ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 16
வாழ்த்து, திருக்குறள், மொழி மற்றும் கவிதை
- திருவள்ளுவரின் வேறு பெயர்கள் யாவை?
விடை: நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், செந்தாப் போதார், பெருநாவலர், மாதானுபங்கி. - தம் எண்ணங்களையும் கருத்துகளையும் பிறருக்கு அறிவிக்கும் கருவி எது?
விடை: மொழி. - பாரதியார் வாழ்ந்த காலம் எது?
விடை: 11.12.1882 - 11.09.1921. - புதுக்கவிதை வளர்ச்சியில் யாருடைய பங்கு போற்றத்தக்கது?
விடை: வல்லிக்கண்ணன். - தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண் விடுதலை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலானவற்றை பாடற் பொருட்களாகக் கொண்ட கவிதைகள் யாருடையவை?
விடை: பாரதிதாசன். - இரவி என்பதன் பொருள் என்ன?
விடை: சூரியன்.
- தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
விடை: திருவாலவாய்க் காண்டம். - "கொங்கு தேர் வாழ்க்கை..." என்று தொடங்கும் பாடலை இறைவன் யாருக்காகப் பாடினார்?
விடை: தருமிக்காக. - மதுரைக்காண்டம், கூடல்காண்டம், திருவாலவாய்க்காண்டம் ஆகியவற்றில் உள்ள படலங்களின் எண்ணிக்கை முறையே எத்தனை?
விடை: 18 படலம், 30 படலம், 16 படலம். - பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பவை எதனைக் குறிக்கும் பெயர்கள்?
விடை: மரக்கலத்தைக் குறிக்கும் பெயர்கள். - பழந்தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பொருட்கள் யாவை?
விடை: இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலம், இலவங்கம், இஞ்சி. - அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், அறிவியல் ஈடுபாடும் கொண்டவராகவும் விளங்கியவர் யார்?
விடை: கெலன் கெல்லர். - கெலன் கெல்லரின் ஆசிரியர் யார்?
விடை: அன்னி சல்லிவான். - கெலன் கெல்லரின் ஆசிரியர் அன்னிசல்லிவான் இறந்த ஆண்டு எது?
விடை: 1930. - "வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்" என்று கூறியவர் யார்?
விடை: கெலன் கெல்லர். - "சாதுவன்" வணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பை கூறும் நூல் எது?
விடை: மணிமேகலை. - மணிமேகலையை மணிபல்லவத்தீவிற்கு தூக்கிச் சென்ற தெய்வம் யாது?
விடை: மணிமேகலா தெய்வம்.
- குதிரையைக் குறிக்கும் பெயர்கள் யாவை?
விடை: கந்துகம், கோணம், கொக்கு, குந்தம், பாடலம், சடிலம். - சேலத்து வேந்தன் செழியத்தரையினிடம் குதிரை வேண்டி சீட்டுக்கவி எழுதி அனுப்பியவர் யார்?
விடை: அந்தகக்கவி வீரராகவர். - திருக்கழுக்குன்றப் புராணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை: அந்தகக்கவி வீரராகவர். - செய்யுள் வடிவில் எழுதப்படும் கடிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: சீட்டுக்கவி. - கந்துகம், குந்தகம், பாடலம், சடிலம் ஆகிய சொற்களின் பொருள் யாது?
விடை: பந்து, சூலம், பாதிரிப்பூ, சடை. - துபாசி என்றால் என்ன?
விடை: இருமொழிப்புலமையுடையவர் (மொழிபெயர்ப்பாளர்). - வளவு என்பதன் பொருள் யாது?
விடை: வீடு. - "ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை" என்பது யாருடைய கனவு?
விடை: பாரதியார். - "தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து" என்று கூறியவர் யார்?
விடை: மு.வரதராசனார். - முத்தொள்ளாயிரம் என்ற நூலில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?
விடை: மூன்று தொள்ளாயிரம். - புறாவிற்குத் தன் தசையை அளித்த மன்னன் யார்?
விடை: சோழ மன்னன். - பாண்டிய மன்னனின் யானை தன் தந்தங்களை எதனைக் கொண்டு மார்போலை எழுதும்?
விடை: எழுத்தாணியாகக் கொண்டு. - 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று எது?
விடை: பரணி. - திருவிழாக்களில் காவடி, தேர் இழுப்பதும் எந்த தீவில் இன்னும் நடைபெற்று வருகின்றன?
விடை: ரியூனியன் தீவில். - இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாகத் திகழும் மொழி எது?
விடை: தமிழ்மொழி. - தமிழர்கள் எந்த நாடுகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் கலந்துகொண்டு பல பதவிகளை வகித்து வருகின்றனர்?
விடை: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர். - தமிழர்கள் எந்த நாடுகளில் குடியரசு தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
விடை: சிங்கப்பூர், மொரிசியசு. - தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்), சதுரகாதி (தமிழின் முதல் அகராதி), தேம்பாவணி, பரமார்த்த குரு கதை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
விடை: வீரமாமுனிவர்.
- திரு.வி.க. இயற்றிய உரைநடை நூல்கள் யாவை?
விடை: இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி. - திரு.வி.க. இயற்றிய செய்யுள் நூல்கள் யாவை?
விடை: முருகன் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், அருள்வேட்டல், கிறித்துவின் அருள்வேட்டல், அருகன் அருகே, உரிமைவேட்டல், பொதுமை வேட்டல், பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும். - "அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்" எனக் கூறுவது எது?
விடை: உமர்கய்யாம் பாடல்கள். - "துன்ப நோயை நீக்கிடுமேல் துவ்வா விடமும் அமுதாகும்" எனக் கூறுவது எது?
விடை: உமர்கய்யாம் பாடல்கள். - "ஏழையாகி எளியவரின் எளியனாக ஆக வேண்டும்" எனக் கூறுவது எது?
விடை: உமர்கய்யாம் பாடல்கள். - மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும் இறைவனது படைப்பையும் பாடுபொருளாக கொண்டவை எது?
விடை: உமர்கய்யாம் பாடல்கள். - கவிமணியின் உமர்கய்யாம் பாடல்கள் எதனை விளக்குகின்றன?
விடை: வாழ்க்கை தத்துவத்தை. - அறுசுவையின் பயன்களுள் இனிப்பு, துவர்ப்பு எதனைத் தரும்?
விடை: வளம், ஆற்றல். - அறுசுவையின் பயன்களுள் கைப்பு, கார்ப்பு எதனைத் தரும்?
விடை: மென்மை, உணர்வு. - அறுசுவையின் பயன்களுள் உவர்ப்பு, புளிப்பு எதனைத் தரும்?
விடை: தெளிவு, இனிமை. - பசிப்பிணிக்கு எது மருந்து?
விடை: உணவே மருந்து. - நோய்க்கு முதல் காரணம் எது?
விடை: உப்பு. - பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிப்பது எது?
விடை: இஞ்சி. - கண் குளிர்ச்சியையும் அறிவும் தெளிவையும் உண்டாக்குவது எது?
விடை: நல்லெண்ணெய். - சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கச் செய்வது எது?
விடை: சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர். - உடலுக்கு வலிவூட்டவும் கழிவை அகற்றவும் பயன்படுவது எது?
விடை: கீரை. - "மீதூண் விரும்பேல்” என்றுக் கூறியவர் யார்?
விடை: ஔவையார். - "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று கூறியவர் யார்?
விடை: கவிமணி. - கீழாநெல்லியின் வேறு பெயர்கள் யாவை?
விடை: கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி. - தூதுவளையின் வேறு பெயர்கள் யாவை?
விடை: தூதுவளை, சிங்கவல்லி. - "குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு" என்ற வழக்கு ஏற்படக் காரணம் என்ன?
விடை: பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால். - கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்கள் யாவை?
விடை: கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம். - குரல் வளத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீடிக்கும் மூலிகை எது?
விடை: தூதுவளை. - மலப்புழுக்களை வெளியேற்றி வயிற்றைத் தூய்மை செய்வது எது?
விடை: குப்பைமேனி. - முறிந்த எலும்பு விரைவில் கூட, எதனை அரைத்துத் தடவ வேண்டும்?
விடை: முருங்கைப் பட்டையை அரைத்துத் தடவிட. - வீக்கத்தைக் குறைக்க, கண்பார்வையை ஒழுங்குபடுத்த, உடலை வலுவாக்க பயன்படுவது எது?
விடை: முருங்கைப் பட்டை. - இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும்பங்கு வகிப்பது எது?
விடை: முருங்கை. - வாய்ப்புண், குடற்புண் நீக்க பயன்படுவது எது?
விடை: மணத்தக்காளிக்கீரை. - பல் சார்ந்த நோய்களைக் குணமாக்க பயன்படும் கீரை எது?
விடை: அகத்திக்கீரை.
- திருக்குறள் கூறும் தவம் என்பது யாது?
விடை: பிற உயிர்களை கொல்லாமை. - சால்பு என்பது யாது?
விடை: பிறர் குறைகளைச் சொல்லாமை. - ஒரு செயலைச் செய்பவர்க்கு வலிமை தருவது எது?
விடை: பணிவு. - சான்றாண்மையை அளந்தறியும் உரைகல் எது?
விடை: தோல்வியை ஒப்புக்கொள்வதே. - மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது?
விடை: பகைவர். - யாருக்கு நன்மையே செய்ய வேண்டும்?
விடை: தீங்கிழைத்தவர்க்கும். - "பழந்தமிழ் கற்றல் இன்பம் பல நாடு சுற்றல் இன்பம்", "கற்றவர் முன் தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம்" என்று கூறியவர் யார்?
விடை: சுரதா. - சுரதா அவர்கள் பிறந்த ஊர் எது?
விடை: நாகை மாவட்டம் பழையனூர். - சுரதா அவர்கள் பிறந்த நாள் எது?
விடை: 23.11.1921. - சுரதா அவர்களின் பெற்றோர் பெயர் யாது?
விடை: திருவேங்கடம் செண்பகம். - சுரதா என்ற பெயரின் விரிவாக்கம் யாது?
விடை: சுப்புரத்தினதாசன். - சுரதா இயற்றிய நூல்கள் யாவை?
விடை: தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும். - தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்ற சுரதாவின் நூல் எது?
விடை: தேன்மழை. - சுரதா பெற்ற பட்டமும் விருதும் எது?
விடை: கலைமாமணி பட்டம், பாவேந்தர் விருது. - தமிழக இயலிசை நாடக மன்றம் வழங்கும் பட்டம் எது?
விடை: கலைமாமணி. - காமராசரின் பெற்றோர் பெயர் யாது?
விடை: குமாரசாமி, சிவகாமி. - காமராசர் எந்த நூல்நிலையத்தில் படித்து திறமையாகப் பேசவும், வாதம் செய்யவும் கற்றுக்கொண்டார்?
விடை: மெய்கண்டான் புத்தகசாலை. - காமராசர் கலந்துகொண்ட போராட்டங்கள் எவை?
விடை: சைமன்குழு எதிர்ப்பு, உப்புச்சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம். - தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவராக காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?
விடை: 1939. - 1945இல் யாருடைய தலைமையில் அமைச்சரவை அமைய காமராசர் காரணமாக இருந்தார்?
விடை: பிரகாசம். - 1947இல் யாருடைய தலைமையில் அமைச்சரவை அமைய காமராசர் காரணமாக இருந்தார்?
விடை: ஓமந்தூர் இராமசாமி. - 1949இல் யாருடைய தலைமையில் அமைச்சரவை அமைய காமராசர் காரணமாக இருந்தார்?
விடை: குமாரசாமி. - இராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஆண்டு எது?
விடை: 1954. - காமராசர் ஆட்சிக் காலத்தில் தொழிலமைச்சராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் யார்?
விடை: ஆர்.வெங்கட்ராமன். - காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வியமைச்சராக இருந்து, அவருக்கு உறுதுணையாகப் பணியாற்றியவர் யார்?
விடை: சி.சுப்பிரமணியம். - கிண்டி, அம்பத்தூர், இராணிப்பேட்டை முதலிய இடங்களில் யார் ஆட்சிக்காலத்தில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன?
விடை: காமராசர். - நிலச்சீர்திருத்தம் செய்து, நில உச்சவரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது யாருடைய ஆட்சிக்காலத்தில்?
விடை: காமராசர். - காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த காமராசர் கொண்டு வந்த திட்டத்தின் பெயர் யாது?
விடை: காமராசர் திட்டம். - காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்ற ஆண்டு எது?
விடை: 1963. - இந்திய பிரதமர் நேரு இறந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரியை போட்டியின்றி பிரதமராக தேர்ந்தெடுத்தவர் யார்?
விடை: காமராசர். - லால்பகதூர் சாஸ்திரி எதிர்பாராத முறையில் உயிரிழந்த பிறகு நேருவின் மகள் இந்திராகாந்தியை பிரதமராக தேர்ந்தெடுத்தவர் யார்?
விடை: காமராசர். - காமராசர் இயற்கை எய்திய ஆண்டு எது?
விடை: 1975 அக்டோபர் 2. - எந்த ஆண்டு காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா விருது வழங்கியது?
விடை: 1976. - சத்தியமூர்த்தியைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர் யார்?
விடை: காமராசர்.


0 Comments