TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-58
பெரியபுராணம் மற்றும் சேக்கிழார் பற்றிய தகவல்கள் (701-713)- 701. பெரியபுராணத்தை அருளியவர்: சேக்கிழார்.
- 702. சேக்கிழார் பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர்.
- 703. சேக்கிழாரின் இயற்பெயர்: அருண்மொழித்தேவர்.
- 704. சேக்கிழார் தலைமையமைச்சராகத் திகழ்ந்த மன்னன்: அநபாயச் சோழன்.
- 705. சேக்கிழார் பெற்ற பட்டம்: உத்தம சோழப் பல்லவர்.
- 706. தெய்வச் சேக்கிழார், தொண்டர்சீர் பரவுவார் எனச் சிறப்பிக்கப்படுபவர்: சேக்கிழார்.
- 707. சேக்கிழாரின் காலம்: கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
- 708. பெரியபுராணத்தில் உள்ள தொகையடியார்கள் பற்றிய குறிப்பு: 9.
- 709. பெரியபுராணத்தில் உள்ள தனியடியார்கள் பற்றிய குறிப்பு: 63.
- 710. பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்ட பெயர்: திருத்தொண்டர் புராணம்.
- 711. "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்ற நூல்: பெரியபுராணம்.
- 712. பெரியபுராணத்தைப் "பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என்று புகழ்ந்தவர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.
- 713. "உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம்" என்றவர்: திரு.வி.கலியாணசுந்தரனார்.
அப்பூதியடிகளார் பற்றிய தகவல் (714)- 714. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்: அப்பூதியடிகளார்.
திரைப்படம் தொடர்பான தகவல்கள் (715-721)- 715. ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் (1830): எட்வர்டு மைபிரிட்சு.
- 716. படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்: ஈஸ்ட்மன்.
- 717. இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தவர் (1894): பிரான்சிஸ் சென்கின்சு.
- 718. திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் எந்தப் பொருளால் ஆனது: செல்லுலாய்டு.
- 719. நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் அழைக்கும் விதம்: இயக்குநர்.
- 720. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர்: எடிசன்.
- 721. கருத்துப்படத்தை (Cartoon animation) உருவாக்கியவர்: வால்ட் டிஸ்னி.
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பற்றிய தகவல்கள் (722-732)- 722. எம்.ஜி. இராமச்சந்திரன் பிறந்த ஊர்: இலங்கையிலுள்ள கண்டி.
- 723. எம்.ஜி.ஆர் பிறந்த ஆண்டு மற்றும் நாள்: 1917 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17 ஆம் நாள்.
- 724. எம்.ஜி.ஆரின் பெற்றோர்: கோபாலமேனன், சத்யபாமா.
- 725. "புரட்சி நடிகர்", "மக்கள் திலகம்" என்று போற்றப்பட்டவர்: எம்.ஜி.இராமச்சந்திரன்.
- 726. அறிஞர் அண்ணா அவர்கள் எம்.ஜி.இராமச்சந்திரனைப் போற்றிய விதம்: இதயக்கனி.
- 727. எம்.ஜி.ஆர் சென்னை மாநிலச் சட்ட மன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு: 1963 ஆம் ஆண்டு.
- 728. 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற தொகுதி: பரங்கிமலைத் தொகுதி.
- 729. எம்.ஜி.ஆர் புதிய கட்சியைத் தொடங்கிய ஆண்டு: 1972 ஆம் ஆண்டு.
- 730. எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற ஆண்டு: 1977 ஆம் ஆண்டு.
- 731. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்: சென்னைப் பல்கலைக்கழகம்.
- 732. இந்திய அரசு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் 'பாரத ரத்னா' விருதை வழங்கிய ஆண்டு: 1988 ஆம் ஆண்டு.
பண்டைய தமிழகம், தொல்லியல் மற்றும் தமிழ் பற்றிய தகவல்கள் (733-740)- 733. "மனித நாகரிகத் தொட்டில்" என்று அழைக்கப்படுவது: இலெமுரியா (குமரிக்கண்டம்).
- 734. கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள்கள்: அரிசி, மயில்தோகை, சந்தனம்.
- 735. கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள்கள்: யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும்.
- 736. "கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரி இடம்பெற்ற நூல்: மணிவாசகம் (திருவாசகம்).
- 737. "பண்ணொடு தமிழொப்பாய்" என்ற வரி இடம்பெற்ற நூல்: தேவாரம்.
- 738. தொல்லியலை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது: ஆர்க்கியாலஜி.
- 739. இந்தியத் தொல்லியல் துறையினர் 1963-ஆம் ஆண்டு பூம்புகார் அருகில் கடல் அகழாய்வு மேற்கொண்ட இடம்: கீழார்வெளி.
- 740. பண்டைய காலத்தில் இறந்தோரை அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் வைத்துப் புதைக்கும் தாழிகளின் பெயர்: முதுமக்கள் தாழிகள்.
திருநாவுக்கரசர் பற்றிய தகவல்கள் (741-750)- 741. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்: கடலூர் மாவட்டத்திலுள்ள திருவாமூர்.
- 742. திருநாவுக்கரசரின் பெற்றோர்: புகழனார், மாதினியார்.
- 743. திருநாவுக்கரசரின் தமக்கையார்: திலகவதியார்.
- 744. திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர்: மருணீக்கியார்.
- 745. திருநாவுக்கரசரின் வேறு பெயர்கள்: தருமசேனர், அப்பர், வாசீசர், தாண்டக வேந்தர்.
- 746. சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை: நால்வர்.
- 747. திருநாவுக்கரசரின் பாடல்கள் போற்றப்படும் விதம்: தேவாரம்.
- 748. திருநாவுக்கரசரின் காலம்: கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
- 749. சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள திருமுறைகள்: 4, 5, 6-ஆம் திருமுறைகள்.
- 750. "நாமார்க்கும் குடியல்லோம்" என்னும் திருநாவுக்கரசரின் பாடல் யாருக்கு "அச்சமில்லை அச்சமில்லை" எனப் பாடத் தூண்டியது: மகாகவி பாரதியார்.
சொற்களின் மூலம் மற்றும் இலக்கிய வரிகள் (751-755)- 751. உலகம் என்னும் தமிழ்ச்சொல் பிறந்த சொல்: உலவு.
- 752. "ஞாலம்" என்னும் சொல் தோன்றிய சொல்: ஞால் (தொங்குதல்).
- 753. "தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்ற வரி இடம்பெற்ற நூல்: பதிற்றுப்பத்து.
- 754. "அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்" என்ற வரி இடம்பெற்ற நூல்: பெருங்கதை.
- 755. "ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் - உளன்" என்று பாடியவர்: கம்பர்.
அகப்பொருள் இலக்கணம் - முதற்பொருள் மற்றும் திணைகள் (756-772)- 756. அகப்பொருள் இலக்கணத்தில் அன்பின் ஐந்திணைகள்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
- 757. அகவொழுக்கம் நிகழ்தற்குக் காரணமாக விளங்கும் முதற்பொருள்: நிலமும் பொழுதும்.
| திணை | நிலம் |
|---|
| 758. குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த இடமும் |
| 759. முல்லை | காடும் காடு சார்ந்த இடமும் |
| 760. மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் |
| 761. நெய்தல் | கடலும் கடல் சார்ந்த இடமும் |
| 762. பாலை | மணலும் மணல் சார்ந்த இடமும் |
- 763. பொழுது எத்தனை வகைப்படும்: இரண்டு வகைப்படும் (பெரும்பொழுது, சிறுபொழுது).
| பெரும்பொழுது | மாதங்கள் |
|---|
| 764. கார்காலம் | ஆவணி, புரட்டாசி |
| 765. குளிர்காலம் | ஐப்பசி, கார்த்திகை |
| 766. முன்பனிக்காலம் | மார்கழி, தை |
| 767. பின்பனிக்காலம் | மாசி, பங்குனி |
| 768. இளவேனிற்காலம் | சித்திரை, வைகாசி |
| 769. முதுவேனிற்காலம் | ஆனி, ஆடி |
- 770. சிறுபொழுதுகள்: காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.
- 771. எற்பாடு (எல் + பாடு) என்பதன் பொருள்: எல் - ஞாயிறு, பாடு - மறையும் நேரம்.
- 772. ஆறு பெரும்பொழுதுகளும் வரும் நிலங்கள்: மருதம், நெய்தல்.
சீறாப்புராணம் மற்றும் உமறுப்புலவர் பற்றிய தகவல்கள் (773-782)- 773. சீறாப்புராணத்தை இயற்றியவர்: உமறுப்புலவர்.
- 774. உமறுப்புலவரின் ஆசிரியர்: எட்டயபுரம் கடிகை முத்துப் புலவர்.
- 775. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்: சீதக்காதி (அப்துல் காதிர் மரக்காயர்).
- 776. சீதக்காதியின் மறைவுக்குப் பின் உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல்: அபுல்காசிம்.
- 777. உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல்: முதுமொழிமாலை.
- 778. உமறுப்புலவரின் காலம்: கி.பி. 17 ஆம் நூற்றாண்டு (பதினேழாம் நூற்றாண்டு).
- 779. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறும் நூல்: சீறாப்புராணம்.
- 780. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள்: மூன்று (விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்).
- 781. சீறாப்புராணம் எத்தனை விருத்தப் பாக்களால் ஆனது: 5027 விருத்தப்பாக்கள்.
- 782. சீறா - என்பதன் பொருள்: வாழ்க்கை.
காந்தியடிகள் பற்றிய தகவல்கள் (783-785)- 783. காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது அவரைப் பெரிதும் கவர்ந்து, உண்மையே பேசவேண்டும் என்று உறுதிபூணச் செய்த நாடகம்: அரிச்சந்திரன் நாடகம்.
- 784. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட எந்தச் சட்டங்களைக் காந்தியடிகள் எதிர்த்துப் போராடினார்: கறுப்புச் சட்டங்கள்.
- 785. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு: 1948 ஆம் ஆண்டு சனவரி 30.
புறப்பொருள் இலக்கணம் - புறத்திணைகள் (786-799)- 786. புறப்பொருள் எவற்றைப் பற்றிக் கூறுகிறது: வாழ்க்கைக்கும் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது.
- 787. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்: 12 வகைப்படும்.
| திணை | செயல் / பொருள் |
|---|
| 788. வெட்சித் திணை | பகை நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்து வருவது. |
| 789. கரந்தைத் திணை | கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்டு வருவது. |
| 790. வஞ்சித் திணை | மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டின் மீது படையெடுப்பது. |
| 791. காஞ்சித் திணை | தன் நாட்டைப் பிடிக்க வந்த பகைவனோடு எதிர்த்துப் போரிடுவது. |
| 792. நொச்சித் திணை | பகைவரால் முற்றுகையிடப்பட்ட தம் கோட்டையைக் காக்க உள்ளிருந்தே போரிடுவது. |
| 793. உழிஞைத் திணை | பகைவனின் கோட்டையைச் சுற்றி வளைப்பது. |
| 794. தும்பைத் திணை | பகை மன்னர்கள் இருவரும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு போரிடுவது. |
| 795. வாகைத் திணை | போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ (வெற்றியைப் பற்றிக் கூறுவது). |
| 796. பாடாண் திணை | ஒரு மனிதனின் வீரம், கொடை, புகழ் பற்றிக் கூறுவது. |
| 797. பொதுவியல் திணை | வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளுக்குப் பொதுவானவற்றைக் கூறுவது. |
| 798. கைக்கிளை | ஒருதலைக் காமத்தைக் குறிக்கும் திணை. |
| 799. பெருந்திணை | பொருந்தாக் காமத்தைக் குறிக்கும் திணை. |
கலித்தொகை பற்றிய தகவல் (800)- 800. கலித்தொகையைத் தொகுத்தவர்: நல்லந்துவனார்.
0 Comments