6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-51


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-51
இராமலிங்க அடிகளார் பற்றிய தகவல்கள்:
  1. "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்" என்ற வாழ்த்துப் பாடலை இயற்றியவர்: இராமலிங்க அடிகளார்
  2. திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்: இராமலிங்க அடிகளார்
  3. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்: இராமையா, சின்னம்மையார்
  4. அவர் இயற்றிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம், திருவருட்பா
  5. பசித்தோருக்கு உணவளிக்க அவர் அமைத்தது: அறச்சாலை
  6. அறிவு நெறிக்காக அவர் நிறுவிய சபை: ஞானசபை
திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய தகவல்கள்:
  1. திருக்குறளை இயற்றியவர்: திருவள்ளுவர்
  2. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு. 31 என்று கூறுவர்
  3. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார்
  4. திருக்குறளின் பிரிவுகள்: மூன்று பிரிவுகள் (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
  5. திருக்குறளில் உள்ள குறட்பாக்கள்: 1330
  6. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்: 133
  7. திருக்குறள் இடம்பெறும் நூல் வகை: பதினெண்கீழ்க்கணக்கு
  8. திருக்குறளின் வேறு பெயர்கள்: முப்பால், பொதுமறை, தமிழ்மறை
  9. திருக்குறள் உலக மக்களால் போற்றப்படும் விதம்: உலகப் பொதுமறை
  10. திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி.) + 31
  11. "முயற்சி திருவினை ஆக்கும்" என்று கூறியவர்: திருவள்ளுவர்
உ.வே. சாமிநாதர் பற்றிய தகவல்கள்:
  1. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர்: உ.வே.சா (உ.வே.சாமிநாதய்யர்)
  2. உ.வே.சாமிநாதர் பிறந்த ஊர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
  3. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்: வேங்கடரத்தினம்
  4. உ.வே.சா.வின் ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  5. ஆசிரியர் உ.வே.சா.வுக்கு வைத்த பெயர்: சாமிநாதன்
  6. உ.வே.சா. பிறந்த ஆண்டு: 19.2.1855
  7. ஓலைச் சுவடியை அவர் எடுத்த ஊர்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
  8. நமக்காகத் தாளில் எழுதி, அச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்: உ.வே.சாமிநாதய்யர்
  9. அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்: என்சரிதம்
  10. வாழ்க்கை வரலாற்றை அவர் தொடராக எழுதிய இதழ்: ஆனந்த விகடன்
  11. உ.வே.சா. நூல் நிலையம் செயல்படும் இடம்: சென்னையில் உள்ள பெசன்ட்நகர்
  12. அவரின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியஸ் வின்சோன்
பழங்கால எழுத்து முறைகள் மற்றும் நூல்கள்:
  1. பழங்காலத்தில் பனைஓலையில் எழுதப் பயன்படுத்தியது: எழுத்தாணி
  2. பழங்காலத்தில் செய்யுள், இலக்கணம் எழுதப்பட்ட சுவடி: ஓலைச்சுவடி
  3. எழுத்தாணி கொண்டு எழுதும் ஓலை: ஓலைச்சுவடி
  4. குறிஞ்சிப்பாட்டு என்னும் சுவடியில் இருந்த பூக்களின் பெயர்கள்: 99 வகைகள்
  5. குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர்: கபிலர்
  6. சங்க நூல்கள்: பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்
  7. சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு: பதினெண் கீழ்க்கணக்கு
சமண முனிவர் மற்றும் நாலடியார்:
  1. "நாய்க்கால் சிறுவிரல் போல்" என்னும் நாலடியார் பாடலைப் பாடியவர்: சமணமுனிவர்
  2. நாலடியார் இடம்பெறும் நூல் வகை: பதினெண்கீழ்க்கணக்கு
  3. நாலடியாரில் உள்ள பாடல்கள்: 400
  4. நாலடியாரின் மற்றொரு சிறப்புப் பெயர்: நாலடி நானூறு
  5. நாலடியாரை இயற்றியவர்: சமண முனிவர்
பாரதியார் பற்றிய தகவல்கள்:
  1. "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்" என்ற பாரததேசம் பாடலைப் பாடியவர்: மகாகவி பாரதியார்
  2. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்: பாரதியார்
  3. பாரதியார் கொண்டாடப்பட்ட விதம்: பாட்டுக்கொரு புலவன் பாரதி
  4. மகாகவி பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 முதல் 11.9.1921 வரை
பாரதிதாசன் பற்றிய தகவல்கள்:
  1. "மழையே மழையே வா வா" என்ற இசையமுது பாடலை எழுதியவர்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
  2. "புரட்சிக் கவிஞர்" என்றும் பாவேந்தர் என்றும் புகழப்படுபவர்: பாரதிதாசன்
  3. பாரதிதாசன் என்பவரின் இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்
  4. பாரதியின் கவிதை மீது கொண்ட காதலால் தம் பெயரை மாற்றிக்கொண்டவர்: பாரதிதாசன்
பழமொழி நானூறு:
  1. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார்" என்ற பழமொழிநானூறு பாடலைப் பாடியவர்: முன்றுறை அரையனார்
  2. நானூறு பாடல்களைக் கொண்ட நூல்: பழமொழி நானூறு
  3. ஆற்றுணா வேண்டுவது இல் என்பதன் பொருள்: கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்
  4. பழமொழி நானூற்றின் ஆசிரியர்: முன்றுறை அரையனார்
விளம்பிநாகனார் மற்றும் நான்மணிக்கடிகை:
  1. "மனைக்கு விளக்கம் மடவாள்" என்னும் நான்மணிக்கடிகைப் பாடலை பாடியவர்: விளம்பிநாகனார்
  2. நான்மணிக்கடிகை இடம்பெறும் நூல் வகை: பதினெண் கீழ்க்கணக்கு
  3. குடும்பத்தின் விளக்கு: பெண்
  4. நான்மணிக்கடிகை என்பதன் பொருள்: நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
  5. நான்மணிக்கடிகையின் ஆசிரியர்: விளம்பிநாகனார்
சித்தர் பாடல்:
  1. "வைதோரை கூட வையாதே" என்ற சித்தர் பாடலைப் பாடியவர்: கடுவெளிச்சித்தர்
  2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர்: கடுவெளிச்சித்தர்
ஒளவையார் மற்றும் புறநானூறு:
  1. "நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்: ஒளவையார்
  2. ஒளவையார் அரிய நெல்லிக்கனியைப் பெற்றவர்: அதியமானிடம்
தாராபாரதி:
  1. உட்கார் நண்பா, நலந்தானா? நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா? என்ற பாடலின் ஆசிரியர்: தாராபாரதி
ஜப்பான் மற்றும் சடகோ:
  1. அமெரிக்கா குண்டு வீசிய ஜப்பானின் இரண்டு இடங்கள்: ஹிரோசிமா, நாகசாகி
  2. சடகோ எந்த நாட்டுச் சிறுமி: ஜப்பான்
  3. ஜப்பானியர் வணங்கும் பறவை: கொக்கு
  4. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் கூறுவது: ஒரிகாமி
  5. அரவிந்த குப்தா எழுதிய நூல்: டென் லிட்டில் பிங்கர்ஸ்
பறவைகள் மற்றும் வலசை போதல்:
  1. பட்டாசு வெடிக்காத ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் கூந்தன்குளம்
  2. பறவைகள் வெயில் மற்றும் பனி அதிகமாக இருக்கும்போது வேறு இடத்திற்குச் செல்வது: வலசை போதல்
  3. பழைய காலத்தில் மழை வரும் என்று முன்னோர்கள் கணித்தது: பறவைகள் இடம் மாறுவதை வைத்து
பாம்புகள் பற்றிய தகவல்கள்:
  1. பாம்புப் பண்ணை உள்ள இடம்: சென்னை கிண்டி
  2. உலகத்தில் உள்ள பாம்பு வகைகள்: இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது
  3. நச்சுத்தன்மை கொண்ட பாம்பு வகைகள்: ஐம்பத்திரண்டு
  4. உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு: இராஜநாகம்
  5. கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு: இராஜ நாகம்
  6. பாம்பு எச்சிலில் நஞ்சு வைத்திருப்பதன் காரணம்: இரையைக் கொல்லவும், செரிமானத்திற்காகவும்
  7. பாம்பு யாருக்கு நண்பன்: விவசாயிகளுக்கு
  8. நல்ல பாம்பின் நஞ்சு வலிநீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது, அதன் பெயர்: கோப்ராக்சின் (Cobrozin)
எழுத்துகள் பற்றிய தகவல்கள்:
  1. தமிழின் முதல் எழுத்து: 
  2. உயிர் எழுத்துக்கள்: பன்னிரண்டு (அ, ஆ, இ, ஈ...)
  3. மெய் எழுத்துக்கள்: பதினெட்டு
  4. தமிழிலுள்ள முதல் எழுத்துகள் மொத்தம்: முப்பது (உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18)
  5. குறில் எழுத்துகள் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உண்டாவது: உயிர் மெய்க்குறில் எழுத்துகள்
  6. தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்: நான்கு வகைப்படும் (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
நாட்டுப்புறப் பாடல்கள்:
  1. எழுத்து வழியாக வராமல் பாடிப் பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு: நாட்டுப்புறப் பாட்டு
  2. குழந்தையைத் தாய் தொட்டிலிலிட்டுப் பாடும் பாட்டு: தாலாட்டுப்பாடல்
  3. களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது: தொழில் பாடல்
  4. இறந்தோருக்குப் பாடும் பாடல்: ஒப்பாரிப்பாடல்கள்
விவேகானந்தர்:
  1. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போலப் பாய்ந்து சாலைக்கு வந்தவர்: விவேகானந்தர்
  2. விவேகானந்தரின் மறுபெயர்: நரேந்திரநாத்
ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி:
  1. நம் நாடு விடுதலை பெற்றபின் முதல் பிரதமர்: ஜவகர்லால் நேரு
  2. ஜவகர்லால் நேருவின் அன்பு மகள்: இந்திரா காந்தி
  3. இந்திராகாந்தி நேருவிடம் வாசிக்கப் போவதாகச் சொன்ன நாவல்: டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்"
பெரியார் பற்றிய தகவல்கள்:
  1. தமிழகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர் பெரியாரின் ஊர்: ஈரோடு
  2. பெரியார் அமைத்த சங்கம்: பகுத்தறிவாளர் சங்கம்
  3. பெரியார் அகற்ற முற்பட்ட வேறுபாடுகள்: பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி- மேல்சாதி வேறுபாடுகளை
  4. கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத்தெருவில் நடப்பதற்குத் தடை இருந்த ஊர்: வைக்கம்
  5. "பெண் விடுதலைக்குப் பின் பெண்கள் கல்வி கற்கவேண்டும்" என்று வலியுறுத்தியவர்: பெரியார்
  6. 1970 ஆம் ஆண்டு சமூகச்சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையில் பெரியாருக்கு வழங்கப்பட்ட விருது: "யுனெஸ்கோ விருது"

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement