத், ராஜஸ்தான்: உத்தராயன் |
| 8 | நரசிம்மவர்மனின் தந்தை பெயர் | முதலாம் மகேந்திரவர்மன் |
| 9 | சிற்பக்கலையின் உச்சம் எனக் கருதப்படுவது | அர்ஜுனன் தபசு |
| 10 | "வாணம்" (மூன்று சுழி ண) என்பதன் பொருள் | வெடி |
| 11 | "வானம்" (இரண்டு சுழி ன) என்பதன் பொருள் | ஆகாயம் |
| 12 | "ஏரி" என்பதன் பொருள் | குளம் |
| 13 | "கூறை" என்பதன் பொருள் | புடவை |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | முடியரசன் எழுதிய நூல்கள் | பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை |
| 2 | "சமர்" என்ற சொல்லின் பொருள் | போர் |
| 3 | "கலம்" என்ற சொல்லின் பொருள் | கப்பல் |
| 4 | நெய்தல் நில மக்கள் | பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர் |
| 5 | நெய்தல் நிலத்திற்குரிய பூ | தாழம்பூ |
| 6 | வணிகர்கள் குழுவாகச் செல்வது | வணிகசாத்து |
| 7 | துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன? | பட்டினம், பாக்கம் |
| 8 | அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவை | குதிரைகள் |
| 9 | "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று வணிகர்களைப் பாராட்டும் நூல் | பட்டினப்பாலை |
| 10 | அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட பயன்படும் எழுத்து | உ |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | காந்தி அருங்காட்சியகம் எங்கு உள்ளது? | மதுரை |
| 2 | ரௌலட் சட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் யார் வீட்டில் நடைபெற்றது? | இராஜாஜி |
| 3 | பாரதியாரை "இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்" என்று கூறியவர் | இராஜாஜி |
| 4 | 1937 சென்னை இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் | காந்தியடிகள் |
| 5 | வேலுநாச்சியாரின் தந்தை பெயர் | செல்லமுத்து |
| 6 | வ.உ.சிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கத்தைத் தொடங்கிய ஆண்டு | 1906 (அக்டோபர் 16) |
| 7 | "தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று..." எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் | தாயுமானவர் |


0 Comments