கல்வி உளவியல் மற்றும் வளர்ச்சி குறித்த வினாக்கள் - விடைகள்
கற்றல் மற்றும் சிந்தனை முறைகள்
- 101. செயல்முறைகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் கற்றல் எதில் நிகழ்கிறது?
- விடை: இயக்கத்திறன் வழியே கற்றல்.
- 102. பொருள் விளக்கத்திற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுபவை யாவை?
- விடை: மொழிக் குறியீடுகள், நிகழ்த்துக்கலைகள், மற்றும் பார்வையற்றோருக்கான (பிரைல்) எழுத்துகள்.
- 112. கல்வி என்பது எதைக் குறிக்கிறது?
- விடை: வளர்த்தல், வெளிக்கொணர்தல், உள்ளதைச் சிறக்கச் செய்தல், மற்றும் அடங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துதல்.
- 113. கற்றல் பணியின் அடிப்படையில் மாணவர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றனர்?
- விடை: பார்வைத்திறன், செவிப்புலன், தொடு உணர்ச்சி, மற்றும் இயக்கத்திறன் மூலம் கற்போர்.
- 114. ஒரு குழந்தையின் ஆயத்த நிலையைத் தீர்மானிப்பது எது?
- விடை: முதிர்ச்சி மற்றும் பயிற்சி.
- 116. கற்றல் என்பது எத்தகைய நிலை?
- விடை: செயலுறு நிலை.
- 121. கணிதத்தில் தேர்ச்சி குறைவாக இருப்பதற்கான காரணங்கள் யாவை?
- விடை: நாட்டமின்மை, முனைப்பு இன்மை, மற்றும் கணிதம் பற்றிய மனப்பான்மை.
- 122. மனம் எத்தனை நிலைகளில் இயங்குகிறது?
- விடை: மூன்று நிலைகளில்.
- 123. மனம் இயங்கும் நிலைகள் யாவை?
- விடை: சிந்தித்தல், உணர்தல், மற்றும் புறச் செயல்களைத் தூண்டுதல்.
- 128. சிந்தனை என்பது உள்ளத்தின் செயல் என்பதை மறுப்பவர் யார்?
- விடை: J.B. வாட்சன்.
- 131. நடத்தை என்பது தூண்டல் - துலங்கல் இணைப்பே என்று வாதிட்டவர்கள் யார்?
- விடை: நடத்தைக் கோட்பாட்டினர்.
- 132. எதனையும் தனித்தனிப் பாகங்களாகக் கருதாமல் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கோட்பாடு எது?
- விடை: முழுமைக் காட்சிக் கோட்பாடு.
- 133. 'கெஸ்டால்ட்' (Gestalt) என்ற ஜெர்மானியச் சொல்லின் பொருள் என்ன?
- விடை: உருவம் அல்லது வடிவம்.
- 137. மனித நடத்தை எவற்றைக் கொண்டுள்ளது?
- விடை: நனவு அனுபவங்கள் மற்றும் நனவிலி அனுபவங்கள்.
- 164. கற்றல் செயல்பாடுகளில் இடம் பெறுபவை யாவை?
- விடை: மாணவரது புலன்காட்சி, நினைவிருத்தல், சிந்தனை, மற்றும் நுண்ணறிவு.
- 117. உளவியல் (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்?
- விடை: கிரேக்கம்.
- 118. உளவியல் எனும் சொல் எதைக் குறிக்கிறது?
- விடை: உயிர் மற்றும் அறிவியல்.
- 119. ஆரம்பக் காலத்தில் உளவியல் எதை ஆராயும் இயலாகக் கருதப்பட்டது?
- விடை: ஆன்மா.
- 120. உளவியலின் இலக்காக அமைந்திருப்பவை யாவை?
- விடை: மனித நடத்தையை விவரித்தல், விளக்குதல், கட்டுப்படுத்துதல், மாற்றியமைத்தல், மற்றும் முன்கூட்டியே கணித்தல்.
- 124. ஹார்மிக் கொள்கையை விளக்கியவர் யார்?
- விடை: வில்லியம் மக்டூகல்.
- 125. மனம் அறிவுச் சார்ந்தது எனக் கூறும் கோட்பாடு எது?
- விடை: வடிவமைப்புக் கோட்பாடு.
- 126. வடிவமைப்புக் கோட்பாட்டின் கூறுகள் யாவை?
- விடை: புலன் உணர்ச்சி, உணர்வுகள், மற்றும் மனபிம்பங்கள்.
- 127. உளவியலை 'நடத்தையியல்' என்று குறிப்பிட்டவர்கள் யார்?
- விடை: J.B. வாட்சன், டோல் மன், ஹப், கத்தரே, மற்றும் ஸ்கின்னர்.
- 130. உளவியலில் சூழ்நிலைவாதி யார்?
- விடை: J.B. வாட்சன்.
- 129. இயல்பூக்கக் கொள்கையை உருவாக்கியவர் யார்?
- விடை: மக்டூகல்.
- 134. உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவியவர் யார்?
- விடை: சிக்மண்ட் ப்ராய்டு.
- 135. தனிநபர் உளவியலைத் தோற்றுவித்தவர் யார்?
- விடை: ஆட்லர்.
- 136. மனித நேய உளவியலை முதன்மைப்படுத்தியவர்கள் யார்?
- விடை: கார்ல் ரோஜர்ஸ் மற்றும் மாஸ்லோ.
- 153. உளவியலின் முக்கியப் பிரிவுகள் யாவை?
- விடை: பொது, குழந்தை, நெறிபிறழ், உடற்கூறு, ஒப்பீட்டு, சமூக, மற்றும் நடைமுறை உளவியல்.
- 154. பொது உளவியல் பிரிவில் அடங்கியுள்ளவை யாவை?
- விடை: புலன்காட்சி, ஊக்குவித்தல், மனவுணர்ச்சிகள், கற்றல், மற்றும் சிந்தித்தல்.
- 155. நடைமுறை உளவியல் பிரிவில் அடங்கியுள்ளவை யாவை?
- விடை: தொழில் பற்றிய உளவியல், விளம்பரம் பற்றிய உளவியல், மற்றும் கல்வி உளவியல்.
- 156. கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை உளவியல் ரீதியாக ஆராய்ந்து, கற்றலை மேம்படுத்த உதவும் உளவியல் பிரிவு எது?
- விடை: கல்வி உளவியல்.
- 157. கல்வி உளவியல் என்பது கற்றல் - கற்பித்தலை மேம்படுத்துவதே ஆகும் என்று கூறியவர் யார்?
- விடை: சிம்ப்சன்.
- 158. உயர் கற்பித்தல் முறைகள் அனைத்தும் முழுக்க முழுக்க எதன் அடிப்படையானது?
- விடை: உளவியல்.
- 159. கோலஸ்னிக் கருத்துப்படி கல்வி உளவியலின் உட்கூறுகள் யாவை?
- விடை: ஊக்கம், கற்பித்தல் முறைகள், மற்றும் மனநலம்.
- 160. எச்.சி. லிண்ட்கிரேன் கருத்துப்படி கல்வி உளவியலின் முக்கியக் கூறுகள் யாவை?
- விடை: கற்கும் முறைகள், கற்கும் சூழ்நிலைகள், மற்றும் கற்கும் அனுபவங்கள்.
- 161. கல்வி உளவியல் பாடப்பொருளின் பெரும் பகுதி யாரைச் சுற்றி அமைகிறது?
- விடை: கற்பவர்.
- 162. காரிசாணும் அவரது சகாக்களும் கல்வி உளவியலின் உட்பிரிவுகளாகக் குறிப்பிடுவது எவற்றை?
- விடை: குழந்தையும் அதன் வளர்ச்சியும், கற்கும் கற்பிக்கும் முறைகள், மற்றும் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல்.
- 163. வகுப்பறை எந்த வகையான மாணவர்களை உள்ளடக்கியது?
- விடை: மீத்திறமிக்கவர்கள், சராசரியானவர்கள், மற்றும் மெதுவாகக் கற்போர்.
- 165. வகுப்பறைச் சூழல் எனப்படுவது யாவை?
- விடை: ஆசிரியரது மனப்பான்மை மற்றும் வகுப்பறை இடைவினைகள்.
- 144. உளவியல் ஆய்வு முறைகள் யாவை?
- விடை: அகநோக்கு முறை, உற்று நோக்கல் முறை, கள ஆய்வு முறை, பரிசோதனை முறை, மற்றும் தனியாள் ஆய்வு முறை.
- 145. உளவியல் முறைகளில் மிகவும் பண்டைய முறையானது எது?
- விடை: அக நோக்கு முறை.
- 146. உற்று நோக்கல் முறையின் வகைகள் யாவை?
- விடை: பங்கேற்கும்/பங்கேற்கா, இயற்கையான/செயற்கையான, திட்டமிடப்பட்ட/எதேச்சையாக நிகழ்ந்த உற்று நோக்கல்.
- 147. பரிசோதனை முறை என்பது என்ன?
- விடை: கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல்.
- 148. வளர்ச்சி ஆய்வு முறையின் வகைகள் யாவை?
- விடை: நீள் ஆய்வு முறை மற்றும் குறுக்கு ஆய்வு முறை.
- 149. மருத்துவமுறை என உளவியலில் குறிப்பிடப்படுவது எது?
- விடை: தனியாள் ஆய்வு முறை.
- 150. வினா வரிசை முறையை உளவியல் ஆராய்ச்சிக்கு முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
- விடை: பிரான்சிஸ் கால்டன்.
- 151. தனியலகு ஆய்வுமுறை என்றழைக்கப்படுவது எது?
- விடை: தனியாள் ஆய்வு முறை.
- 152. பிராய்டின் உளப்பகுப்பாய்வு எதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது?
- விடை: நெறிபிறழ் உளவியல்.
- 138. வெபர் விதியை உருவாக்கியவர் யார்?
- விடை: E.H. வெபர்.
- 139. 'உள இயற்பியல்' என்ற நூலை எழுதியவர் யார்?
- விடை: G. T. பெச்னர்.
- 140. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் யார்?
- விடை: சர் பிரான்சிஸ் கால்டன்.
- 141. மெஸ்மர் உருவாக்கியது என்ன?
- விடை: மருத்துவ உளவியல் முறைகள்.
- 142. வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை உருவாக்கியவர் யார்?
- விடை: வெஸ்லர்.
- 143. ஸ்கின்னருடன் தொடர்புடைய கற்றல் கோட்பாடு எது?
- விடை: கருவி சார் ஆக்க நிலைநிறுத்தம்.
- 194. சிந்திக்கும் ஆற்றல் எவ்வாறு படிப்படியாக முன்னேற்றமடைகிறது என்பதை தனது கோட்பாட்டின் மூலம் விளக்கியவர் யார்?
- விடை: பியாஜே.
- 198. வளர்ச்சிசார் செயல்கள் (Developmental Tasks) என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?
- விடை: ஹேலிகஸ்ட் (Havighurst).
- 200. ஒரு பொருளைத் தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனமாகும் என்று கூறியவர் யார்?
- விடை: மக்டூகல்.
- 103. இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கற்கும் உரிமையை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது?
- விடை: 1959 நவம்பர் 20.
- 104. ஐ.நா. சபை குழந்தைகளுக்காக உலகளவில் வரையறுத்த உரிமைகள் யாவை?
- விடை: உயிருடன் வாழ்வது, ஆரோக்கியமான உடல், மனவளர்ச்சி பெற, மற்றும் பாதுகாப்புடன் வாழும் உரிமை.
- 105. குழந்தைகள் மீதான ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கை கூறும் உரிமைகள் யாவை?
- விடை: வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்கும் உரிமை, மற்றும் வளர்ச்சி உரிமை.
- 111. குழந்தைகள் உரிமைப் பிரகடனத்தின் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ள முக்கிய உரிமைகள் யாவை?
- விடை: பங்கேற்பதில் உரிமை, தகவல் பெறும் உரிமை, சங்கம் அல்லது குழுமம் சேர்வதற்கான உரிமை.
- 106. தமிழகத்தில் பண்டைய காலத்தில் கல்வி யாருக்கு மறுக்கப்பட்டது?
- விடை: தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.
- 107. இந்திய அரசு 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி அளிக்க வேண்டும் என்பதை எப்பொழுது வலியுறுத்தியது?
- விடை: 1950 ஜனவரி 26.
- 108. 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கொள்கை எந்த ஆண்டு?
- விடை: 1986.
- 109. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற திட்டத்தின் படி எவை செயல்படுத்தப்பட்டன?
- விடை: குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், கல்வியை நிறைவு செய்தல், இடைநிறுத்தமற்ற மற்றும் தேக்கமில்லாத கல்வி முறை.
- 110. எந்த அரசியல் சட்டத்திருத்தத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வியும் சமவாய்ப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது?
- விடை: 93-வது சட்டத்திருத்தம்.
- 115. தேசிய கலைத்திட்டம் கல்வி பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
- விடை: 2005.
- 166. மனிதனது வளர்ச்சியையும், அவனது நடத்தையையும் உறுதி செய்யும் காரணிகளில் முக்கியமானவை யாவை?
- விடை: மரபு நிலை.
- 167. மனித உடலில் மொத்தம் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?
- விடை: 46 (23 ஜோடிகள்).
- 168. எவ்வகை இரட்டையர்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவராயிருப்பர்?
- விடை: ஒரு கரு இரட்டையர்கள்.
- 169. மேதைகள் மேதைகளிடமிருந்து தோன்றுகின்றனர் என யாருடைய ஆய்வு தெரிவிக்கிறது?
- விடை: கால்டன்.
- 170. இளம் குற்றவாளிகளும் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை பற்றியும் ஆய்வு செய்தவர் யார்?
- விடை: ஸிரில் பர்ட்.
- 171. ஒரு குழந்தை வளர்ச்சியடையும் போது எவை அதிகரிக்கின்றது?
- விடை: உயரம், எடை, மற்றும் மொத்த கனபரிமாணம்.
- 174. வளர்ச்சி என்பது எதனைக் குறிக்கும்?
- விடை: ஓர் உயிரின் உருப்பெருக்கம் மற்றும் அளவு அதிகரித்தல்.
- 175. முன்னேற்றத்துடன் தொடர்புடைய கருத்துகள் யாவை?
- விடை: சூழ்நிலையால் தீர்மானிக்கப்படுகிறது, பன்முகம் கொண்டது, மற்றும் சுருள் வடிவில் அமைகிறது.
- 176. வளர்ச்சியுடன் தொடர்புடைய கருத்துகள் யாவை?
- விடை: முன்னேற்றத்தின் உட்கூறு, தனியாள் வேற்றுமைகள் கொண்டது, மற்றும் மரபினால் பெரிதும் தீர்மானிக்கப்படுவது.
- 177. வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர் என்ன?
- விடை: முதிர்ச்சி.
- 185. மனித வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் யாவை?
- விடை: நாளமில்லாச் சுரப்பிகள், உண்ணும் உணவு, சமுதாயப் பண்பாடு, மற்றும் நுண்ணறிவு.
- 186. மனித வளர்ச்சியில் எத்தனை வித முன்னேற்றங்கள் காணப்படுவதாக ஆண்டர்ஸன் குறிப்பிடுகிறார்?
- விடை: ஒன்பது.
- 179. உடலியல் வளர்ச்சி எனப்படுவது எவற்றில் எழும் மாற்றங்கள்?
- விடை: இரத்த ஓட்டப்பகுதி, நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், மற்றும் தசைகளின் தொகுதி.
- 180. புவி ஈர்ப்புக்கு எதிரான போராட்டம் எது?
- விடை: உடலியக்கங்களின் வளர்ச்சி.
- 181. படிப்படியாக சுதந்திரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் செயற்படுதல் வளர்ச்சியின் அறிகுறி எனக் கூறியவர் யார்?
- விடை: ஆண்டர்ஸன்.
- 182. அறிவுத் திறனின் பல்வேறு கூறுகள் யாவை?
- விடை: கற்பனை செய்தல், சிந்தித்தல், ஆராய்ந்தறிதல், புலன் காட்சி, வேறுபடுத்துதல், மற்றும் தொடர்புபடுத்துதல்.
- 172. ஒரு குழந்தையின் சமூக மரபு என்பது எதனைக் குறிக்கின்றது?
- விடை: குழந்தை பிறந்து வளர்ந்த சமூக கலாச்சாரத்தை.
- 173. சமூக மரபை குழந்தை தன்வயமாக்கிக் கொள்ளும் முறைக்கு என்ன பெயர்?
- விடை: சமூக நெறிப்படுத்தல்.
- 183. ஹர்லாக் கருத்துப்படி, சமூக வளர்ச்சி என்பது என்ன?
- விடை: சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல்.
- 184. குழந்தைகளிடம் சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: சமூக நெறிப்படுத்தும் செயல்முறை.
- 178. W.N. கெல்லாக் மற்றும் L.A. கெல்லாக் நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்கு எது?
- விடை: மனித குரங்கு.
- 187. பிறப்புக்கு முந்தை நிலை (Prenatal period) எது?
- விடை: முளை நிலை.
- 188. பிறப்புக்கு முந்தைய நிலையில் பிண்ட நிலையின் (Embryonic stage) காலம் எவ்வளவு?
- விடை: 2 முதல் 8 வாரங்கள்.
- 191. பிறப்புக்குப் பிந்தைய நிலைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
- விடை: நான்கு.
- 192. பிறந்த குழந்தையின் சராசரி உயரம் மற்றும் எடை என்ன?
- விடை: 50 செ.மீ உயரம் மற்றும் 3.25 கி.கி எடை.
- 193. குழவி பருவத்திலேயே முழு வளர்ச்சி நிலையை எட்டுவது எது?
- விடை: மூளை செயல் மையங்கள் முதிர்ச்சி.
- 190. 3 முதல் 6 வயது வரை உள்ள காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: முன் குழந்தைப் பருவம்.
- 189. குமரப்பருவத்தின் காலம் எவ்வளவு?
- விடை: 13 முதல் 15 வயது வரை (நடுக் குமரப் பருவம்).
- 195. குமரப் பருவத்தை சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் யார்?
- விடை: ஸ்டான்லி ஹால்.
- 196. குமரப் பருவத்தின் சிறப்பியல்புகள் யாவை?
- விடை: உடல் வளர்ச்சியில் அதிரடியான மாற்றங்கள், தன்னுணர்வு மிகுதல், மற்றும் சக வயதுத் தோழர்களின் நட்பு.
- 197. குமரப் பருவத்தின் உளவியல் பிரச்சனைகள் யாவை?
- விடை: தன்னைப் பற்றிய குழப்பம், தலைமுறை இடைவெளி, மற்றும் ஒப்பார் குழு ஆதிக்கம்.
- 199. முதிர் பருவத்தில் நடைபெறும் முக்கியச் செயல்கள் யாவை?
- விடை: இல்லறம் நடத்துதல், குழந்தைகளைப் பெற்று வளர்த்தல், மற்றும் ஒரு தொழிலில் ஈடுபடுதல்.


0 Comments