601. தமிழரின் கப்பல் கட்டும் கலையை வியந்து பாராட்டிய இத்தாலியப் பயணி? விடை: மார்கோபோலோ
602. முன்னீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்று கூறும் நூல்? விடை: தொல்காப்பியம்
603. "கடலோடா கால்வல் நெடுந்தேர்" என்று பெரிய கப்பல் பற்றிக் கூறும் நூல்? விடை: திருக்குறள்
604. பூம்புகார் துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்றதைக் கூறும் நூல்? விடை: பட்டினப்பாலை
605. "உலகுகிளர்ந்தன்ன உருகெழு வங்கம்" என்று பாடிய நூல்? விடை: அகநானூறு
606. "அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்" என்று கப்பல் பற்றிக் கூறும் நூல்? விடை: பதிற்றுப்பத்து
607. பலவகையான கப்பல்களின் பெயர்களைக் குறிப்பிடும் நிகண்டு நூல் எது? விடை: சேந்தன் திவாகரம்
608. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியவை எவை? விடை: தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்
609. தமிழர்கள் கடல் பயணம் மேற்கொள்ளப் பயன்படுத்திய பெரியவை எவை? விடை: கலம், வங்கம், நாவாய்
610. கப்பல் கட்டும் கலைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? விடை: கம்மியர்
611. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்" என்று கூறும் நூல்? விடை: மணிமேகலை
612. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மரத் தொகுதிகளை எவ்வாறு அழைப்பர்? விடை: தொகுதி
613. இரும்ப ஆணிகள் துருப்பிடிக்கும் என்பதால் தமிழர்கள் எதனைப் பயன்படுத்தினர்? விடை: மர ஆணி
614. கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த அளவையால் அளந்தனர்? விடை: தச்சுமுழம்
615. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் எதனைக்கொண்டு சரிசெய்தனர்? விடை: மரப்பிசின்
616. பாய்மரக் கப்பலின் பழுது பார்க்கும் முறை பற்றிக் கூறும் நூல்? விடை: பரிபாடல்
617. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எவ்வாறு அழைக்கப்படும்? விடை: எரா
618. கப்பலின் குறுக்கு மரம் எவ்வாறு அழைக்கப்படும்? விடை: பருமல்
619. கப்பலைச் செலுத்தவும் உரிய திசையில் திருப்பவும் பயன்படும் கருவி? விடை: சுக்கான்
620. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு? விடை: நங்கூரம்
621. தமிழர்கள் பயன்படுத்திய திசைகாட்டும் கருவி எவ்வாறு அழைக்கப்பட்டது? விடை: சமுக்கு
622. சமுக்கு என்ற கருவியைக் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கூறும் நூல்? விடை: கப்பல் சாத்திரம்
623. கப்பல் செலுத்துபவரை அழைக்கும் பெயர்கள் யாவை? விடை: மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி
624. "நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி" என்று காற்றின் துணை கொண்டு கப்பலைச் செலுத்தியவர்? விடை: வெண்ணிக்குயத்தியார்
625. யானை நாளொன்றுக்கு எவ்வளவு உணவு உட்கொள்ளும்? விடை: 250 கிலோ புல், இலை தழைகள்
626. யானைக்குக் குடிக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? விடை: 65 லிட்டர்
627. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது? விடை: மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)
628. ஆசிய யானைகளில் ஆண், பெண் யானைகளை வேறுபடுத்துவது? விடை: தந்தம்
629. நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ எடை இருக்கும்? விடை: 160 கிலோ
630. கரடிக்கு மிகவும் பிடித்த உணவு எது? விடை: கரையான்
631. கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டி ஈனும்? விடை: 90 நாட்களில்
632. இந்தியாவில் ஆசியச் சிங்கங்கள் எங்கு மட்டும் உள்ளன? விடை: கிர் சரணாலயம் (குஜராத்)
633. இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசன் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? விடை: புலி
634. ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படுவது? விடை: புலி
635. இந்தியாவில் உள்ள மான் வகைகளில் அழகானது எது? விடை: புள்ளிமான்
636. ஆறு கூறுகளைக் கொண்ட பெரும் பொழுதுகள் யாவை? விடை: கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
637. கார்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: ஆவணி, புரட்டாசி
638. குளிர்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: ஐப்பசி, கார்த்திகை
639. முன்பனிக்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: மார்கழி, தை
640. பின்பனிக்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: மாசி, பங்குனி
641. இளவேனிற்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: சித்திரை, வைகாசி
642. முதுவேனிற்காலம் என்பது எந்த மாதங்களைக் குறிக்கும்? விடை: ஆனி, ஆடி
643. ஒரு நாளின் ஆறு கூறுகள் எவ்வாறு அழைக்கப்படும்? விடை: சிறுபொழுது
644. காலை 6 மணி முதல் 10 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: காலை
645. காலை 10 மணி முதல் 2 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: நண்பகல்
646. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: ஏற்பாடு
647. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: மாலை
648. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: யாமம்
649. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள சிறுபொழுது? விடை: வைகறை
650. குறிஞ்சி நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: யாமம்
651. முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: மாலை
652. மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: வைகறை
653. நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: ஏற்பாடு
654. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது? விடை: நண்பகல்
655. மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்குரிய பெரும்பொழுதுகள் யாவை? விடை: ஆறு பெரும்பொழுதுகளும்
656. குறிஞ்சி நிலத்திற்குரிய மரம் எது? விடை: அகில், வேங்கை
657. முல்லை நிலத்திற்குரிய மரம் எது? விடை: கொன்றை, காயா
658. மருத நிலத்திற்குரிய மரம் எது? விடை: காஞ்சி, மருதம்
659. நெய்தல் நிலத்திற்குரிய மரம் எது? விடை: புன்னை, ஞாழல்
660. பாலை நிலத்திற்குரிய மரம் எது? விடை: இலுப்பை, பாலை
661. குறிஞ்சி நிலத்திற்குரிய பறவை? விடை: கிளி, மயில்
662. முல்லை நிலத்திற்குரிய பறவை? விடை: காட்டுக்கோழி, மயில்
663. மருத நிலத்திற்குரிய பறவை? விடை: நாரை, நீர்உாழி, அன்னம்
664. நெய்தல் நிலத்திற்குரிய பறவை? விடை: கடற்காகம்
665. பாலை நிலத்திற்குரிய பறவை? விடை: புறா, பருந்து, கழுகு
666. குறிஞ்சி நிலத்திற்குரிய தொழில்? விடை: தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
667. முல்லை நிலத்திற்குரிய தொழில்? விடை: ஏறுதழுவல், நிரை மேய்த்தல்
668. மருத நிலத்திற்குரிய தொழில்? விடை: நெல்லரிதல், களைபறித்தல்
669. நெய்தல் நிலத்திற்குரிய தொழில்? விடை: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
670. பாலை நிலத்திற்குரிய தொழில்? விடை: வழிப்பறி, நிரை கவர்தல்
671. குறிஞ்சி நிலத்திற்குரிய பறை? விடை: தொண்டகம்
672. முல்லை நிலத்திற்குரிய பறை? விடை: ஏறுகோட்பறை
673. மருத நிலத்திற்குரிய பறை? விடை: மணமுழா, நெல்லரிக்கிணை
674. நெய்தல் நிலத்திற்குரிய பறை? விடை: மீன்கோட்பறை
675. பாலை நிலத்திற்குரிய பறை? விடை: துடி
676. குறிஞ்சி நிலத்திற்குரிய யாழ்? விடை: குறிஞ்சி யாழ்
677. குறிஞ்சி நிலத்திற்குரிய பண்? விடை: குறிஞ்சிப் பண்
678. முல்லை நிலத்திற்குரிய பண்? விடை: முல்லைப் பண் (சாதாரிப்பண்)
679. மருத நிலத்திற்குரிய பண்? விடை: மருதப் பண்
680. நெய்தல் நிலத்திற்குரிய பண்? விடை: செவ்வழிப் பண்
681. பாலை நிலத்திற்குரிய பண்? விடை: பஞ்சுரப் பண்
682. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது? விடை: ஆறு (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை)
683. பா எத்தனை வகைப்படும்? விடை: நான்கு
684. வெண்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: செப்பலோசை
685. அறம் கூறும் நூல்களான திருக்குறள், நாலடியார் எப்பாவால் ஆனவை? விடை: வெண்பா
686. ஆசிரியப்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: அகவலோசை
687. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் எப்பாவால் ஆனவை? விடை: அகவற்பா (ஆசிரியப்பா)
688. கலிப்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: துள்ளலோசை
689. வஞ்சிப்பா எவ்வகை ஓசையைப் பெற்றது? விடை: தூங்கலோசை
690. தாழ்ந்து வரும் ஓசை எது? விடை: தூங்கலோசை
691. சீர் தோறும் துள்ளி வரும் ஓசை எது? விடை: துள்ளலோசை
692. வெண்பா எத்தனை வகைப்படும்? விடை: ஐந்து (குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா)
693. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? விடை: நான்கு
694. வெண்பாவின் ஈற்றுச்சீர் எதனுள் ஒன்றாக முடியும்? விடை: நாள், மலர், காசு, பிறப்பு
695. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் எதனால் முடியும்? விடை: ஏகாரத்தில்
696. "காய்முன் நிரை" வருவது எத்தளை? விடை: கலித்தளை
697. "கனிமுன் நிரை" வருவது எத்தளை? விடை: வஞ்சித்தளை
698. "மாமுன் நிரை" வருவது எத்தளை? விடை: இயற்சீர் வெண்டளை
699. "விளம்முன் நேர்" வருவது எத்தளை? விடை: இயற்சீர் வெண்டளை
700. தீவக அணி எத்தனை வகைப்படும்? விடை: மூன்று (முதல் நிலை, இடை நிலை, கடை நிலை)


0 Comments