சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக / கோடிட்ட இடத்தை நிரப்புக:
- ஏற்றத் தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும்.
- நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு அசதி ஆக இருக்கும்.
- தாய்மொழியில் படித்தால் மேன்மை அடையலாம்.
- தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் மேதினி (உலகம்) சுருங்கிவிட்டது.
- "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் பாரதியார்.
- கழுத்தில் சூடுவது தார் (மாலை).
- கதிரவனின் மற்றொரு பெயர் ஞாயிறு.
- கிணறு என்பதைக் குறிக்கும் சொல் கேணி.
- சித்தம் என்பதன் பொருள் உள்ளம்.
- மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் அடுக்குகள்.
- சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி துருவப்பகுதி.
- ஒருவர்க்குச் சிறந்த அணி இன்சொல்.
- உடல் நோய்க்கு ஔடதம் (மருந்து) தேவை.
- நண்பர்களுடன் ஒருமித்து விளையாடு.
- நுட்பமாகச் சிந்தித்து அறிவது நுண்ணறிவு.
- தானே இயங்கும் இயந்திரம் தானியங்கி.
- மாணவர்கள் நூல்களை மாசற கற்க வேண்டும்.
- மாணவர் பிறர் தூற்றும்படி நடக்கக் கூடாது.
- நாம் மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்.
- பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ஊரில் பள்ளிக்கூடம் இல்லை.
- பிறரிடம் நான் இன்சொல் பேசுவேன்.
- பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது பொறை ஆகும்.
- கதிர் முற்றியதும் அறுவடை செய்வர்.
- விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் தோரணம் கட்டுவர்.
- பழையன கழிதலும் புதியன புகுதலும்.
- பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண துன்பம் தரும்.
- விருந்தினரின் முகம் எப்போது வாடும்? நம் முகம் மாறினால்.
- நிலையான செல்வம் எது? ஊக்கம்.
- ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்.
- போர்க்களத்தில் வெளிப்படும் குணம் வீரம்.
பிரித்து எழுதுக:
- அமுதென்று = அமுது + என்று
- செம்பயிர் = செம்மை + பயிர்
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- பொய்யகற்றும் = பொய் + அகற்றும்
- இடப்புறம் = இடது + புறம்
- சீரிளமை = சீர் + இளமை
- வெண்குடை = வெண்மை + குடை
- பொற்கோட்டு = பொன் + கோட்டு
- நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்
- நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே
- தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்
- வேதியுரங்கள் = வேதி + உரங்கள்
- கண்டறி = கண்டு + அறி
- ஓய்வற = ஓய்வு + அற
- ஆழக்கடல் = ஆழம் + கடல்
- விண்வெளி = விண் + வெளி
- நின்றிருந்த = நின்று + இருந்த
- அவ்வுருவம் = அ + உருவம்
- இடமெல்லாம் = இடம் + எல்லாம்
- மாசற = மாசு + அற
- கைப்பொருள் = கை + பொருள்
- பசியின்றி = பசி + இன்றி
- படிப்பறிவு = படிப்பு + அறிவு
- நன்றியறிதல் = நன்றி + அறிதல்
- பொறையுடைமை = பொறை + உடைமை
- பாட்டிசைத்து = பாட்டு + இசைத்து
- கண்ணுறங்கு = கண் + உறங்கு
- போகிப்பண்டிகை = போகி + பண்டிகை
- பொருளுடைமை = பொருள் + உடைமை
- கல்லெடுத்து = கல் + எடுத்து
- நானிலம் = நான்கு + நிலம்
சேர்த்து எழுதுக:
- நிலவு + என்று = நிலவென்று
- தமிழ் + எங்கள் = தமிழெங்கள்
- பாட்டு + இருக்கும் = பாட்டிருக்கும்
- எட்டு + திசை = எட்டுத்திசை
- சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
- கணினி + தமிழ் = கணினித்தமிழ்
- கொங்கு + அலர் = கொங்கலர்
- அவன் + அளிபோல் = அவனளிபோல்
- முத்து + சுடர் = முத்துச்சுடர்
- நிலா + ஒளி = நிலாவொளி
- தரை + இறங்கும் = தரையிறங்கும்
- வழி + தடம் = வழித்தடம்
- ஏன் + என்று = ஏனென்று
- ஔடதம் + ஆம் = ஔடதமாம்
- நீலம் + வான் = நீலவான்
- இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்
- மருத்துவம் + துறை = மருத்துவத்துறை
- செயல் + இழக்க = செயலிழக்க
- குற்றம் + இல்லாதவர் = குற்றமில்லாதவர்
- சிறப்பு + உடையார் = சிறப்புடையார்
- மானம் + இல்லா = மானமில்லா
- காடு + ஆறு = காட்டாறு
- அறிவு + உடைமை = அறிவுடைமை
- இவை + எட்டும் = இவையெட்டும்
- வாழை + இலை = வாழையிலை
- கை + அமர்த்தி = கையமர்த்தி
- பொங்கல் + அன்று = பொங்கலன்று
- உள்ளுவது + எல்லாம் = உள்ளுவதெல்லாம்
- பயன் + இலா = பயனிலா
பொருள் அறிக:
- 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்: பழமை
- 'மா' என்னும் சொல்லின் பொருள்: விலங்கு
எதிர்ச்சொல் / எதிர்ச்சொல் பொருத்துக:
- நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்: சேர்த்தல்
- எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்: அரிது
- உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்: மறைந்த
- எதிர்ச்சொல் பொருத்துக:
- அணுகு - விலகு
- ஐயம் - தெளிவு
- ஊக்கம் - சோர்வு
- உண்மை - பொய்மை
பொருத்துக:
- பொருத்துக:
- விளைவுக்கு - நீர்
- அறிவுக்கு - தோள்
- இளமைக்கு - பால்
- புலவர்க்கு - வேல்
- பொருத்துக:
- முத்துச்சுடர்போல - நிலாவொளி
- தூய நிறத்தில் - மாடங்கள்
- சித்தம் மகிழ்ந்திட - தென்றல்
பிற வினாக்கள்:
- மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்? கல்வி (மஞ்சள், வந்தான், தம்பி ஆகியவற்றில் இன எழுத்து உள்ளது)
- அவன் எப்போதும் உண்மையையே உரைக்கின்றான்.
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | ஏற்றத் தாழ்வற்ற _ அமைய வேண்டும்? | சமூகம் |
| 2 | நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _ ஆக இருக்கும்? | அசதி |
| 3 | நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | நிலவென்று |
| 4 | தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | தமிழெங்கள் |
| 5 | அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | அமுது + என்று |
| 6 | செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | செம்மை + பயிர் |
| 7 | பொருத்துக: விளைவுக்கு, அறிவுக்கு, இளமைக்கு, புலவர்க்கு | நீர், தோள், பால், வேல் |
| 8 | தாய் மொழியில் படித்தால் _ அடையலாம்? | மேன்மை |
| 9 | தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _ சுருங்கிவிட்டது? | மேதினி (உலகம்) |
| 10 | செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | செம்மை + தமிழ் |
| 11 | பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | பொய் + அகற்றும் |
| 12 | பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | பாட்டிருக்கும் |
| 13 | எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | எட்டுத்திசை |
| 14 | 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்? | பழமை |
| 15 | 'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? | இடது + புறம் |
| 16 | 'சீரிளமை' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? | சீர் + இளமை |
| 17 | சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | சிலப்பதிகாரம் |
| 18 | கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | கணினித்தமிழ் |
| 19 | "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்? | பாரதியார் |
| 20 | 'மா' என்னும் சொல்லின் பொருள்? | விலங்கு |
| 21 | கழுத்தில் சூடுவது? | தார் (மாலை) |
| 22 | கதிரவனின் மற்றொரு பெயர்? | ஞாயிறு |
| 23 | வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | வெண்மை + குடை |
| 24 | பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | பொன் + கோட்டு |
| 25 | கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | கொங்கலர் |
| 26 | அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | அவனளிபோல் |
| 27 | கிணறு என்பதைக் குறிக்கும் சொல்? | கேணி |
| 28 | சித்தம் என்பதன் பொருள்? | உள்ளம் |
| 29 | மாடங்கள் என்பதன் பொருள்? | மாளிகையின் அடுக்குகள் |
| 30 | நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? | நன்மை + மாடங்கள் |
| 31 | நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? | நிலத்தின் + இடையே |
| 32 | முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | முத்துச்சுடர் |
| 33 | நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | நிலாவொளி |
| 34 | பொருத்துக: முத்துச்சுடர்போல, தூய நிறத்தில், சித்தம் மகிழ்ந்திட | நிலாவொளி, மாடங்கள், தென்றல் |
| 35 | தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? | தட்பம் + வெப்பம் |
| 36 | வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? | வேதி + உரங்கள் |
| 37 | தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | தரையிறங்கும் |
| 38 | வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | வழித்தடம் |
| 39 | சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி? | துருவப்பகுதி |
| 40 | ஒருவர்க்குச் சிறந்த அணி எது? | இன்சொல் |
| 41 | உடல் நோய்க்கு _ தேவை? | ஔடதம் (மருந்து) |
| 42 | நண்பர்களுடன் _ விளையாடு? | ஒருமித்து |
| 43 | கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | கண்டு + அறி |
| 44 | ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | ஓய்வு + அற |
| 45 | ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | ஏனென்று |
| 46 | ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | ஔடதமாம் |
| 47 | எதிர்ச்சொல் பொருத்துக: அணுகு, ஐயம், ஊக்கம், உண்மை | விலகு, தெளிவு, சோர்வு, பொய்மை |
| 48 | அவன் எப்போதும் உண்மையையே _? | உரைக்கின்றான் |
| 49 | ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | ஆழம் + கடல் |
| 50 | விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | விண் + வெளி |
| 51 | நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | நீலவான் |
| 52 | இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | இல்லாதியங்கும் |
| 53 | நுட்பமாகச் சிந்தித்து அறிவது? | நுண்ணறிவு |
| 54 | தானே இயங்கும் இயந்திரம்? | தானியங்கி |
| 55 | நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | நின்று + இருந்த |
| 56 | அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | அ + உருவம் |
| 57 | மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | மருத்துவத்துறை |
| 58 | செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | செயலிழக்க |
| 59 | நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்? | சேர்த்தல் |
| 60 | எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்? | அரிது |
| 61 | மாணவர்கள் நூல்களை _ கற்க வேண்டும்? | மாசற |
| 62 | இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | இடம் + எல்லாம் |
| 63 | மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | மாசு + அற |
| 64 | குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | குற்றமில்லாதவர் |
| 65 | சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | சிறப்புடையார் |
| 66 | மாணவர் பிறர் _ நடக்கக் கூடாது? | தூற்றும்படி |
| 67 | நாம் _ சொல்படி நடக்க வேண்டும்? | மூத்தோர் |
| 68 | கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | கை + பொருள் |
| 69 | மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | மானமில்லா |
| 70 | பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்? | ஊரில் பள்ளிக்கூடம் இல்லை |
| 71 | பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்? | பசி + இன்றி |
| 72 | படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | படிப்பு + அறிவு |
| 73 | காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | காட்டாறு |
| 74 | மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்? | கல்வி (மஞ்சள், வந்தான், தம்பி ஆகியவற்றில் இன எழுத்து உள்ளது) |
| 75 | பிறரிடம் நான் _ பேசுவேன்? | இன்சொல் |
| 76 | பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது _ ஆகும்? | பொறை |
| 77 | அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? | அறிவுடைமை |
| 78 | இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | இவையெட்டும் |
| 79 | நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்? | நன்றி + அறிதல் |
| 80 | பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | பொறை + உடைமை |
| 81 | பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | பாட்டு + இசைத்து |
| 82 | கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | கண் + உறங்கு |
| 83 | வாழை + இலை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது? | வாழையிலை |
| 84 | கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | கையமர்த்தி |
| 85 | உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்? | மறைந்த |
| 86 | கதிர் முற்றியதும் _ செய்வர்? | அறுவடை |
| 87 | விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _ கட்டுவர்? | தோரணம் |
| 88 | பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | பொங்கலன்று |
| 89 | போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? | போகி + பண்டிகை |
| 90 | பழையன கழிதலும் _ புகுதலும்? | புதியன |
| 91 | பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _ தரும்? | துன்பம் |
| 92 | விருந்தினரின் முகம் எப்போது வாடும்? | நம் முகம் மாறினால் |
| 93 | நிலையான செல்வம் எது? | ஊக்கம் |
| 94 | ஆராயும் அறிவு உடையவர்கள் _ சொற்களைப் பேசமாட்டார்? | பயன்தராத |
| 95 | பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடக்கும் சொல்? | பொருள் + உடைமை |
| 96 | உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | உள்ளுவதெல்லாம் |
| 97 | பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? | பயனிலா |
| 98 | போர்க்களத்தில் வெளிப்படும் குணம்? | வீரம் |
| 99 | கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்? | கல் + எடுத்து |
| 100 | நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்? | நான்கு + நிலம் |


0 Comments