அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள்
- தொலைநகல் இயந்திரத்தின் (Fax) ஆங்கிலப் பெயர்: Facsimile
- குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டவர்: அலெக்சாண்டர் பெயின் (ஸ்காட்லாந்து)
- அலெக்சாண்டர் பெயின் காப்புரிமை பெற்ற ஆண்டு (மின்னாற்றல் மூலம் அச்சிடுதல்): 1846
- பாண்டெலிகிராப் (Pantelegraph) என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர்: ஜியோவான்னி காசில்லி (இயற்பியல் வல்லுநர்)
- பாரிஸ் - லியான் நகரங்களுக்கிடையே தொலைநகல் சேவை தொடங்கிய ஆண்டு: 1865
- கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையை (GammaFax) கண்டுபிடித்தவர்: ஹாங்க் மாக்னஸ்கி
- ஹாங்க் மாக்னஸ்கி கண்டுபிடித்த ஆண்டு (GammaFax): 1985
- தானியக்கப் பண இயந்திரத்தை (ATM) கண்டுபிடித்தவர்: ஜான் ஷெப்பர்டு பாரன்
- முதல் ATM இயந்திரம் நிறுவப்பட்ட இடம்: லண்டன் (பார்க்லேஸ் வங்கி)
- கடவுச்சொல்லுடன் (Password) கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றவர்: ஆட்ரியன் ஆஷ்பீல்டு (1962)
- இணைய வணிகத்தை (Online Shopping) கண்டுபிடித்தவர்: மைக்கல் ஆல்ட்ரிச் (1979)
- இணையம் (Internet) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு: 1991
- "வையக விரிவு வலை" (WWW) வழங்கியவர்: டிம் பெர்னர்ஸ் லீ
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகைத் தேர்வு: தேசியத் திறனாய்வுத் தேர்வு (NTSE)
- எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகைத் தேர்வு: தேசியத் திறனாய்வுத் தேர்வு (NMMS)
- ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகப் பகுதிகளில் நடத்தப்படும் தேர்வு: ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
- சீவக சிந்தாமணி பாடலை இயற்றியவர்: திருத்தக்க தேவர் (சமண சமயத்தைச் சார்ந்தவர்)
- விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்: சீவக சிந்தாமணி
- சீவக சிந்தாமணியின் உட்பிரிவு: இலம்பகம் (மொத்தம் 13 இலம்பகங்கள்)
- சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்: மணநூல், முக்தி நூல், காம நூல்
- திருத்தக்க தேவரின் காலம்: பொ.ஆ. 9-ஆம் நூற்றாண்டு
- சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக அவர் இயற்றிய நூல்: நரிவிருத்தம்
- "இன்பச் சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும்" என்று நிறுவியவர்: திருத்தக்க தேவர்
- "சொல்லரும் சூழ்பசும் பாம்பின் தோற்றம் போல்" என்ற பாடல் இடம்பெறும் நூல்: சீவக சிந்தாமணி
- "பொன் போல் கள்ளிப் பொறிவண்டு" என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்: சீவக சிந்தாமணி
- ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர் என சீவக சிந்தாமணி கூறுவது: ராஜமாபுரம்
- முத்தொள்ளாயிரம் புகழும் நாடுகள்: சேர, சோழ, பாண்டிய
- முத்தொள்ளாயிரம் பாடல்கள் எந்த பா வகையைச் சார்ந்தது: வெண்பா
- "அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ" என்ற பாடல் புகழ்வது: சேர மன்னன் (கோக்கோதை நாடு)
- "காவல் உழவர் களத்து அகத்துப் போர் ஏறி" என்ற பாடல் புகழ்வது: சோழ மன்னன்
- "நந்தின் இளஞ்சினையும் புன்னைக்குவி மொட்டும்" என்ற பாடல் புகழ்வது: பாண்டிய மன்னன்
- முத்தொள்ளாயிரம் நூலின் ஆசிரியர்: பெயர் தெரியவில்லை
- முத்தொள்ளாயிரம் ஆசிரியர் காலம் (கணிப்பு): ஐந்தாம் நூற்றாண்டு
- முத்தொள்ளாயிரத்தில் கிடைத்துள்ள பாடல்கள்: 108
- முத்தொள்ளாயிரம் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டவர்: ரா. இளங்குமரன் (அல்லது புறத்திரட்டு மூலம் கிடைத்தன)
- மதுரைக்காஞ்சி எவ்வகை நூல்: பத்துப்பாட்டு நூல்
- காஞ்சி என்பதன் பொருள்: நிலையாமை
- மதுரைக்காஞ்சியில் உள்ள மொத்த அடிகள்: 782
- மதுரையைப் பற்றி மட்டும் கூறும் அடிகள்: 354
- மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
- மதுரைக்காஞ்சியை இயற்றியவர்: மாங்குடி மருதனார்
- மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை: 13
- இளங்கமுகு - இலக்கணக் குறிப்பு: பண்புத்தொகை
- பலர்பால் வினைமுற்று விகுதிக்கு எடுத்துக்காட்டு: படித்தார் (ஆர்)
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள்: க, இய, இயர்
- தொழிற்பெயர் விகுதிகள்: தல், அல், அம், ஐ, கை
- பெயரெச்ச விகுதிகள்: அ, உம்
- வினையெச்ச விகுதிகள்: உ, இ
- பகுபத உறுப்புகளில் அடங்காமல், பகுதி விகுதிக்கு இடையில் காலத்தை உணர்த்தாமல் வருவது: எழுத்துப்பேறு
- இத் (த்) இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் பெரும்பாலும் வருவது: சாரியை
- சந்திக்காப்பு என்று அழைக்கப்படும் உறுப்பு: இத் (த்) - சந்தி
- "நடப்பேன்" - 'ப்' என்பது: எதிர்கால இடைநிலை
- "உண்டான்" - 'ட்' என்பது: இறந்தகால இடைநிலை
- "செய்கிறான்" - 'கிறு' என்பது: நிகழ்கால இடைநிலை
- சிற்பக்கலையின் வகைகள்: 4 (குடைவரை, கட்டுமான, ஒற்றைக்கல், புடைப்பு)
- பல்லவர் காலச் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டு: மாமல்லபுரம், காஞ்சி கைலாசநாதர் கோவில்
- பாண்டியர் காலச் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டு: கழுகுமலை, திருப்பரங்குன்றம்
- சோழர் காலச் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டு: தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம்
- விஜயநகர மன்னர் காலச் சிற்பங்களில் அதிகம் இடம்பெறுவது: குதிரை
- நாயக்கர் காலச் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டு: மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம்
- கண்ணகிக்குச் சிலை வடித்தவர்: சேரன் செங்குட்டுவன்
- "ஆகாயத்திற்கு அடுத்த வீடு" நூலின் ஆசிரியர்: மு. மேத்தா
- மு. மேத்தா சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்: ஆகாயத்திற்கு அடுத்த வீடு (2006)
- "முதலில் இரவு வரும்" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்: ஆதவன்
- ஆதவன் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு: 1987
- "அப்பாவின் சிநேகிதர்" சிறுகதைத் தொகுப்பிற்காக அசோகமித்திரன் விருது பெற்ற ஆண்டு: 1996
- "மின்சாரப்பூ" நூலுக்காக மேலாண்மை பொன்னுசாமி விருது பெற்ற ஆண்டு: 2008
- "சூடிய பூ சூடற்க" நூலுக்காக நாஞ்சில் நாடன் விருது பெற்ற ஆண்டு: 2010
- "ஒரு சிறு இசை" நூலுக்காக வண்ணதாசன் விருது பெற்ற ஆண்டு: 2016
- வண்ணதாசனின் இயற்பெயர்: கல்யாணசுந்தரம்
- கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதை எழுதுபவர்: வண்ணதாசன்
- "புலரி", "முன்பின்", "ஆதி" ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர்: கல்யாண்ஜி
- "அகமும் புறமும்" என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்: வண்ணதாசன்
- "தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்" என்ற நூலின் ஆசிரியர்: வண்ணதாசன்
- தமிழின் முதல் சிறுகைத் தொகுப்பு: மங்கையர்க்கரசியின் காதல்
- "மங்கையர்க்கரசியின் காதல்" சிறுகதையை எழுதியவர்: வ.வே.சு. ஐயர்
- ஓவு: ஓவியம்
- நியமம்: அங்காடி
- பொறிமயிர் வாரணம் - வாரணம்: யானை
- மாளிகை: அரண்மனை
- Launch Vehicle: ஏவு ஊர்தி
- Missile: ஏவுகணை
- Nautical Mile: கடல் மைல்
- Video Conference: காணொளிக் கூட்டம்
- Download: பதிவிறக்கம்
- Passenger Name Record (PNR): பயணியர் பெயர் பதிவு
- Electronic Devices: மின்னணுச் சாதனங்கள்
- Irrigation: பாசனம்
- Territory: நிலப்பகுதி
- Topography: நிலத்தோற்றம்
- Insncription: கல்வெட்டு
- Grain: தானியம்
- 2014-ல் நோபல் பரிசு பெற்ற இந்தியர்: கைலாஷ் சத்யார்த்தி
- "குழந்தைகளைப் பாதுகாப்போம்" என்ற இயக்கத்தைத் தொடங்கியவர்: கைலாஷ் சத்யார்த்தி
- "உனக்கு படிக்கத் தெரியாது" என்று கூறிய ஆசிரியர் யாருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தினார்: மேரி மெக்லியோட் பெத்யூன்
- கோட்டூர்புரம் நூலகம் அமைந்துள்ள ஏக்கர் பரப்பளவு: 8 ஏக்கர்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி நூல்கள் உள்ள தளம்: தரைத்தளம்


0 Comments