6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-63


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-63
கணினி மற்றும் இணையம் பற்றிய கேள்விகள்-விடைகள்:
  1. தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் உருவாக்கப் போட்டியிடும் கணினி எது?
    விடை: மீத்திறன் கணினி (Supercomputer)
  2. கணினியின் வகைகள் யாவை?
    விடை: பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி
  3. ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்திய ஆண்டு எது?
    விடை: 1960 ஆம் ஆண்டு
  4. ஒரு கட்டத்திற்குள் உள்ள கணினிகளை கம்பிச் சுருளுடன் இணைக்கப் பயன்படுத்தப்படும் சிறுபலகை எது?
    விடை: ஈதர்நெட் அட்டை (Ethernet Card)
  5. ஈதர்நெட் அட்டை என்னும் இணைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
    விடை: குறும்பரப்பு வலைப்பின்னல் (Local Area Network - LAN)
  6. ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைப்பதற்குப் பயன்படும் வலைப்பின்னல் எது?
    விடை: அகன்ற பரப்பு வலைப்பின்னல் (Wide Area Network - WAN)
  7. உலகளாவிய வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் யார், எந்த ஆண்டு?
    விடை: சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த இயற்பியல் வல்லுநர் பிம்பெர்னர் லீ, 1989 ஆம் ஆண்டு.
  8. உலகளாவிய வலைப்பின்னலை வேறு எவ்வாறு அழைக்கிறார்கள்?
    விடை: வையக விரிவு வலை (World Wide Web - WWW)
  9. இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்கள் யாவை?
    விடை: கணினி, தொலைபேசி, இணையச்சேவை, மாற்றி (Modem), தொடர்பு மென்பொருள்
  10. தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப்பயன்படுத்தும் முறை என்ன சேவை?
    விடை: தொலைபேசி இணைப்புச் சேவை (Dial-up Connection)
  11. கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை: கணினி வழிக்கல்வி (Computer-Aided Education)
  12. தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத்தரும் இணையத்தளம் எது?
    விடை: தமிழம்
  13. "கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்" எனக் கூறியவர் யார்?
    விடை: பில்கேட்ஸ்
தமிழ் இலக்கணம்: வழக்கு மற்றும் இளமைப் பெயர்கள்
  1. நம் முன்னோர் எந்தச் சொல்லால் வழங்கி வந்தார்களோ அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு என்ன பெயர்?
    விடை: வழக்கு
  2. வழக்கு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    விடை: இரண்டு (இயல்பு வழக்கு, தகுதி வழக்கு)
  3. எந்தச் சொல் தனது இயல்பு பொருள் மாறாமல் ஒரே பொருளைச் சுட்டுகிறதோ அதற்கு என்ன பெயர்?
    விடை: இயல்பு வழக்கு
  4. இயல்பு வழக்கின் வகைகள் யாவை?
    விடை: இலக்கணமுடையது, இலக்கணப் போலி, மரூஉ
  5. தஞ்சாவூர் 'தஞ்சை' எனவும், கோயம்புத்தூர் 'கோவை' எனவும் சிதைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை: மரூஉ
  6. தகுதி வழக்கின் வகைகள் யாவை?
    விடை: இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி
  7. ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயர் எவ்வாறு கூறப்படும்?
    விடை: குழுஉக்குறி
  8. நாயின் இளமைப் பெயர் என்ன?
    விடை: நாய்க்குட்டி
  9. குதிரையின் இளமைப் பெயர் என்ன?
    விடை: குதிரைக்குட்டி
  10. புலியின் இளமைப் பெயர் என்ன?
    விடை: புலிப்பறழ்
  11. யானையின் இளமைப் பெயர் என்ன?
    விடை: யானைக்கன்று
  12. ஆந்தை எவ்வாறு ஒலிக்கும்?
    விடை: அலறும்
  13. குதிரை எவ்வாறு ஒலிக்கும்?
    விடை: கனைக்கும்
  14. சிங்கம் எவ்வாறு ஒலிக்கும்?
    விடை: முழங்கும்
  15. மயில் எவ்வாறு ஒலிக்கும்?
    விடை: அகவும்
  16. யானை எவ்வாறு ஒலிக்கும்?
    விடை: பிளிறும்
  17. தென்னையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: தென்னங்குரும்பை
  18. முருங்கையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: முருங்கைப்பிஞ்சு
  19. மாமரத்தின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: மாவடு
  20. ஆடுகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: ஆட்டு மந்தை
  21. பசுக்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: பசுநிரை
தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு
  1. "சம்புவின் கனி" எனக் குறிக்கப்படுவது எது?
    விடை: நாவற்பழம்
  2. விவேகசிந்தாமணி என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
    விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  3. "பாரதத்தாய்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
    விடை: அசலாம்பிகை அம்மையார்
  4. அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
    விடை: திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை
  5. அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்கள் யாவை?
    விடை: ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம், காந்தி புராணம், இராமலிங்க சுவாமிகள் சரிதம்
  6. அசலாம்பிகை அம்மையாரை "இக்கால ஔவையார்" என்று பாராட்டியவர் யார்?
    விடை: திரு.வி.க
  7. காந்திபுராணம் எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
    விடை: ஈராயிரத்து முப்பத்து நான்கு (2034)
வேலுநாச்சியார் வரலாறு
  1. வேலுநாச்சியாரின் பெற்றோர் பெயர் என்ன?
    விடை: செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள்
  2. வேலுநாச்சியாரின் தந்தை எந்த நாட்டை ஆண்ட மன்னர்?
    விடை: இராமநாதபுரம்
  3. வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
    விடை: கி.பி. 1730 ஆம் ஆண்டு
  4. வேலுநாச்சியாரின் கணவர் யார்?
    விடை: சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்
  5. ஆங்கிலேயர் எந்த ஆண்டில் சிவகங்கைச் சீமையின் மீது படையெடுத்தார்?
    விடை: 1772 ஆம் ஆண்டு
  6. முத்துவடுகநாதர் யாருடன் போர் செய்து வீரமரணமடைந்தார்?
    விடை: ஆங்கிலேயர்
  7. வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்ப்பதைக் குறித்து யாருடன் கலந்து பேசினார்?
    விடை: மைசூர் மன்னர் ஐதர் அலி
  8. வேலுநாச்சியாருக்கு உதவ விரும்பிய ஐதர் அலி எத்தனை படைவீரர்களை அவருடன் அனுப்பினார்?
    விடை: ஐயாயிரம் (5000)
  9. வேலுநாச்சியார் தன் கணவரைக் கொன்ற ஆங்கிலேயரை வென்று எந்த ஆண்டில் சிவகங்கையை மீட்டார்?
    விடை: 1780 ஆம் ஆண்டு
விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்
  1. கடலூர் அஞ்சலையம்மாள் பிறந்த ஆண்டு எது?
    விடை: 1890 ஆம் ஆண்டு
  2. அஞ்சலையம்மாள் கலந்து கொண்டு சிறையில் வாடிய போராட்டங்கள் யாவை?
    விடை: நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  3. அஞ்சலையம்மாளின் மகள் பெயர் என்ன?
    விடை: அம்மாக்கண்ணு
  4. காந்தியடிகள் சிறையில் அஞ்சலையம்மாளின் மகளைப் பார்த்து தன்னுடன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று என்ன பெயரிட்டுப் படிக்க வைத்தார்?
    விடை: லீலாவதி
  5. அஞ்சலையம்மாள் பர்தா வேடமணிந்து எந்த வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றார்?
    விடை: குதிரைவண்டி
  6. அம்புஜத்தம்மாள் வீட்டை விட்டு வெளியேறி யாருடைய பாடலைப் பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்?
    விடை: மகாகவி பாரதியார்
  7. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?
    விடை: அம்புஜத்தம்மாள்
  8. அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் பெயர் என்ன?
    விடை: சீனிவாச காந்தி நிலையம்
  9. 1964 ஆம் ஆண்டு அம்புஜத்தம்மாள் பெற்ற விருது யாது?
    விடை: தாமரைத்திரு (பத்மஸ்ரீ)
  10. அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக எழுதிய அரிய நூல் எது?
    விடை: நான் கண்ட பாரதம்
சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் இலக்கணம்
  1. ஓர் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேர்களுக்கு ஓர் ஆண்டிற்குத் தேவையான உயிர்வளியைக் கொடுக்கின்றன?
    விடை: பதினெட்டுப் பேர்களுக்கு (18)
  2. சொற்கள் தொடராகும் போது இரு சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: தொகைநிலைத்தொடர்கள்
  3. தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?
    விடை: ஆறு வகைப்படும்
  4. "பவளவாய் பேசினாள்" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: அன்மொழித்தொகை
  5. "ஆடுகொடி, பாய்புலி, அலைகடல்" ஆகிய தொடர்கள் எதற்கு எடுத்துக்காட்டுகள்?
    விடை: வினைத்தொகை
இலக்கியம்: காவடிச்சிந்து, உலா மற்றும் சோழ மன்னர்கள்
  1. "காவடிச்சிந்து" பாடலை இயற்றியவர் யார்?
    விடை: அண்ணாமலையார்
  2. அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
    விடை: திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம்
  3. அண்ணாமலையாரின் பெற்றோர் யார்?
    விடை: சென்னவர், ஓவுஅம்மாள்
  4. காவடிச்சிந்து எந்த ஊரில் உள்ள முருகனின் சிறப்பைப் போற்றிப் பாடப்பட்டது?
    விடை: கழுகுமலை
  5. அண்ணாமலையார் இயற்றிய நூல்கள் யாவை?
    விடை: காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
  6. "விக்கிரம சோழன் உலா" என்ற பாடலை இயற்றியவர் யார்?
    விடை: ஒட்டக்கூத்தர்
  7. ஒட்டக்கூத்தரின் சிறப்புப்பெயர் யாது?
    விடை: கவிச்சக்கரவர்த்தி
  8. உலா என்பது எத்தனை வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று?
    விடை: தொண்ணூற்றாறு (96)
  9. "உலா" என்பதற்குப் பொருள் யாது?
    விடை: ஊர்வலம் வருதல்
  10. விக்கிரம சோழன் முதற்குலோத்துங்க சோழனுக்கு எத்தனையாவது மகன் ஆவார்?
    விடை: நான்காவது மகன்
  11. விக்கிரம சோழனின் தாய் பெயர் என்ன?
    விடை: மதுராந்தகி
  12. மேரு மலையின் உச்சியில் புலிக் கொடி நாட்டி காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவர் யார்?
    விடை: சோழன் கரிகாலன்
  13. பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்த சோழன் யார்?
    விடை: செங்கணான்
  14. பதினெட்டுச் சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்ற சோழன் யார்?
    விடை: முதல் இராசராசன்
  15. வடக்கே படையெடுத்துக் கங்கையும் கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டு, சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்த சோழன் யார்?
    விடை: இராசேந்திரன்
  16. கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்ற சோழன் யார்?
    விடை: இராசேந்திரன்
  17. சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்ற சோழன் யார்?
    விடை: இராசாதிராசன்
செய்தியியல் மற்றும் தமிழ் இலக்கணம்
  1. உலகில் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வும் என்னவாக மாறுகிறது?
    விடை: செய்தி
  2. ஆறு வினாக்களுக்கும் உரிய விடைகளும் செய்தியின் எந்தப் பக்கத்தில் இடம் பெற வேண்டும்?
    விடை: முகப்புப் பக்கம்
  3. செய்தியைப் பெறுதல் எதைப் போன்றது?
    விடை: துப்பறிதல்
  4. ஆறு வினாக்களுக்கும் உரிய விடையைக் காண்பது எதைப் போன்ற அரிய பணி?
    விடை: கடலில் மூழ்கி முத்தெடுப்பது
  5. செய்தியாளர்கள் அறிவியல் ஆய்வு முறைகளையும் அவற்றைப் பயன்படுத்துவது என்பதையும் அறிய உதவுவது எது?
    விடை: புள்ளியியல்
  6. பொதுமக்களின் கருத்துகளை எதன் வாயிலாக நடத்துவார்கள்?
    விடை: கூறெடுப்பு ஆய்வு (Sampling Survey)
  7. ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து இரண்டிற்கும் இடையில் உருபுகள் மறையாமல் நின்று பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: தொகாநிலைத் தொடர்
  8. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
    விடை: ஒன்பது வகைப்படும்
  9. "காற்று வீசியது" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: எழுவாய்த் தொடர்
  10. "வாழ்க தமிழ்" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: முற்றுத் தொடர்
  11. "கேட்ட பாடல்" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: பெயரெச்சத் தொடர்
  12. "பாடி மகிழ்ந்தனர்" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: வினையெச்சத் தொடர்
  13. "நன்று நன்று நன்று" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: அடுக்குத் தொடர்
  14. "மற்றொன்று" என்பதில் உள்ள மற்று என்பது எவ்வகைச் சொல்?
    விடை: இடைச்சொல்
  15. "சாலப்பேசினான்" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: உரிச்சொல் தொடர்
இலக்கியம்: உமர்கய்யாம் பாடல்கள்
  1. "உமர்கய்யாம் பாடல்கள்" என்ற பாடலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
    விடை: கவிமணி தேசிக விநாயகனார்
  2. கவிமணி தேசிக விநாயகனார் எங்குப் பிறந்தார்?
    விடை: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர்
  3. உமர்கய்யாம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்?
    விடை: பதினோராம் நூற்றாண்டு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement