6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-57


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-57
தமிழறிஞர்கள், நூல்கள் மற்றும் வரலாறு குறித்த வினா விடைத் தொகுப்பு

சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் பெண்கள்
  • 601. மூவலூர் அம்மையாரோடு இணைந்து தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்கள் யாவர்?
    விடை: பெரியார், திரு.வி.க., தருமாம்பாள், நீலாம்பிகை முதலானோர்.
  • 602. 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போர் பேரணியில் மூவலூர் அம்மையார் எதிலிருந்து எதுவரை நடைப்பயணம் மேற்கொண்டார்?
    விடை: உறையூர் முதல் சென்னை வரை.
  • 603. உறையூர் முதல் சென்னை வரை மூவலூர் அம்மையார் எத்தனை மைல் நடைப்பயணம் மேற்கொண்டார்?
    விடை: 577 மைல்.
  • 604. மூவலூர் அம்மையார் மொழிப்போர் பேரணியில் எத்தனை பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார்?
    விடை: 87 கூட்டங்கள்.
  • 607. மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு எந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது?
    விடை: 1989-ஆம் ஆண்டு முதல்.
  • 605. அன்னிபெசண்ட் அம்மையார் பொது வாழ்வில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?
    விடை: 50 ஆண்டுகள்.
  • 606. அன்னிபெசண்ட் அம்மையாரின் மறைவு எப்போது நிகழ்ந்தது?
    விடை: 27.06.1962.
  • 612. நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் கடலூர் அஞ்சலையம்மாள் தம்முடைய எத்தனை வயது மகளை ஈடுபடுத்தினார்?
    விடை: ஒன்பது வயது.
  • 613. அஞ்சலையம்மாளின் மகளான அம்மாக்கண்ணுவை காந்தியடிகள் எந்த ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்?
    விடை: வார்தாவில் உள்ள ஆசிரமத்திற்கு.
  • 614. அம்புஜத்தம்மாள் எந்த ஆண்டு பிறந்தார்?
    விடை: 1899 ஆம் ஆண்டு சனவரி 8.
  • 615. அம்புஜத்தம்மாள் யாருடைய எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்?
    விடை: அன்னை கஸ்தூரிபாய்.
  • 616. அம்புஜத்தம்மாள் அந்நியத் துணிகள் விற்கும் கடைக்கு முன்பாக மறியல் செய்ததால் எந்தச் சிறையில் அடைக்கப்பட்டார்?
    விடை: வேலூர்ச் சிறையில்.
  • 617. அம்புஜத்தம்மாள் 1964 ஆம் ஆண்டு பெற்ற விருது யாது?
    விடை: தாமரைத்திரு (பத்மஸ்ரீ).
இலக்கணம்
  • 608. "அகம்" என்பதற்குப் பதிலாக "அகன்" என எழுதினாலும் பொருள் மாறுபடாது இருப்பதை எவ்வாறு அழைப்பர்?
    விடை: போலி.
  • 609. போலி எத்தனை வகைப்படும்?
    விடை: மூன்று வகைப்படும் (முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி).
  • 610. இறுதிப் போலியை வேறு எவ்வாறு கூறுவர்?
    விடை: கடைப்போலி.
  • 611. "அஞ்சு ரூபாய்" என்பதில் எல்லா எழுத்துகளும் மாறியிருந்தாலும் பொருள் மாறவில்லை, இது எவ்வகைப் போலி?
    விடை: முற்றுப்போலி.
  • 618. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
    விடை: ஆறு வகைப்படும்.
  • 619. தொகாநிலைத் தொடரின் வகைகள் எத்தனை?
    விடை: ஒன்பது.
  • 620. 'பாம்பு பாம்பு' என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: அடுக்குத்தொடர்.
  • 621. 'கலகல' என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: இரட்டைக்கிளவி.
  • 660. பகுபதம் எத்தனை வகைப்படும்?
    விடை: இரண்டு (பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம்).
  • 661. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்?
    விடை: ஆறு வகைப்படும்.
  • 662. பகுபத உறுப்புகளில் "விகுதி" எவற்றைக் காட்டும்?
    விடை: திணை, பால், எண், இடம்.
  • 663. விகுதிகள் இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது எது?
    விடை: முதனிலைத் தொழிற்பெயர்.
  • 664. தொழிற்பெயரின் முதனிலையாகிய பகுதி திரிந்து வருவது எவ்வகைப் பெயர்?
    விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
  • 665. வினைமுற்று வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிப்பது என்ன பெயர்?
    விடை: வினையாலணையும் பெயர்.
  • 666. பண்புப் பெயர் எவற்றின் அடிப்படையில் தோன்றும்?
    விடை: நிறம், சுவை, அளவு, வடிவம்.
  • 673. புணர்ச்சியில் "மரம் + வேர் = மரவேர்" என்பது எவ்வகை விகாரம்?
    விடை: கெடுதல் விகாரப் புணர்ச்சி.
  • 674. நிலை மொழியின் ஈறு குற்றியலுகரமாக இருந்து வருமொழியின் முதல் எழுத்து யகரமாக இருந்தால் உகரம் இகரமாகத் திரிவது என்ன?
    விடை: குற்றியலிகரப் புணர்ச்சி.
  • 693. வழாநிலை ஆறு வகைகளில் "செல்வி பாடினாள்" என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
    விடை: திணை வழாநிலை.
  • 694. "கண்ணன் வந்தான், நாய் ஓடியது" என்பன எவ்வகை வழாநிலைக்கு எடுத்துக்காட்டுகள்?
    விடை: பால் வழாநிலை.
திருமந்திரம், திருக்குறள் மற்றும் தமிழ் மொழி
  • 622. திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
    விடை: மூவாயிரம் பாடல்கள்.
  • 623. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது எந்த நூலின் புகழ் பெற்ற தொடராகும்?
    விடை: திருமந்திரம்.
  • 644. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' - இதில் பயின்று வரும் எதுகைச் சொற்கள் எவை?
    விடை: அகழ்வாரை - இகழ்வார்ப்.
  • 645. திருக்குறளுக்கு அந்நாளிலேயே உரை செய்த பதின்மரில் யாருடைய உரை சிறந்தது என்பர்?
    விடை: பரிமேலழகர் உரை.
  • 646. திருக்குறள் முப்பெரும் பிரிவுகளில் பொருட்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
    விடை: 70 அதிகாரங்கள்.
  • 680. திருக்குறளில் எந்த சொல் பத்து அதிகாரப் பெயர்களில் முடிவாக அமைந்துள்ளது?
    விடை: உடைமை.
  • 647. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை மொழியியல் அறிஞர்கள் எத்தனை குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்?
    விடை: நான்கு மொழிக் குடும்பங்கள்.
  • 648. இந்திய நாட்டை "மொழிகளின் காட்சிச் சாலை" எனக் குறிப்பிட்டவர் யார்?
    விடை: ச. அகத்தியலிங்கம்.
  • 649. இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிக் குடும்பங்கள் உள்ளன?
    விடை: பன்னிரண்டு.
  • 650. இந்திய மானிடவியல் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
    விடை: 325 மொழிகள்.
  • 651. தென்திராவிட மொழிகள் சிலவற்றைக் கூறுக.
    விடை: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு.
  • 652. நடுத்திராவிட மொழிகள் சிலவற்றைக் கூறுக.
    விடை: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி.
  • 653. வடதிராவிட மொழிகள் யாவை?
    விடை: குரூக், மால்தோ, பிராகுய்.
இலக்கிய நூல்கள்
  • 654. "குறுமை + தொகை" என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
    விடை: குறுந்தொகை.
  • 655. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன?
    விடை: 401 பாடல்கள்.
  • 656. குறுந்தொகைப் பாடல்களின் அடி வரையறை என்ன?
    விடை: 4 முதல் 8 அடிகள் வரை.
  • 657. திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
    விடை: மூன்று காண்டங்கள் (மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம்).
  • 658. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
    விடை: 64 படலங்கள்.
  • 659. திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்தப் பாக்களின் எண்ணிக்கை எத்தனை?
    விடை: 3363 விருத்தப்பாக்கள்.
  • 681. முத்தொள்ளாயிரம் புறத்திரட்டு என்னும் நூல் வாயிலாக எத்தனை வெண்பாக்கள் கிடைத்துள்ளன?
    விடை: 108 வெண்பாக்கள்.
  • 682. முத்தொள்ளாயிரத்தின் பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக எத்தனை வெண்பாக்கள் கிடைத்துள்ளன?
    விடை: 22 வெண்பாக்கள்.
  • 683. கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை எத்தனை?
    விடை: 599 தாழிசைகள்.
  • 684. சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப் பரணியை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
    விடை: தென்தமிழ்த் தெய்வப்பரணி.
நாடகம்
  • 628. "நாடகம்" என்னும் சொல்லை எவ்வாறு பிரித்தெழுதலாம்?
    விடை: நாடு + அகம்.
  • 629. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாடகமேத்தும் கணிகை என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
    விடை: மாதவியை.
  • 630. பழங்காலத்தில் 'நாட்டியம்', 'நாடகம்' இரண்டிற்கும் பொதுவாக எந்த சொல்லே வழக்கில் இருந்தது?
    விடை: கூத்து.
  • 631. நாடகம் மற்றும் நடிப்புக்குரிய இலக்கணம் குறித்துப் பரிதிமாற்கலைஞர் எழுதிய நூல் எது?
    விடை: நாடகவியல்.
  • 632. சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல் எது?
    விடை: மதங்க சூளாமணி.
  • 633. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல் எது?
    விடை: சாகுந்தலம்.
  • 634. ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நாடக நூல் எது?
    விடை: மத்த விலாசம்.
  • 635. "டம்பாச்சாரி விலாசம்" என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
    விடை: காசி விசுவநாதர்.
  • 636. பேராசிரியர் சுந்தரனார் "மனோன்மணியம்" என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை எந்த ஆண்டில் வெளியிட்டார்?
    விடை: 1891 ஆம் ஆண்டு.
  • 637. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
    விடை: கதரின் வெற்றி.
  • 638. நாடக உலகில் "தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை" என்று அழைக்கப்பட்டவர் யார்?
    விடை: கந்தசாமி.
தமிழ்த் தொண்டர்கள்
  • 624. வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் எந்த ஊரில் பிறந்தார்?
    விடை: காஸ்திக்கிளி யோன்.
  • 625. வீரமாமுனிவருக்குத் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்தவர் யார்?
    விடை: மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்.
  • 626. தேம்பாவணி எத்தனை காண்டங்களையும் படலங்களையும் உடையது?
    விடை: 3 காண்டங்கள், 36 படலங்கள்.
  • 627. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
    விடை: 3615.
  • 639. கவிஞர் முடியரசன் பிறந்த ஊர் எது?
    விடை: தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.
  • 640. முடியரசன் இயற்றிய நூல்கள் யாவை?
    விடை: பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம்.
  • 641. முடியரசருக்கு 'கவியரசு' என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?
    விடை: குன்றக்குடி அடிகளார்.
  • 642. முடியரசரின் 'பூங்கொடி' என்னும் காவியத்துக்காகத் தமிழக அரசு எந்த ஆண்டு பரிசு வழங்கியது?
    விடை: 1966 ஆம் ஆண்டு.
  • 643. தேவநேயப் பாவாணர் வாங்கிய பட்டங்கள் யாவை?
    விடை: பண்டிதர், புலவர், வித்துவான், முது கலைத்தமிழ் பி.ஓ.எல்.
  • 688. திரு.வி.கலியாணசுந்தரனார் எதைக் கற்பதில் பேரார்வம் கொண்டார்?
    விடை: இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும்.
  • 689. திரு.வி.க. தம் பேச்சிலும் எழுத்திலும் எந்த மொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழிலேயே பேசவும் எழுதவும் வலியுறுத்தினார்?
    விடை: வடமொழிச் சொற்கள்.
  • 690. "திரு.வி.க. வாய்ந்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது" எனக் கூறியவர் யார்?
    விடை: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்.
  • 691. திரு.வி.க. இயற்றிய உரைநடை நூல்கள் சிலவற்றைக் கூறுக.
    விடை: முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, தமிழ்ச் சோலை.
  • 692. திரு.வி.க. இயற்றிய செய்யுள் நூல்கள் சிலவற்றைக் கூறுக.
    விடை: முருகன் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், பொதுமை வேட்டல்.
  • 695. இரட்சணிய யாத்திரிக நூலாசிரியர் எச்.ஏ. கிருட்டினனார் எந்த ஆண்டு பிறந்தார்?
    விடை: 1827 ஏப்ரல் 23.
  • 696. எச்.ஏ. கிருட்டினனாரின் பெற்றோர் யாவர்?
    விடை: சங்கர நாராயணர், தெய்வ நாயகி அம்மாள்.
  • 697. கிருட்டினனார் எத்தனையாவது அகவையில் தம் பெயரை எச்.ஏ. கிருட்டினனார் என மாற்றிக் கொண்டார்?
    விடை: முப்பதாவது அகவையில்.
  • 698. எச்.ஏ. கிருட்டினனார் யாரிடம் வடமொழியைக் கற்றார்?
    விடை: பிலவணச் சோதிடரிடம்.
  • 699. எச்.ஏ. கிருட்டினனார் எந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்?
    விடை: சாயர்புரம் பள்ளியில்.
  • 700. கிறித்துவக் கம்பர் எனப் புகழப்பெற்ற எச்.ஏ. கிருட்டினனார் எப்போது இயற்கை எய்தினார்?
    விடை: 1900 பிப்ரவரி 3.
காமராசர் நிர்வாகம்
  • 667. காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டில் எத்தனை தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன?
    விடை: ஆறாயிரம் பள்ளிகள்.
  • 668. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனை?
    விடை: பதினோராயிரம் பள்ளிகள்.
  • 669. காமராசர் மருத்துவக் கல்லூரி போன்ற தொழிற் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு என்ன கடனளிக்க ஏற்பாடு செய்தார்?
    விடை: வட்டியில்லாக் கடன்.
  • 670. காமராசர் ஆட்சியில் தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு எவ்வளவு விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்?
    விடை: 60 விழுக்காடு.
  • 671. காமராசருக்கு நாடாளுமன்றத்தில் எந்தச் சிலை நிறுவப்பட்டது?
    விடை: ஆளுயர வெண்கலச்சிலை.
  • 672. காமராசர் வாழ்ந்த எந்த இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது?
    விடை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லம்.
பிரிவுகள் மற்றும் சொற்கள்
  • 675. முக்கனி என்னும் சொல் எவற்றைக் குறிக்கும்?
    விடை: மா, பலா, வாழை.
  • 676. நாற்படை என்பது எவற்றைக் குறிக்கும்?
    விடை: தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை.
  • 677. ஐந்திலக்கணம் என்பது எவற்றைக் குறிக்கும்?
    விடை: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
  • 678. அறுசுவை என்பன யாவை?
    விடை: இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு.
பொது அறிவு
  • 679. "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்" என்பதன் இணையான ஆங்கிலப் பழமொழி என்ன?
    விடை: Difficulties give way to diligence.
  • 685. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்ற நாடுகள் மற்றும் ஆட்சிப்புலங்கள் எத்தனை?
    விடை: 235 நாடுகள்.
  • 686. பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் எந்தத் தீவில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்கள்?
    விடை: ரியூனியன் தீவு.
  • 687. எந்தெந்த நாடுகளில் தமிழர் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
    விடை: சிங்கப்பூர், மொரிசியசு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement