TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-17
ஐரோப்பியர்களின் வருகை மற்றும் விரிவாக்கம் (அ.எ. 1-13)
- வாஸ்கோடகாமா வருகை: கள்ளிக்கோட்டையை வந்தடைய வாஸ்கோடகாமாவிற்கு உதவியவர் ஒரு இந்திய மாலுமி.
- பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் வருகை: இவர் 1500-ஆம் ஆண்டு சில வீரர்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
- போர்ச்சுக்கீசிய வர்த்தக மையங்கள்: வாஸ்கோடகாமா 1501-ல் கண்ணனுாரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவிய பின், கள்ளிக்கோட்டை மற்றும் கொச்சினிலும் மையங்களை நிறுவினார்.
- போர்ச்சுக்கீசிய ஆளுநர்: அல்போன்ஸா-டி-அல்புகர்க்கிற்குப் பிறகு போர்ச்சுக்கீசிய ஆளுநராகப் பதவியேற்றவர் நினோ-டி-குன்கா.
- போர்ச்சுக்கீசிய அதிகார வீழ்ச்சி: 17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களிடம் வீழ்ச்சியடைந்த ஐரோப்பிய அதிகாரம் போர்ச்சுக்கீசிய அதிகாரம் ஆகும்.
- டச்சு அதிகார மையம்: ஒரு காலத்தில் டச்சு அதிகார மையத்தின் இருப்பிடமாக விளங்கிய கோட்டை கெல்டிரியா கோட்டை.
- டச்சுக்காரர்கள் கைப்பற்றிய பகுதிகள்: டச்சுக்காரர்கள் கைப்பற்றிய புன்னக்காயல், பரங்கிப்பேட்டை ஆகியவை ஆங்கிலத்தில் PORTO NOVO என அழைக்கப்பட்டன.
- லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு அனுமதி: இங்கிலாந்து இராணி எலிசபெத் இந்த அனுமதி பட்டயத்தை 1600 டிசம்பர் 31 அன்று வழங்கினார்.
- வில்லியம் ஹாக்கின்ஸ்: மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் அவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஜமீன்தாரி உரிமை: சுதாநுதி, காளிகட்டம், கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி 1698-ல் பெற்றது.
- டேனியர் குடியேற்றம்: டேனியர்கள் 1620-ல் குடியேற்றங்களை நிறுவிய தரங்கம்பாடி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
- மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சர்: இவர் கால்பர்ட் ஆவார்.
- பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி ஆளுநர்: ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே 1742-ல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
- நிலவுரிமைத் திட்டங்கள்: நிலையான நில வருவாய் திட்டம், மகல்வாரி திட்டம், இரயத்துவாரி திட்டம் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆங்கில அரசு.
- இரயத்வாரி முறை: தாமஸ் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்ட நில வருவாய் திட்டம் இரயத்வாரி முறை ஆகும்.
- புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளுக்கான வழிகள்: 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் சகாப்தமாக விளங்க நிலவழியாகவும், கடல் வழியாகவும் அமைந்த வழிகள் காரணமாக இருந்தன.
- இந்தியா வருவதற்கான புதிய கடல்வழி: வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல்வழியை கண்டுபிடித்தார்.
- பிளாசிப்போர்: இப் போர் 1757 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
- பக்சார் போரில் ஆங்கிலப் படைத் தளபதி: பக்சார் போரில் ஆங்கிலப் படைக்கு தலைமையேற்றவர் தளபதி ஹெக்டர் மன்றோ.
- பக்சார் போர் முடிவு: பக்சார் போர் 1765-ல் அலகாபாத் உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது.
- முதல் கர்நாடகப் போருக்கான காரணம்: ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவில் முதல் கர்நாடகப் போருக்கு காரணமாக அமைந்தது.
- இரண்டாம் கர்நாடகப் போருக்கான காரணம்: கர்நாடகம் மற்றும் ஐதாரபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனையால் மூண்ட போர் இரண்டாம் கர்நாடகப் போர்.
- மூன்றாம் கர்நாடகப் போருக்கான காரணம்: ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு வழிவகுத்தது.
- முதல் கர்நாடகப் போர் உடன்படிக்கை: முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்த அய்-லா-சப்பேல் உடன்படிக்கை 1748-ல் கையெழுத்தானது.
- இரண்டாம் கர்நாடகப் போர் உடன்படிக்கை: இரண்டாம் கர்நாடகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பாண்டிச்சேரி உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு 1755.
- பாரிஸ் உடன்படிக்கை: இது 1763-ல் கையெழுத்தானது.
- அடையாறு போர்: கர்நாடக நவாப் அன்வர்தீனுக்கும், பிரெஞ்சுப் படைக்கும் இடையே 1746-ல் நடைபெற்ற போர் அடையாறு போர்.
- ஆம்பூர் போர்: இது 1749-ல் நடைபெற்றது.
- ஆற்காட்டுப் போர்: இது 1751-ல் நடைபெற்றது.
- வந்தவாசிப் போரில் வெற்றி: வந்தவாசிப் போரில் லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படை ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படையால் தோற்கடிக்கப்பட்டது.
- முதல் ஆங்கிலேய மைசூர் போர்: இது 1767 - 1769 ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது.
- முதல் ஆங்கிலேய மைசூர் போர்: ஆங்கிலப் படைக்கும் ஹைதராபாத் நிஜாமுக்கும் இடையே நடைபெற்ற மைசூர் போர் முதல் ஆங்கிலேய மைசூர் போர் ஆகும்.
- இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் உடன்படிக்கை: மங்களூர் உடன்படிக்கை இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்குக் காரணமாக இருந்தது.
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்: இது 1790-1792 ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது.
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரில் போரிட்டவர்: ஆங்கிலப் படைக்கு எதிராகப் போரிட்டவர் திப்பு சுல்தான்.
- நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் முடிவு: திப்பு சுல்தானின் மரணத்தோடு முடிவுக்கு வந்த போர் நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்.
- முதல் ஆங்கிலேய மராத்திய போர்: இது 1775 முதல் 1782 வரை நடைபெற்றது.
- ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பின் முதன்மை நிறுவனங்களில் முதலாவது: குடிமைப்பணிகள்.
- வெல்லெஸ்லி பிரபு பதவி ஏற்பு: இவர் 1798-இல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றுக் கொண்டார்.
- வில்லியம் கோட்டையில் கல்லூரி: கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் மொழி, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் பயிற்சி வழங்க கல்லூரி நிறுவப்பட்டது.
- போட்டித்தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது குறைப்பு (1860): 1860-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தால் போட்டித்தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது 22 ஆகக் குறைக்கப்பட்டது.
- ஐ.சி.எஸ் தேர்விற்கான அதிகபட்ச வயது வரம்பு குறைப்பு (1866): 1866-ல் 21 ஆகக் குறைக்கப்பட்டது.
- ஐ.சி.எஸ் தேர்விற்கான அதிகபட்ச வயது வரம்பு குறைப்பு (1876): 1876-ல் 19 ஆகக் குறைக்கப்பட்டது.
- ஐ.சி.எஸ் தேர்வு எழுதிய இந்தியர்கள்: வயது வரம்பு குறைத்தல் மற்றும் லண்டனுக்குச் சென்று தேர்வெழுதுதல் ஆகிய காரணங்களால் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமே ஐ.சி.எஸ் தேர்வு எழுத முடிந்தது.
- ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் (1869): ரமேஷ் சந்திர தத் மற்றும் பிகாரி லால் குப்தா ஆகியோர் 1869- இல் தேர்ச்சி பெற்றனர்.
- சத்தியேந்திரநாத் தாகூர் ஐ.சி.எஸ் தேர்ச்சி: இவர் 1863-இல் தேர்ச்சி பெற்றார்.
- ராயல் கமிஷனில் (1912) ஆங்கிலேயர்கள்: 1912-ல் அமைக்கப்பட்ட ராயல் கமிஷனில் (இஸ்லிங்டன் பிரபு தலைமையில்) நான்கு ஆங்கிலேயர்கள் இடம்பெற்றிருந்தனர்.
- இந்திய ஆட்சிப்பணிக்கு இந்தியர்கள் தேர்வு (1918): இந்திய ஆட்சிப்பணியில் 33 சதவீத இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு 1918-இல் பரிந்துரைத்தனர்.
- லீ பிரபு தலைமையிலான அரச ஆணையம்: இது 1923-இல் ஏற்படுத்தப்பட்டது.
- இந்திய ஆட்சிப்பணி கட்டுப்பாட்டாளர்: இந்திய ஆட்சிப்பணி, காவல்பணி, காடுகள் பணி ஆகியவை இந்தியாவுக்கான அரசு செயலரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என லீ பிரபு பரிந்துரைத்தார்.
- காவல் பணிகளிலிருந்து ஜமீன்தார்களை விடுவித்தவர்: காரன்வாலிஸ்.
- மாவட்ட கண்காணிப்பாளர் பதவி: இப்ப பதவி 1808-இல் நியமிக்கப்பட்டது.
- நீதி வழங்கும் அதிகாரம் (1772): 1772-இல் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்ட பின் நீதி வழங்கும் அதிகாரத்தை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக் கொண்டது.
- குற்றவியல் நீதிமன்றம்: பௌஜ்தாரி அதாலத் என அழைக்கப்பட்ட நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் ஆகும்.
- மதராஸில் உச்சநீதிமன்றம்: இது 1801-இல் நிறுவப்பட்டது.
- பம்பாயில் உச்சநீதிமன்றம்: இது 1823-இல் நிறுவப்பட்டது.
- ஜூரி முறை அறிமுகம்: வில்லியம் பெண்டிங் பிரபு 1832-ல் ஜூரி முறையை வங்காளத்தில் கொண்டு வந்தார்.
- வெல்லெஸ்லி பிரபுவின் மாற்றம்: "இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு" என்பதை "இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என்று மாற்றியவர் வெல்லெஸ்லி பிரபு.
- ஹைதராபாத் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆண்டு: 1798.
- 1857 பெரும் புரட்சிக்கு முக்கிய காரணம்: வாரிசு இழப்புக் கொள்கை.
- வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் ஜெய்த்பூர் இணைப்பு: 1849.
- வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் பகத் இணைப்பு: 1850.
- வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் உதய்ப்பூர் இணைப்பு: 1852.
- இந்தியாவில் ஆங்கிலேயர் வெற்றி பெற காரணம்: இந்திய அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை.
- ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கு அரசப் பட்டயம்: இதை வழங்கியவர் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்.
- சென்னையை நிறுவியவர் மற்றும் கோட்டை: பிரான்சிஸ் டே 1639-ல் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்.
- ஜாப் சார்னாக்கின் கிராமங்கள்: ஜாப் சார்னாக் சுதநூதி, கோவிந்தபூர், காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கிய ஆண்டு 1690-ஆம் ஆண்டு.
- வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆளுநர் நியமனம்: இவர் 1772-ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
- வரி வசூல் பொறுப்பு (வாரன் ஹேஸ்டிங்ஸ் காலம்): வணிக குழு வரி வசூல் செய்யும் பொறுப்பை ஏற்றது.
- 1773 ஒழுங்குமுறை சட்டம்: இச் சட்டம் வணிகக்குழுவின் அரசியல் அமைப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது.
- ஹபிஸ் ரகமத் கான் ஆட்சி: இவர் ரோகில்கண்ட் சிறு அரசின் ஆட்சியாளர்.
- வங்காள நவாப்பின் அன்னையும், பாட்டியும்: இவர்கள் அயோத்தி பேகம்கள் என அழைக்கப்பட்டனர்.
- காரன் வாலிஸ் பிரபு தலைமை ஆளுநர்: வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து 1786-ல் தலைமை ஆளுநராகப் பதவியேற்றவர் காரன் வாலிஸ் பிரபு.
- ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை: இவ்வ உடன்படிக்கை வாயிலாக முடிவுக்கு வந்த போர் மூன்றாம் மைசூர் போர்.
- ரிச்சர்ட் கோலிவெல்லஸ்லி தலைமை ஆளுநர் காலம்: இவர் 1798 முதல் 1805 வரை தலைமை ஆளுநராக இருந்தார்.
- வெல்லஸ்லி பிரபுவின் திட்டம்: பிரிட்டிஷ் இந்தியப் பேரரசில் ஒன்றை உருவாக்க வேண்டும் என வெல்லஸ்லி பிரபு பின்பற்றிய திட்டம் துணைப்படைத் திட்டம்.
- இரண்டாம் மாராத்திய போர்: இது 1803-1805 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.
- மாராத்திய கூட்டினணயை முறியடித்தவர்: ஹேஸ்டிங்ஸ் பிரபு.
- இந்து கல்லூரி (கல்கத்தா): ஆங்கிலம் மற்றும் மேலை நாட்டு அறிவியல் கல்விக்காக 1817-ல் கல்கத்தாவில் பொதுமக்களால் நிறுவப்பட்ட கல்லூரி இந்து கல்லூரி.
- வில்லியம் பெண்டிங் பிரபு ஆளுநர் காலம்: இவர் 1828 முதல் 1835 வரை ஆளுநராக இருந்தார்.
- 1833-ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்: இச் சட்டம் கிழக்கிந்திய வணிகக்குழுவின் அதிகார வரம்பெல்லையை வரையறை செய்தது.
- தக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியவர்: கர்னல் சீலிமேன்.
- ஆங்கில கல்வி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்: வில்லியம் பெண்டிங் பிரபு.
- டல்ஹௌசி ஆட்சிக்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சம்: அவர் நடத்திய நாடு இணைப்பு கொள்கை.
- சதாரா இணைப்பு (வாரிசு இழப்புக் கொள்கை): வாரிசு இழப்புக் கொள்கையை பயன்படுத்தி 1848-ல் சதாரா பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.
- பொதுப்பணித்துறை நவீனமயமாக்கல்: டல்ஹௌசி பிரபு பொதுப்பணித்துறையை நவீனப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு அடித்தளம் அமைத்தார்.
- விஸ்வநாதர் மதுரை நாயக்கர் நியமனம்: இவர் விஜய நகர ஆட்சியாளர்களால் மதுரை நாயக்கராக நியமிக்கப்பட்டார்.
- பாளையங்கள் முறை வளர்ச்சி: பாளையங்கள் என்ற முறை விஜயநகர ஆட்சி விரிவுப்படுத்தப்பட்ட போது வளர்ச்சி பெற்றது.
- தெற்குப் பிரிவு பாளையக்காரர்கள்: தெலுங்கு பாளையக்காரர்கள்.
- மேற்குப்பிரிவு பாளையக்காரர்கள்: மறவர் பாளையக்காரர்கள்.
- பாளையக்காரர்கள் மீது படையெடுப்பு (1755): கானல் ஹெரான் தலைமையிலான படைகளுடன் பாளையக்காரர்கள் மீது 1755-ல் படையெடுத்தவர் மாபெஸ்கான்.
- ஜாக்சனின் சமாதானம்: கட்டபொம்மன் செலுத்திய வரிகளை சரிபார்த்தலுக்குப்பின் ஜாக்சன் சமாதானமடைந்தார்.
- 1801 பிரகடனம்: இது ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது.
- பாளையக்காரர்களின் படைகளில் பிளவுக்கு காரணம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை.
- தூக்கிலிடப்பட்ட கிளர்ச்சியாளர்கள் (1801): ஊமைத்துரை மற்றும் செவத்தையா 1801 நவம்பர் 16ஆம் நாள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
- தீரன் சின்னமலை பிறந்த இடம்: இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பிறந்தார்.
- சின்னமலை கொரில்லா போர் முறையின் வெற்றிப் பகுதிகள்: காவேரி, ஓடாநிலை மற்றும் அரச்சலூர் ஆகிய இடங்களில் ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார்.
- சின்னமலையை காட்டிக்கொடுத்தவர்: அவரது சமையற்காரர் நல்லப்பன்.
- அக்னியூ தலைப்பாகையில் இருந்த சின்னம்: வேலூர் கலகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட அக்னியூ தலைப்பாகையில் சிலுவை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
- வேலூர் கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்களுக்கான தண்டனை: கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின், அவர்களுக்கு 500 முதல் 900 கசையடிகள் தண்டனை அளிக்கப்பட்டது.


0 Comments