TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-76
வல்லினம் மிகும் இடங்கள்| எண் | வினா | விடை | எடுத்துக்காட்டு |
|---|
| 2501 | 'அ', 'இ' என்னும் சுட்டெழுத்துகளின் பின் வல்லினம் மிகுமா, மிகாதா? | மிகும் | - |
| 2502 | 'எ' என்னும் வினா எழுத்தின் பின் வல்லினம் மிகுமா? | மிகும் | - |
| 2503 | அந்த, இந்த, எந்த ஆகிய சுட்டு வினாச் சொற்களை அடுத்து வல்லினம் மிகுமா? | மிகும் | - |
| 2504 | 'ஓரெழுத்து ஒரு மொழி'யின் பின் வல்லினம் மிகுமா? | மிகும் | பூக்கூடை |
| 2505 | உவமைத் தொகையில் வல்லினம் மிகுமா? | மிகும் | மலர்க்கண் |
வல்லினம் மிகாத இடங்கள்| எண் | வினா | விடை | எடுத்துக்காட்டு |
|---|
| 2506 | அது, இது, எது, அவை, இவை போன்ற சொற்களின் பின் வல்லினம் மிகுமா? | மிகாது | - |
| 2507 | வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகுமா? | மிகாது | வாழ்க தமிழ் |
| 2508 | எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகுமா? | மிகாது | மலர் பூத்தது |
| 2509 | இரட்டைக்கிளவி மற்றும் அடுக்குத் தொடர்களில் வல்லினம் மிகுமா? | மிகாது | - |
| 2510 | எட்டு, பத்து ஆகிய எண்களைத் தவிர பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகுமா? | மிகாது | - |
ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்| எண் | ஆங்கிலப் பழமொழி | தமிழ்ப் பழமொழி |
|---|
| 2511 | "Practice makes perfect" | சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் |
| 2512 | "Misfortune never comes single" | பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் |
| 2513 | "Look no gift horse in the mouth" | தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கலாமா? |
| 2514 | "One doth the act, another hath the blow" | பழி ஓரிடம் பாவம் ஓரிடம் |
| 2515 | "Every fox must at last pay his skin to the flayer" | பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் |
| 2516 | "The day has eyes, the night has ears" | பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே |
| 2517 | "Bend the tree while it is young" | ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? |
| 2518 | "A friend in need is a friend indeed" | ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் (உயிர்காப்பான் தோழன்) |
| 2519 | "Blood is thicker than water" | தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் |
| 2520 | "Union is strength" | ஒற்றுமையே வலிமை |
| 2521 | "Might is right" | வல்லான் வகுத்ததே வாய்க்கால் |
| 2522 | "Many things fall between the cup and the lip" | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை |
பரிதிமாற்கலைஞர் குறித்த செய்திகள்| எண் | வினா | விடை |
|---|
| 2523 | பரிதிமாற்கலைஞரின் தந்தையார் பெயர் என்ன? | கோவிந்தசிவனார் |
| 2524 | பரிதிமாற்கலைஞரின் தாயார் பெயர் என்ன? | இலட்சுமி அம்மாள் |
| 2525 | பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு எது? | 1870 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 6 ஆம் நாள் |
| 2526 | பரிதிமாற்கலைஞர் எந்தக் கல்லூரியில் பி.ஏ. (B.A) பயின்றார்? | சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் |
| 2527 | பரிதிமாற்கலைஞர் தனது எத்தனையாவது அகவையில் இயற்கை எய்தினார்? | 33 ஆம் அகவையில் (1903 இல்) |
ஜி.யு.போப் குறித்த செய்திகள்| எண் | வினா | விடை |
|---|
| 2528 | ஜி.யு.போப்பின் பெற்றோர் யாவர்? | ஜான் போப், கெதரின் யுளாப் |
| 2529 | ஜி.யு.போப் தமிழ், ஆங்கில இலக்கியங்களோடு வேறு எம்மொழிகளையும் கற்பித்தார்? | கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் |
| 2530 | ஜி.யு.போப் சமயக்கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்பித்தார்? | கணிதம், அறிவாய்வு (தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்) |
| 2531 | ஜி.யு.போப் எந்த ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்? | இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு |
| 2532 | ஜி.யு.போப் எந்த நூலின் திணை விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்? | புறப்பொருள் வெண்பாமாலை |
| 2533 | நீதிநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து ஜி.யு.போப் தொகுத்த நூல் எது? | தமிழ்ச்செய்யுட் கலம்பகம் |
| 2534 | ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்? | 1900-ஆம் ஆண்டு |
| 2535 | ஜி.யு.போப் மறைந்த ஆண்டு மற்றும் நாள் என்ன? | 1908 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 11 ஆம் நாள் |
எச்.ஏ. கிருட்டினனார் குறித்த செய்திகள்| எண் | வினா | விடை |
|---|
| 2536 | 'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படும் எச்.ஏ கிருட்டினனாரின் பெற்றோர் யாவர்? | சங்கர நாராயணர், தெய்வ நாயகி அம்மாள் |
| 2537 | எச்.ஏ கிருட்டினனார் யாரிடம் இலக்கணங்களைக் கற்றார்? | மாணிக்க வாசகத்தேவரிடம் |
| 2538 | எச்.ஏ கிருட்டினனார் எந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்? | சாயர்புரம் பள்ளியில் |
| 2539 | 'இரட்சணிய சமய நிர்ணயம்', 'இரட்சணிய மனோகரம்' ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | எச்.ஏ. கிருட்டினனார் |
| 2540 | ஜான் பன்யன் இயற்றிய எந்த நூலைத் தழுவி இரட்சணிய யாத்திரிகம் இயற்றப்பட்டது? | பில்கிரிம்ஸ் புரோகிரஸ் |
உமறுப்புலவர் குறித்த செய்திகள்| எண் | வினா | விடை |
|---|
| 2541 | உமறுப்புலவர் யாருடைய வேண்டுகோளின்படி சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்? | வள்ளல் சீதக்காதி |
| 2542 | சீதக்காதி மறைவுக்குப் பின் உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் யார்? | அபுல்காசிம் |
| 2543 | உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல் எது? | முதுமொழி மாலை |
| 2544 | 'சீறா' மற்றும் 'புராணம்' ஆகிய சொற்களின் பொருள் யாது? | சீறா - வாழ்க்கை, புராணம் - வரலாறு |
| 2545 | சீறாப்புராணம் எத்தனை விருத்தப் பாக்களால் ஆனது? | 5027 |
பிற செய்திகள்| எண் | வினா | விடை |
|---|
| 2546 | திருவருட்பிரகாச வள்ளலார் தமது பெற்றோர்க்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார்? | ஐந்தாவது மகனாக |
சொற்களின் வகைகள்| எண் | வகை | வினா | விடை | எடுத்துக்காட்டு |
|---|
| 2547 | இயற்சொல் | எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் எது? | இயற்சொல் | - |
| 2548 | திரிசொல் | கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருக்கும் சொல் எது? | திரிசொல் | - |
| 2549 | பெயர்த் திரிசொல் | 'களிறு', 'புரவி' என்பன எவ்வகைச் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகள்? | பெயர்த் திரிசொல் | - |
| 2550 | வினைத் திரிசொல் | 'வினவினான்', 'நோக்கினான்' என்பன எவ்வகைச் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகள்? | வினைத் திரிசொல் | - |
திசைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்| எண் | திசைச்சொல் | தமிழ்ச் சொல் |
|---|
| 2551 | பண்டிகை | திருவிழா |
| 2552 | வியாபாரம் | வணிகம் |
| 2553 | ஜமக்காளம் | விரிப்பு |
| 2554 | வேடிக்கை | காட்சி |
வடசொல்| எண் | வினா | விடை | எடுத்துக்காட்டு |
|---|
| 2555 | வடமொழிச் சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழில் வந்து வழங்குவது எவ்வாறு அழைக்கப்படும்? | வடசொல் | - |
| 2556 | 'கமலம்', 'விஷம்' என்பன எவ்வகைச் சொற்கள்? | வடசொற்கள் | - |
கூற்றுத் தொடர்கள்| எண் | வினா | விடை |
|---|
| 2557 | வேல்விழி நன்றாகப் படி என்று ஆசிரியர் கூறினார் - இது எவ்வகைத் தொடர்? | நேர்கூற்றுத் தொடர் |
| 2558 | 'நான்', 'நாங்கள்' என்னும் தன்மைப்புெயர்கள் அயற்கூற்றில் எவ்வாறு மாறும்? | தான், தாம் (தாங்கள்) என மாறும் |
| 2559 | 'இது', 'இவை' என்னும் சுட்டுப்பெயர்கள் அயற்கூற்றில் எவ்வாறு மாறும்? | அது, அவை என மாறும் |
| 2560 | நேர்கூற்றில் வரும் 'இன்று', 'நேற்று', 'நாளை' என்பன அயற்கூற்றில் எவ்வாறு மாறும்? | அன்று, முன்னாள், மறுநாள் என மாறும் |
நிறுத்தக்குறியீடுகள்| எண் | வினா | விடை | குறியீடு |
|---|
| 2561 | ஓர் எழுத்து அல்லது சொற்றொடரைத் தனியே குறிக்கும் இடத்திலும், நூலின் பெயரைக் குறிக்கும் இடத்திலும் எக்குறியிட வேண்டும்? | ஒற்றை மேற்கோள் குறி | (' ') |
| 2562 | ஒருவர் கூறியதை நேர்க்கூற்றாகக் கூறும் போது எக்குறியிட வேண்டும்? | இரட்டை மேற்கோள் குறி | (" ") |
புத்தர் குறித்த செய்தி| எண் | வினா | விடை |
|---|
| 2563 | உயிர்களைப் பலியிட வேண்டாம் என்று மன்னர் பிம்பிசாரர்க்கு அறிவுரை கூறியவர் யார்? | புத்தர் |
நன்னூல் நூற்பாக்கள்| எண் | நூற்பா | நூல் |
|---|
| 2564 | "ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே" என்னும் நூற்பா இடம்பெற்றுள்ள நூல் எது? | நன்னூல் |
| 2582 | "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" - இவ்வரி எந்நூலில் வந்துள்ளது? | நன்னூல் |
| 2583 | "தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்" - இந்த வரி எந்நூலில் வந்துள்ளது? | நன்னூல் |
| 2574 | "ஆவி இடைமை இடமிடறு ஆகும்" - இது எந்நூலின் நூற்பா? | நன்னூல் |
மாத்திரை (ஒலிக்கும் கால அளவு)| எண் | எழுத்து | மாத்திரை அளவு |
|---|
| 2565 | குறில் எழுத்து | ஒரு மாத்திரை |
| 2566 | நெடில் எழுத்து | இரண்டு மாத்திரை |
| 2567 | மெய்யெழுத்தும் ஆய்த எழுத்தும் | அரை மாத்திரை |
| 2568 | உயிரளபெடை | மூன்று மாத்திரை |
| 2569 | ஒற்றளபெடை | ஒரு மாத்திரை |
அளபெடைகள்| எண் | வகை | எடுத்துக்காட்டுகள் |
|---|
| 2570 | செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை) | 'உழாஅர்', 'படாஅர்' |
| 2571 | இன்னிசை அளபெடை | 'கெடுப்பதூஉம்', 'எடுப்பதூஉம்' |
| 2572 | சொல்லிசை அளபெடை | 'நசைஇ', 'நிறீஇ' |
எழுத்துகளின் பிறப்பு| எண் | வினா | விடை |
|---|
| 2573 | எழுத்துகளின் பிறப்பு எத்தனை வகைப்படும்? | இருவகைப்படும் (இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு) |
| 2575 | இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் மெய்யெழுத்துகள் எவை? | ப், ம் |
அயல்மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்| எண் | ஆங்கிலச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|
| 2576 | 'சுவிட்ச்' (Switch) | மின்பொத்தான் |
| 2577 | 'வாஷிங்மெஷின்' (Washing machine) | சலவை இயந்திரம் |
| 2578 | 'கூல்ட்ரிங்ஸ்' (Cool drinks) | குளிர்பானம் |
| 2579 | 'கிரைண்டர்' (Grinder) | மின் அரைவை |
| 2580 | 'பிரிஜ்' (Fridge) | குளிர்சாதனப் பெட்டி |
புணர்ச்சி விதிகள்| எண் | வினா | விடை |
|---|
| 2581 | புணர்ச்சியில் நிலைமொழி ஈற்று உயிரும் வருமொழி முதல் உயிரும் இணையும் போது 'வ்' அல்லது 'ய்' தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும்? | உடம்படுமெய் |
கவிமணி தேசிக விநாயகனார் குறித்த செய்திகள்| எண் | வினா | விடை |
|---|
| 2584 | கவிமணி தேசிக விநாயகனார் இயற்றிய 'ஆசிய ஜோதி' எந்நூலின் தழுவல்? | எட்வின் அர்னால்டின் 'லைட் ஆஃப் ஏசியா' (Light of Asia) |
| 2585 | 'மலரும் மாலையும்', 'மருமக்கள்வழி மான்மியம்' ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்? | கவிமணி தேசிக விநாயகனார் |
| 2586 | தேசிக விநாயகனாருக்கு 'கவிமணி' என்னும் பட்டத்தை வழங்கிய அமைப்பு எது? | சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் |
| 2587 | நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் எவ்வகை நூல்? | நகைச்சுவை நூல் |
| 2588 | உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? | கவிமணி தேசிக விநாயகனார் |
| 2594 | "அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்" என்று பாடியவர் யார்? | கவிமணி தேசிக விநாயகனார் |
உமர்கய்யாம் குறித்த செய்திகள்| எண் | வினா | விடை |
|---|
| 2589 | உமர்கய்யாம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்? | பதினோராம் நூற்றாண்டு |
| 2590 | உமர்கய்யாமின் முழுப்பெயர் என்ன? | கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் |
| 2591 | உமர்கய்யாம் எத்துறைகளில் புலமை மிக்கவர்? | கணிதம், வானவியல் |
| 2592 | உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழிபெயர்ப்பான 'ரூபாயத்' என்பதன் பொருள் என்ன? | நான்கடிச் செய்யுள் (வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குபவை) |
| 2593 | உமர்கய்யாம் பாடல்கள் தமிழில் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? | 115 பாடல்கள் |
திருவிளையாடற் புராணம் குறித்த செய்திகள் (பரஞ்சோதி முனிவர்)| எண் | வினா | விடை |
|---|
| 2595 | திருவிளையாடற் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது? | திருமறைக்காடு (வேதாரண்யம்) |
| 2596 | பரஞ்சோதி முனிவர் இயற்றிய பிற நூல்கள் யாவை? | திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி |
| 2597 | திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது? | பதினெட்டுப் படலம் (18) |
| 2598 | திருவிளையாடற் புராணத்தின் கூடற்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது? | முப்பது படலம் (30) |
| 2599 | திருவிளையாடற் புராணத்தின் திருவாலவாய்க் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது? | பதினாறு படலம் (16) |
| 2600 | திருவிளையாடற் புராணம் மொத்தம் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது? | 64 படலங்கள் |
0 Comments