பகுதி 1: தமிழ் மொழி மற்றும் இலக்கியம்
- "தமிழுக்கும் அமுதென்று பேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்: பாரதிதாசன்
- பாரதிதாசனின் இயற்பெயர்: கனக சுப்புரத்தினம்
- புரட்சிக்கவி, பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர்: பாரதிதாசன்
- "தமிழே உயிரே வணக்கம்" பாடலின் ஆசிரியர்: காசிஆனந்தன்
- பாரதிதாசன் வலியுறுத்தும் சமூகம்: ஏற்றத்தாழ்வற்ற சமூகம்
- "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி" பாடலின் ஆசிரியர்: பெருஞ்சித்திரனார்
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்: மாணிக்கம்
- பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
- கணிச்சாறு நூல் வெளிவந்துள்ள தொகுதிகள்: 8
- "வான்தோன்றி வலிதோன்றி... மலைகள் தோன்றி" பாடலின் ஆசிரியர்: வாணிதாசன்
- உலகில் உள்ள மொத்த மொழிகள் (சுமார்): 6000-க்கும் மேற்பட்டவை
- "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்: பாரதியார்
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்: தொல்காப்பியம்
- முதன்முதலில் தமிழ் என்ற சொல் இடம்பெற்ற நூல்: தொல்காப்பியம்
- முதன்முதலில் தமிழ்நாடு என்ற சொல் இடம்பெற்ற நூல்: சிலப்பதிகாரம்
- முதன்முதலில் தமிழன் என்ற சொல் இடம்பெற்ற நூல்: அப்பர் தேவாரம்
- மா என்ற சொல் தரும் பொருள்கள்: மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அழைத்தல்
- சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது: மொழி
- உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்: தொல்காப்பியர்
பகுதி 2: அறநூல்கள் மற்றும் அறிவியல்
- திருக்குறள் எவ்வாறு அழைக்கப்படுகிறது: உலகப் பொதுமறை
- திருவள்ளுவர் வாழ்ந்த காலம் (சுமார்): 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை: 1330
- அப்துல் கலாமுக்கு தமிழில் மிகவும் பிடித்த நூல்: திருக்குறள்
- மூதுரை நூலின் ஆசிரியர்: ஔவையார்
- "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்" பாடலின் ஆசிரியர்: ஔவையார்
- மூதுரை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை: 31
- "பாடுபட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்" என்று அறிவுறுத்தியவர்: ஔவையார்
- ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார்
- ஆசாரக்கோவை நூலில் உள்ள வெண்பாக்கள்: 100
- "அறிவியல் ஆத்திச்சூடி" நூலின் ஆசிரியர்: நெல்லை சு. முத்து
- நெல்லை சு. முத்துவை "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று பாராட்டியவர்: அப்துல் கலாம்
- தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள்: பிப்ரவரி 28
பகுதி 3: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை கூறியவர்: கலிலியோ
- சுறா மீன் தாக்கிய புண்ணை நரம்பினால் தைத்த செய்தி உள்ள நூல்: நற்றிணை
- போர்க்களத்தில் வெண்ணிற ஊசியால் காயத்தை தைத்த செய்தி உள்ள நூல்: பதிற்றுப்பத்து
- ரோபோ (Robot) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்: காரல் கபெக்
- ரோபோ என்ற சொல்லின் பொருள்: அடிமை
- சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவை தோற்கடித்த மீத்திறன் கணினியின் பெயர்: டீப் ப்ளூ (Deep Blue)
- சோபியா (Sophia) ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு: சவுதி அரேபியா
- சோபியா ரோபோவிற்கு ஐ.நா சபை வழங்கிய பட்டம்: புதுமைகளின் வெற்றியாளர்
பகுதி 4: இலக்கணம்
- குறில் எழுத்து ஒலிக்கும் கால அளவு: 1 மாத்திரை
- நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு: 2 மாத்திரை
- மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு: அரை (1/2) மாத்திரை
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு: அரை மாத்திரை
- சார்வெழுத்து எத்தனை வகைப்படும்: 10
- மயங்கொலி எழுத்துகள் மொத்தம்: 8
- சுட்டு எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை: 3 (அ, இ, உ)
- பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்: ஆறு
பகுதி 5: காப்பியங்கள் மற்றும் கவிஞர்கள்
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர்: இளங்கோவடிகள்
- முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படும் நூல்: சிலப்பதிகாரம்
- இரட்டைக் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை
- கழுத்தில் சூடுவது: தார் (மாலை)
- "காணி நிலம் வேண்டும்" என்று பாடியவர்: பாரதியார்
- பாரதியாரின் இயற்பெயர்: சுப்பிரமணியன்
- சுப்பிரமணியனுக்கு 'பாரதி' பட்டம் வழங்கியவர்: எட்டயபுரம் மன்னர்
- "வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்" என்று பாடியவர்: பாரதியார்
- "நானிலம் படைத்தவன்" பாடலின் ஆசிரியர்: முடியரசன்
- முடியரசனின் இயற்பெயர்: துரைராசு
- "திராவிட நாட்டின் வானம்பாடி" என்று பாராட்டப்படுபவர்: முடியரசன்
- "புதுமைகள் செய்த தேசமிது" பாடலின் ஆசிரியர்: தாராபாரதி
- தாராபாரதியின் இயற்பெயர்: இராதாகிருஷ்ணன்
- "கவி ஞாயிறு" என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர்: தாராபாரதி
- தேசத்தை உடுத்திய நூலாடையாக தாராபாரதி குறிப்பிடுவது: திருக்குறள்
- "ஆசிய ஜோதி" நூலின் ஆசிரியர்: கவிமணி தேசிய விநாயகனார்
பகுதி 6: தலைவர்கள் மற்றும் வரலாறு
- மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- "கல்விக்கண் திறந்தவர்" என்று காமராசரைப் பாராட்டியவர்: பெரியார்
- காமராசரின் சிறப்புப் பெயர்கள்: பெருந்தலைவர், கருப்பு காந்தி, படிக்காத மேதை, கர்மவீரர், ஏழைப் பங்காளர்
- இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம் இயற்றியவர்: காமராசர்
- மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்: காமராசர்
- ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு: 2016
- காந்தியடிகள் முதன்முறையாக சென்னை வந்த ஆண்டு: 1919 (பிப்ரவரி)
- வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு: 1780
- வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவின் தலைவர்: குயிலி
பகுதி 7: இயற்கையும் சுற்றுச்சூழலும்
- பறவைகள் இடம்பெயர்தல்: வலசை போதல்
- சிறகடிக்காமல் கடல்களையும் தாண்டிப் பறக்கும் பறவை: கப்பல் பறவை
- கப்பல் பறவை தரையிறங்காமல் பறக்கும் தூரம்: 400 கி.மீ
- "நாராய் நாராய் செங்கால் நாராய்" என்ற பாடலை எழுதியவர்: சத்திமுத்தப் புலவர்
- தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம்: சிட்டுக்குருவி
- இந்தியாவின் பறவை மனிதர்: சலீம் அலி
- சலீம் அலி எழுதிய தன் வரலாற்று நூல்: சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
- உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவை: ஆர்டிக் ஆலா
- உலக சிட்டுக்குருவிகள் தினம்: மார்ச் 20
- "கிழவனும் கடலும்" (The Old Man and the Sea) நூலின் ஆசிரியர்: எர்னஸ்ட் ஹெமிங்வே
- "கிழவனும் கடலும்" நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு: 1954
பகுதி 8: தமிழர் பண்பாடு மற்றும் நாகரீகம்
- தால்+ஆட்டு என்பதில் 'தால்' என்பதன் பொருள்: நாக்கு
- பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று கூறும் நூல்: நன்னூல்
- திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் நாள்: தை முதல் நாள்
- திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நாள்: தை இரண்டாம் நாள்
- மாடு என்னும் சொல்லுக்குரிய பொருள்: செல்வம்
- மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர்கள்: மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல்
- 'மாமல்லன்' என்ற பட்டப்பெயர் கொண்ட பல்லவ மன்னன்: முதலாம் நரசிம்மவர்மன்
- தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகம்: பூம்புகார்
பகுதி 9: நூலகம் மற்றும் சங்க இலக்கிய மேற்கோள்கள்
- ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்
- இந்திய நூலகவியலின் தந்தை: இரா. அரங்கநாதன்
- சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது: இரா. அரங்கநாதன் விருது
- நாட்டுப்புற இயல் ஆய்வு நூலைத் தொகுத்தவர்: சு. சக்திவேல்
- "தன்னாடு விளைந்த வெண்ணெல் தந்து" வரிகள் இடம்பெற்ற நூல்: நற்றிணை
- "பாலொடு வந்து கூழொடு பெயரும்" வரிகள் இடம்பெற்ற நூல்: குறுந்தொகை
- "பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" வரிகள் இடம்பெற்ற நூல்: அகநானூறு
- "கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" என்று கூறும் நூல்: பட்டினப்பாலை


0 Comments