நூல் மற்றும் ஆசிரியர் பெயர்கள்
- நன்னூல் - "காலம் களனே காரணம் என்று இம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே" எனக் கூறும் நூல்.
- நன்னூல் - "முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்" என்று பாயிரத்திற்குரிய பெயர்களைக் கூறும் நூல்.
- நீலகேசி - "மரங்களும் மன்னுயிர் எய்தின என்ன" என்று பாடிய நூல்.
- திருமந்திரம் - "துணையாய் வருவது தூயநற் கல்வி" எனக் கூறும் நூல்.
- தொல்காப்பியம் - "ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்" என்று கல்வி முறையைப் பற்றிக் கூறும் நூல்.
- முதுமொழிமாலை - நூலின் ஆசிரியர் உமறுப்புலவர்.
- Extracts from Purananuru and Puraporul Venbamalai - நூலின் ஆசிரியர் ஜி.யூ.போப்.
- சூளாமணி வசனம் - நூலின் ஆசிரியர் சி.வை.தாமோதரனார்.
- எழுத்து இதழ் தொகுப்பு - நூலின் தொகுப்பாசிரியர் கி.அ.சச்சிதானந்தன்.
- அடுத்த நூற்றாண்டு - நூலின் ஆசிரியர் சுஜாதா.
- கணினியை விஞ்சும் மனித மூளை - நூலின் ஆசிரியர் கா.விசயரத்தினம்.
- பாரதியைப் பற்றி நண்பர்கள் - நூலின் ஆசிரியர் ரா.அ.பத்மநாபன்.
- முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் உரைகளின் ஆசிரியர் டி.கே.சி.
- மீனாட்சி ஸ்தோத்திரம் பாடியவர் ஆதிசங்கரர்.
- வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது - நூலின் ஆசிரியர் இளையராஜா.
- சிவானந்த நடனம் - நூலின் ஆசிரியர் ஆனந்த குமாரசுவாமி.
- தஞ்சைப் பெருவுடையார் கோயில் - நூலின் ஆசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
- Love Poems from a Classical Tamil Anthology - நூலின் ஆசிரியர் ஏ.கே.ராமானுஜம்.
- உருமாற்றம் (Metamorphosis) - நூலின் ஆசிரியர் காப்கா.
- சொற்கள் - நூலின் ஆசிரியர் ழாக் பிரெவர்.
- குட்டி இளவரசன் - நூலின் ஆசிரியர் எக்சுபெரி.
- உலகக் கவிதைகள் - நூலின் ஆசிரியர் பிரம்மராஜன்.
- சொல்லாக்கம் - நூலின் ஆசிரியர் இ.மறைமலை.
- மஸ்னவி பாரசீக ஞான காவியம் இயற்றியவர் மௌலானா ரூமி.
- என் வாழ்க்கை என் கையில் - நூலின் ஆசிரியர் ஞாநி.
- நான் வித்யா - நூலின் ஆசிரியர் லிவிங் ஸ்மைல் வித்யா.
- தாகூரின் கடிதங்கள் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசுவாமி.
- மனைவியின் கடிதம் (தாகூர் சிறுகதைகள்) நூலை மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசுவாமி.
- மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் நூலின் மொழிபெயர்ப்பாளர் அய்யாசாமி.
- தமிழ் அழகியல், நவீன ஓவியம் - கட்டுரை நூல்களின் ஆசிரியர் இந்திரன்.
- உயிர்த்தெழும் காலத்துக்காக - கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் சு.வில்வரத்தினம்.
- கடல்புறா - நூலின் ஆசிரியர் சாண்டில்யன்.
- நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - நூலின் ஆசிரியர் அ.கி.பரந்தாமனார்.
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - நூலின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரனார்.
- குறடு, நெரிகட்டு - சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர் அழகிய பெரியவன்.
- உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு - கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் அழகிய பெரியவன்.
- மீள்கோணம், பெருகும் வேட்கை - கட்டுரைத் தொகுப்புகளின் ஆசிரியர் அழகிய பெரியவன்.
- வெயிலும் நிழலும் - கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் பிரமிள்.
- நட்சத்திரவாசி - நாடக நூலின் ஆசிரியர் பிரமிள்.
- ஊமைச்செந்நாய், மத்தகம் - நூல்களின் ஆசிரியர் ஜெயமோகன்.
- அறம் - சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் ஜெயமோகன்.
- வீரைத் தலபுராணம், சங்கரன்கோவில் திரிபந்தாதி - நூல்களின் ஆசிரியர் சென்னிகுளம் அண்ணாமலையார்.
- சுதந்திர தாகம், ஜீவனாம்சம் - நூல்களின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா.
- பொங்கியெழு கேணி, மின்சாரம், ராக்கெட்டும் துணைக்கோள்களும் - நூல்களின் ஆசிரியர் பெ.நா.அப்புசாமி.
- தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதய நகரிலிருந்து - நூல்களின் ஆசிரியர் இ.ரா.மீனாட்சி.
- ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் - நூலின் ஆசிரியர் புலவரேறு அரிமதி தென்னகன்.
- ஒரு புளிய மரத்தின் கதை, குழந்தைகள் பெண்கள் ஆண்கள், செம்மீன், தோட்டியின் மகன் (மொழிபெயர்ப்பு) - நூல்களின் ஆசிரியர் சுந்தர ராமசாமி.
- பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேரதாண்டவம் - நூல்களின் ஆசிரியர் பாரதிதாசன்.
- இராமேஸ்வரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் - நூல்களின் ஆசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி.
- ஜீவா வாழ்க்கை வரலாறு - நூலின் ஆசிரியர் கே.பாலதண்டாயுதம்.
- நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை - நூல்களின் ஆசிரியர் அப்துல் ரகுமான்.
- காஞ்சனை, சாபவிமோசனம் - கதைகளின் ஆசிரியர் புதுமைப்பித்தன்.
- தெய்வமணிமாலை, கந்தர் சரணப்பத்து - நூல்களின் ஆசிரியர் வள்ளலார்.
- தாமரை நெஞ்சம் - நூலின் ஆசிரியர் அகிலன்.
- இளமை விருந்து, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சைவத்திறவு, பொதுமை வேட்டல் - நூல்களின் ஆசிரியர் திரு.வி.க.
- சு.வில்வரத்தினம் - "வழிவழி நினதடி தொழுதவர், உழுதுவர், விதைத்தவர்" மற்றும் "கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்" என்று பாடியவர்.
- மசானபு ஃபுகோகா - "இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய்" மற்றும் "விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லா காலத்திலும் திகழும்" என்றவர்.
- பெரியவன் கவிராயர் - "மலரில் ஆரளி இந்துளம் பாடும்" (வடகரை நாட்டின் வளம்), "வளருங் காவில் முகில்தொகை ஏறும்" (தென்கரை நாட்டின் வளம்), "இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்" என்று பாடியவர்.
- சென்னிகுளம் அண்ணாமலையார் - "அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்" என்று பாடியவர்.
- பேராசிரியர் க்வாபெனா போஹென் - "உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட மனித மூளை சிறந்தது" என்றவர்.
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - "வறிது நிலைஇய காயமும்" என்று பாடியவர்.
- மா.ராசமாணிக்கனார் - "சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் விளங்கியது" என்று கூறியவர்.
- போதனார் - நற்றிணையில் "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்" என்று பாடியவர்.
- வ.வே.சு - "அந்த காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் சித்திரகுப்தன் எழுதிவரும் பதிவை போல எழுதியவர்" என ஆனந்தரங்கரைப் புகழ்ந்தவர்.
- வீரை வெளியன் தித்தனார் - "முறைபுரிந்து அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்" என்று பாடியவர்.
- ஷேக்ஸ்பியர் - "ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு" என்று கூறியவர்.
- கம்பர் - "தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின்" என்று பாடியவர்.
- குமட்டூர் கண்ணனார் - "மண்ணுடை ஞாலத்து மண்ணுயிர்க்கு எஞ்சாது" என்று பாடியவர்.
- கவிஞாயிறு தாராபாரதி - "எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை" என்று பாடியவர்.
- மகாகவி பாரதியார் - "பெண்மை வெல்கென்று கூத்திடுவோம்" என்று பாடியவர்.
- பாரதிதாசன் - "மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" மற்றும் "மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்று பாடியவர்.
- திருமூலர் - "தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனுமாய் நிற்கும்" என்றவர்.
- சிவவாக்கியர் - "நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்" என்று பாடியவர்.
- கிருஷ்ணன் - "ஏழ்எழு பிறப்பும் இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையாக இதயம் நீ அளித்தருள்" என்று கர்ணனிடம் வேண்டியவர்.
- கர்ணன் - "ஓவிஇலாது பயன் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ" என்று கூறியவர்.
- ரவீந்திரநாத் தாகூர் - "பாரத நாட்டினர் மனிதன் விலங்காக மாறுவதையும் விலங்கு மனிதனாக மாறுவது பற்றி எதுவும் தவறாக எண்ணுவது இல்லை" என்றவர்.
- பேராசிரியர் சுந்தரனார் - "உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்" என்று பாடியவர்.
- திரு.வி.க - "நமது நாடு நாடாக இருக்கிறதா?" என்று கேட்டவர்.
- திரிகூடராசப்பக் கவிராயர் - குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை பாடியவர்.
- மதினா - சீறாப்புராணத்தில் "நல்தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்" என்று குறிப்பிடப்படும் நகர்.
- வெளிச்சம், நுண்கலை - இதழ்களின் ஆசிரியர் இந்திரன்.
- அன்னம் விடு தூது, கவி - இதழ்களின் ஆசிரியர் மீ.இராசேந்திரன்.
- ழ - இதழின் ஆசிரியர் ஆத்மநாம்.
- குயில் - என்ற இலக்கிய இதழை நடத்தியவர் பாரதிதாசன்.
- தேசபக்தன், நவசக்தி - இதழ்களின் ஆசிரியர் திரு.வி.க.


0 Comments