கவிஞர்களின் கூற்றுகள் மற்றும் வரிகள்
- "கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம்" என்று கூறியவர் யார்? மகாகவி பாரதியார்
- "என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே" என்று பாடியவர் யார்? சு.வில்வரத்தினம்
- "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்" என்று கூறியவர் யார்? ரசூல் கம்சதேவ்
- "ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரமில்லது பனுவல் அன்றே" எனக் கூறும் நூல் எது? நன்னூல்
- "ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்களின் நூல்களை எரித்தால் போதும்" எனக் கூறிய நூல் எது? பாரன்ஹீட் 451
- "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" எனக் கூறும் நூல் எது? பிங்கல நிகண்டு
- "தமிழ் தழீஇய சாயலவர்" என்று கூறியவர் யார்? கம்பன்
- "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்று பாடியவர் யார்? பாரதியார்
- ஐங்குறுநூற்றில் "ஆடுகம் விரைந்தே" எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் யார்? பேயனார்
- "சேயோன் மேய மைவரை உலகம்" எனக் கூறும் நூல் எது? தொல்காப்பியம்
- "தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்" என்று பாடியவர் யார்? வெள்ளிவீதியார்
- "உண்டால் அம்ம இவ்வுலகம்" என்று பாடியவர் யார்? கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே" எனப் பாடியவர் யார்? கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- "விஞ்ஞானி பரப்பும் வெளிச்சம் இல்லை என்றால் அஞ்ஞான இருளை அகற்ற வழியில்லை" என்றவர் யார்? மீரா
- "யாதினு மாழ்கும் அம் மாழ்கியும் என்றுழி" என்ற வரி இடம்பெறும் நூல் எது? நீலகேசி
- "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்" எனப் பாடியவர் யார்? ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- "இளமையில் கல்" என்று கூறியவர் யார்? ஒளவையார்
- "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும்" எனக் கூறும் நூல்? திரிகடுகம்
- "வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே" எனக் கூறும் நூல் எது? தொல்காப்பியம்
- "பெண்மை அறிவுயுரப் பீடோங்கும்" என்று பாடியவர் யார்? பாரதியார்
- "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்" என்றவர் யார்? மகாகவி பாரதியார்
- "இந்த உலகமே நாடக மேடை" என்று கூறியவர் யார்? ஷேக்ஸ்பியர்
- "பச்சைமா மலைபோல் மேனி" என்று பாடியவர் யார்? தொண்டரடிப்பொடி ஆழ்வார்
- "கட்டடக் கலை என்பது உறைந்து போன இசை" என்று கூறியவர் யார்? பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
- "தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க" என்று பாடியவர் யார்? கம்பர்
- "சாதல் எனில் இருவரும் சாதல் வேண்டும்" என்று பாடியவர் யார்? பாரதிதாசன்
- "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்றவர் யார்? மகாகவி பாரதியார்
- "நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்" என்று கூறியவர் யார்? பாவேந்தர் பாரதிதாசன்
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியவர் யார்? கணியன் பூங்குன்றனார்
- "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை" என்று பாடியவர் யார்? பாரதிதாசன்
- "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்றவர் யார்? மகாகவி பாரதியார்
- "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கூறும் நூல் எது? திருமந்திரம்
- "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" என்றவர் யார்? சிவவாக்கியர்
- "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றவர் யார்? திருமூலர்
- "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றவர் யார்? திருமூலர்
- "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றவர் யார்? வள்ளலார்
- "நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்" என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது? மனோன்மணீயம்
- "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற கூற்று யாருடையது? திரு.வி.க
- நன்னூலை இயற்றியவர் யார்? பவணந்தி முனிவர்
- திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் யார்? பெரியவன் கவிராயர்
- சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்? உமறுப்புலவர்
- "புல்லின் இதழ்கள்" நூலின் ஆசிரியர் யார்? வால்ட் விட்மன்
- "ராபின்சன் குரூசோ" நூலின் ஆசிரியர் யார்? டேனியல் டிஃபோ
- "ஆறாம் திணை" நூலின் ஆசிரியர் யார்? அ.முத்துலிங்கம்
- "பண்பாட்டு அசைவுகள்" நூலின் ஆசிரியர் யார்? தோ.பரமசிவன்
- "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலின் ஆசிரியர் யார்? மசானபு ஃபுகோகா
- "யானை டாக்டர்" நூலின் ஆசிரியர் யார்? ஜெயமோகன்
- "கருணாமிர்த சாகரம்" நூலின் ஆசிரியர் யார்? ஆபிரகாம் பண்டிதர்
- "பறவை உலகம்" நூலின் ஆசிரியர் யார்? சலீம் அலி
- "அக்னிச் சிறகுகள்" நூலின் ஆசிரியர் யார்? அப்துல் கலாம்
- "வாடிவாசல்" நாவலின் ஆசிரியர் யார்? சி.சு.செல்லப்பா
- "கணிப்பொறியின் கதை" நூலின் ஆசிரியர் யார்? சுஜாதா
- "கண்ணம்மா என் காதலி" நூலின் ஆசிரியர் யார்? பாரதியார்
- "ஆனந்தரங்கன் கோவை" நூலின் ஆசிரியர் யார்? தியாகராய தேசிகர்
- "வானம் வசப்படும்" நூலின் ஆசிரியர் யார்? பிரபஞ்சன்
- "சின்னசீறா" நூலின் ஆசிரியர் யார்? பனு அகமது மரைக்காயர்
- "குற்றாலக் குறவஞ்சி" நூலின் ஆசிரியர் யார்? திரிகூடராசப்பக் கவிராயர்
- "பெரிய திருமொழி" நூலின் ஆசிரியர் யார்? திருமங்கை ஆழ்வார்
- "திருவாசகம்" நூலின் ஆசிரியர் யார்? மாணிக்கவாசகர்
- "அந்நியன்" நூலின் ஆசிரியர் யார்? ஆல்பர் காம்யூ
- "குடும்ப விளக்கு" நூலின் ஆசிரியர் யார்? பாரதிதாசன்
- "பிசிராந்தையார்" நாடக நூலின் ஆசிரியர் யார்? பாரதிதாசன்
- "மறைந்து போன தமிழ் நூல்கள்" நூலின் ஆசிரியர் யார்? மயிலை சீனி.வேங்கடசாமி
- "பால்வீதி" கவிதை நூலின் ஆசிரியர் யார்? அப்துல் ரகுமான்
- "கடவுளும் கந்தசாமி பிள்ளையும்" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? புதுமைப்பித்தன்
- "மநுமுறை கண்ட வாசகம்" நூலின் ஆசிரியர் யார்? வள்ளலார்
- "பெண்ணின் பெருமை" நூலின் ஆசிரியர் யார்? திரு.வி.க
- "அறிவியல் தமிழ்" நூலின் ஆசிரியர் யார்? வா.செ.குழந்தைசாமி
- "உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்? சாமுவெல் பெப்பிசு
- "இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுபவர் யார்? ஆனந்தரங்கர்
- "தமிழிசை இயக்கத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்? ஆபிரகாம் பண்டிதர்
- "காவடி சிந்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்? சென்னிகுளம் அண்ணாமலையார்
- "சிறுகதை மன்னன்" என்று அழைக்கப்படுபவர் யார்? புதுமைப்பித்தன்
- "புரட்சிக்கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன்
- "தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்" என்று அழைக்கப்படுபவர் யார்? சங்கரதாஸ் சுவாமிகள்
- அழகிய பெரியவன் என்பவரின் இயற்பெயர் என்ன? அரவிந்தன்
- பிரமிள் என்பவரின் இயற்பெயர் என்ன? சிவராமலிங்கம்
- சுஜாதாவின் இயற்பெயர் என்ன? ரங்கராஜன்
- மீரா என்பவரின் இயற்பெயர் என்ன? மீ.ராசேந்திரன்
- புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன? சொ.விருத்தாசலம்
- இளையராஜாவின் இயற்பெயர் என்ன? இராசையா (எ) ஞானதேசிகன்
- "திருப்பாவை" வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? தமிழ்மாலை
- "புறநானூறு" வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? புறம் / புறப்பாட்டு
- "அகநானூறு" வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெடுந்தொகை
- "குற்றாலக் குறவஞ்சி" வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? குறத்திப்பாட்டு
- "நற்றிணை" வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நல்ல திணை
- "நீலகேசி" வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீலகேசித் தெருட்டு
- திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யூ.போப்
- "வால்ட் விட்மன்" நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? சங்கர் ஜெயராமன்
- வால்ட் விட்மன் எந்த நாட்டைச் சார்ந்தவர்? அமெரிக்கா
- பாப்லோ நெரூடா எந்த நாட்டைச் சார்ந்தவர்? சிலி
- மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது? திருவாதவூர்
- மௌலானா ரூமி எந்த நாட்டைச் சார்ந்தவர்? ஆப்கானிஸ்தான்
- நன்னூல் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது? இரண்டு (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்)
- ஐங்குறுநூறு நூலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை? 500 பாடல்கள்
- குறுந்தொகை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 401 பாடல்கள்
- சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது? 3 காண்டங்கள்
- திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 658 பாடல்கள்
- உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் யார்? சீதக்காதி
- "எழுத்து" இதழைத் தொடங்கியவர் யார்? சி.சு.செல்லப்பா


0 Comments